நரைமுடி எட்டிப் பார்க்கும்போதே இதை செய்ய தொடங்குங்கள். நரைமுடி அதிகமாக பரவுவது குறைந்து, எல்லா முடியும் சீக்கிரம் கருப்பாகும்.

hair3
- Advertisement -

சில பேருக்கு நரைமுடி வெகு சீக்கிரத்தில் வர தொடங்கிவிடும். அதாவது சிறு வயதிலேயே நரைமுடி எட்டிப் பார்க்கும். ஒரு முடி, இரண்டு முடி என்று நரைமுடியானது வரத் தொடங்கும் போதே இந்த குறிப்பை பின்பற்ற தொடங்கினால், உங்களுக்கு முடி நரைப்பதில் கொஞ்சம் தாமதம் உண்டாகும். சீக்கிரமாக நரைமுடி வராமல் தடுப்பதற்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கும். இந்த குறிப்புக்கு நாம் இயற்கையான பொடியை தான் பயன்படுத்த போகின்றோம். ஆகவே பக்க விளைவுகள் வந்து விடுமோ என்ற பயம் தேவை கிடையாது. சிறிய குழந்தைகளுக்கு நரைமுடி இருந்தால் கூட அவர்களுக்கு இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றி பார்க்கலாம்.

நிறைய நரைமுடி உள்ளவர்கள் இந்த குறிப்பை பின்பற்ற தொடங்கினாலும் ஒரு சில மாதத்தில் உங்களுடைய நரை முடி கொஞ்சம் கொஞ்சமாக கருப்பு நிறத்திற்கு மாறுவதை உங்களால் நிச்சயம் உணர முடியும். ஆனால் இன்று இந்த குறிப்பை பயன்படுத்தினால் நாளை ரிசல்ட் நிச்சயம் தெரியாது. மூன்றில் இருந்து ஐந்து மாதங்கள் காத்து தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

சரி குறிப்பை பார்த்து விடுவோம். இந்த குறிப்புக்கு நமக்கு தேவையானது நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி. இது இரண்டுமே பொடியாக நாட்டு மருந்து கடைகளில் விற்கிறது. கலப்படம் இல்லாத ஆர்கானிக் பொடியாக பார்த்து வாங்கி பயன்படுத்துங்கள். காஃபி போடுற ஃபில்டர் இருந்தா அதை நீங்க இந்த குறிப்புக்கு பயன்படுத்தலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 1/2 ஸ்பூன் கடுக்காய் பொடி, இந்த இரண்டு பொடியையும் முதல்ல போட்டு கலந்து வச்சுக்கோங்க. (கிராம் கணக்கில் பார்த்தால் 10 கிராம் நெல்லிக்காய் பொடி, 15 கிராம் கடுக்காய் பொடி இந்த குறிப்புக்கு நமக்கு தேவைப்படும்.)

100 ml தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். காபிக்கு பில்டர் போடுவது போலவே பில்டரை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பில்டரில் நாம் கலந்து தயார் செய்து வைத்திருக்கும் இந்த பொடியை போட்டு, அதன் மேலே கொதிக்கின்ற தண்ணீரை ஊற்றி ஃபில்டரை மூடி அப்படியே விட்டு விடுங்கள். 15 நிமிடத்திற்குள், பில்டர் ஆகி நமக்கு கீழே கடுக்காய்பொடி,  நெல்லிக்காய் பொடி, தண்ணீர் மட்டும் கிடைத்திருக்கும் அல்லவா. அதை தான் குறிப்புக்காக பயன்படுத்தப் போகின்றோம்.

- Advertisement -

வெதுவெதுப்பாக இருக்கும் இந்த தண்ணீரை ஒரு பஞ்சில் தொட்டு உங்களுடைய ஸ்கேல்பில் படும்படி நன்றாக அப்ளை செய்ய வேண்டும். முடியை பிரித்து பிரித்து வேர்க்கால்களில் படும்படி இந்த தண்ணீரை நன்றாக அப்ளை செய்து விடுங்கள். அதன் பின்பு ஒரு காட்டன் துண்டை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து, அந்த துண்டை தலையில் 20 நிமிடங்கள் கட்டிக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து துண்டை கழட்டி விடலாம்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து உங்களுடைய தலைமுடியை வெறும் தண்ணீரில் அலசிவிடுங்கள். கூடுமானவரை செயற்கையான ஷாம்பு, செயற்கையான கெமிக்கல் கலந்த தேங்காய் எண்ணெய் இவைகளை பயன்படுத்தாமல் குறிப்பை பின்பற்றும் போது உங்களுக்கு ரிசல்ட் கொஞ்சம் சீக்கிரமாக தெரியும்.

உங்களுடைய வீட்டில் பில்டர் இல்லை என்றால், இந்த இரண்டு பொடிகளையும் சுடு தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊறவைத்து, ஒரு காட்டன் துணியின் மூலம் இந்த தண்ணீரை வடிகட்டி, தெளியவிட்டால், தெளிவான தண்ணீர் உங்களுக்கு கிடைத்துவிடும். பின்பு அதை உங்களுடைய தலைக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கருகருன்னு முடி வளர்ச்சிக்கு கடுக்காய் பொடி மிகவும் உதவியாக இருக்கும். உங்களுக்கு விருப்பமிருந்தால் இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க. பக்கவிளைவுகள் ஏற்படாமல் வெள்ளை முடி வருவதை தடுக்க இந்த இந்த குறிப்பு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -