வாழ்வில் ஒரே ஒரு முறை இதை மட்டும் உங்கள் கண்களால் பார்த்து விடுங்கள் போதும். பல தலைமுறை தொடரும் பித்ரு சாபம் விலகி, உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும்.

pasu
- Advertisement -

நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் யார் செய்த பாவமோ என்று நமக்கு தெரியாது. சம்பந்தமே இல்லாமல் நம்முடைய குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும். நம்முடைய குடும்பத்தால் தலை தூக்கவே முடியாது. நம்முடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதை பார்த்து பெற்றவர்களுக்கு ரத்த கண்ணீர் வருவது தான் ஒரு குறை. அந்த அளவுக்கு துன்பங்களையும் துயரங்களையும் கொடுக்கும் இந்த பித்ரு சாபத்திலிருந்து வெளிவர ஆன்மீகத்தில் பல ஆயிரம் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் இன்று நாம் பார்க்கக்கூடிய இரண்டு பரிகாரங்களும் மிக மிக எளிமையானவை. இதை செய்தால் நிச்சயம் உங்கள் குடும்ப கஷ்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும். பித்ரு சாபம் நீங்க ஆன்மீகம் சொல்லும் அந்த எளிய இரண்டு பரிகாரங்கள் என்னென்ன தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பித்ரு சாபம் நீங்க கோ பூஜை:
பெரும்பாலான பெரிய பெரிய சிவன் கோவில்களில் கோசாலை இருக்கும். அங்கு உள்ள பசுக்களுக்கு அதிகாலை வேளையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக கோ பூஜை செய்யக்கூடிய வழக்கம் இருக்கும். அந்த கோ பூஜையில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். கோமாதா தரிசனம் செய்ய வேண்டும். அந்த கோ பூஜையை பார்ப்பவர்களுக்கே பல கோடி புண்ணியம்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் உங்களுக்கு வசதி இருக்கிறது என்றால், அந்த பசு மாட்டிற்கு, அந்த கோசாலைக்கு, பராமரிப்புக்கு தேவையான செலவுகளை செய்யலாம். பசு மாட்டிற்கு தீனி வாங்கி கொடுக்கலாம். இப்படி உங்களால் இயன்ற உதவியை அந்த கோசலைக்கு செய்து அதிகாலை வேலையில் நடக்கும் கோ பூஜையில் கலந்து கொண்டாலே பித்ரு சாபத்திற்கான, பித்ரு தோஷத்திற்கான விமோசனம் கிடைக்கும். படிப்படியாக குடும்பத்தில் இருக்கும் கஷ்டம் குறையும் இது ஒரு வழி. இதை செய்து பாருங்கள். (வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த கோ பூஜையில் நீங்கள் கலந்து கொள்ளலாம்).

பித்ரு சாபம் நீங்க மட்டை தேங்காய் பரிகாரம்:
நம்முடைய இந்து சாஸ்திர படி மட்டை தேங்காய்க்கு பயங்கரமான பவர் இருக்குங்க. மட்டை தேங்காயை தானமாக கொடுத்தாலே பித்ரு சாபம் விலகும் என்று சொல்லி வைத்துள்ளார்கள். அற்புத சக்தி வாய்ந்த இந்த மட்டை தேங்காய் ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசி பரப்பி அதன் மேலே இந்த மட்டை தேங்காயை வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மட்டை தேங்காய்க்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பார்ப்பதற்கு தெய்வீக கடாட்சத்தோடு இந்த தேங்காய் இருக்க வேண்டும் அதை உங்களுடைய முன்னோர்களாக பாவித்து கொள்ளுங்கள். பூஜை அறையில் வெள்ளிக்கிழமை பூஜை செய்வது போல ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சாம்பிராணி தூபம் வாசனையாக புகை வரும் அளவிற்கு நன்றாக போட்டு, அதை வீடு முழுவதும் காண்பித்து வீடு தெய்வீக நறுமணத்தோடு இருக்கும் சமயத்தில், இந்த தேங்காய்க்கு முன்பு அமர்ந்து நீங்கள் மனதார இறந்த பித்ருகளை எல்லாம், முன்னோர்களை எல்லாம் நினைவு கூர்ந்து வழிபாடு செய்து ஒரு மன்னிப்பும் கேட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: நீங்க தொட்டதெல்லாம் துலங்க வெற்றி தரும் வெற்றிலையில் ஓன்றை மட்டும் இப்படி பயன்படுத்துங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

இறுதியாக கற்பூர ஆராதனை காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். மூன்று நாட்கள் கழித்து அந்த  தட்டில் இருக்கும் பச்சரிசி, அந்த தேங்காய் எல்லாவற்றையும் கொண்டு போய் ஒரு பிராமணருக்கு தானமாக கொடுக்கலாம். (இந்த மூன்று நாளும் தினமும் விளக்கேற்றி ஒரு ஊதுபத்தி காண்பித்தால் போதும் அந்த மட்டை தேங்காய்க்கு.) சாஸ்திரப்படி இதை செய்பவர்களுக்கும் பித்ரு சாபம் குறையும். இப்படியாக மேலே சொன்ன இந்த எளிமையான ஆன்மீக குறிப்பில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் செய்து பாருங்கள். நிச்சயமாக நல்லது நடக்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -