ஒரே ஒரு கடுக்காயை கையில் இப்படி வைத்துக் கொண்டால் போதும். கடுகளவு கஷ்டம் கூட வராது.

amman8
- Advertisement -

பல மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த கடுக்காய்க்கு மகத்துவமும் அதிகமாக உள்ளது. கெட்ட சக்திகளை எதிர்மறை ஆற்றலை நம்மிடம் வர விடாமல், தோல்வியை நம் அருகில் வரவிடாமல், பாதுகாக்கும் ஒரு அபரவிதமான சக்தி இந்த கடுக்காய்க்கு உண்டு. நாட்டு மருந்து கடைகளில் மலிவாக கிடைக்கும் இந்த கடுக்காயை வைத்து தான் இன்றைக்கான பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம் தான். நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள். மிகவும் கஷ்டத்தை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம் கூட சுலபமாக முடிந்துவிடும். கடுகளவு கஷ்டத்தை கூட உங்களிடம் வரவிடாமல் தடுக்க போகும் இந்த கடுக்காய் பரிகாரத்தை தெரிந்து கொள்ள யாருமே தவறாதீர்கள்.

நாட்டு மருந்து கடைகளில் இருக்கும் கடுக்காயை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இக்கட்டான சூழ்நிலை வரும்போது பிரச்சினைகளை சந்திக்கும் போது, என்ன முடிவு எடுப்பது என்று தடுமாறும்போது, முக்கியமான காரியங்களுக்காக வெளியில் போகும் போது, மட்டும் இந்த பரிகாரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

வாங்கி வைத்த கடுக்காயிலிருந்து ஒன்றை மட்டும் உங்களுடைய வலது உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் அமர்ந்து வெறும் இரண்டு நிமிடம் முழு மனதோடு குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். நான் எடுக்கும் இந்த புதிய முயற்சி எனக்கு சாதகமாக முடியவேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு எந்த பிரச்சனை இருக்கிறதோ, அது சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, அந்த 1 கடுக்காயை உங்கள் கையிலே வைத்துக் கொள்ளுங்கள். கையில் என்றால் உங்களுடைய உடம்பில் படும்படி அந்த கடுக்காய் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுடைய ஆடைக்கு உள்பகுதியில் கூட அந்த கடுக்காயை மறைத்து வைத்துக் கொள்ளலாம். யாருக்கும் தெரியாது. ஆண்களாக இருந்தால் பனியனுக்குள் இந்த கடுக்காயை போட்டு வைத்துக் கொள்ளலாம்.

இப்படி வேண்டுதலை வைத்துவிட்டு கையில் கடுக்காயை வைத்துக்கொண்டு, நீங்கள் எந்த முயற்சி செய்தாலும் அது உங்களுக்கு நிச்சயமாக வெற்றியைத் தரும். (அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காமல், ஒரு நல்ல விஷயம் நடக்க, இந்த கடுக்காயை கையில் வைத்துக் கொண்டு எந்த கோரிக்கையை வேண்டினாலும் அது நிச்சயம் நல்லபடியாக நடக்கும்.) ஒருவேளை விதியின் பயனால் நீங்கள் தோல்வியை தழுவினால், அந்த தோல்வியின் மூலமாகவும் உங்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும்.

- Advertisement -

அந்த அளவிற்கு நன்மைகளை கொடுக்கக்கூடிய சக்தி இந்த கடுக்காயில் இருக்கிறது. மீண்டும் நீங்கள் வீட்டிற்கு திரும்பும் போது நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நடந்தாலும், நல்லபடியாக நடக்கவில்லை என்றாலும் உங்களுடன் இருக்கும் கடுக்காயை எடுத்து வீதியில் ஓரமாக போட்டு விடுங்கள். ஏதாவது இக்கட்டான சூழ்நிலை வரும்போது நீங்கள் இந்த பரிகாரத்தை பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கே இந்த கடுக்காயின் மகத்துவம் புரியும்.

வீட்டில் அதிக அளவில் சண்டை சச்சரவு உள்ளது. நன்றாக இருந்த குடும்பத்தில் விரிசல் விழுகிறது. கணவன் மனைவிக்குள் பிரச்சனை. குழந்தைகள் சோர்வாக இருக்காங்க. வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை என்று நீங்கள் யூகித்து விட்டால் உடனடியாக உங்களுடைய வீட்டில் இந்த தூபத்தை போட்டு விடுங்கள். கடுக்காயை வாங்கி நீங்களே பொடி செய்து கொண்டாலும் சரி, அல்லது கடுக்காய் பொடி கடைகளில் இருக்கிறது அதை வாங்கிக் கொண்டாலும் சரி.

அந்த பொடியை வைத்து தூபம் போட வேண்டும். எப்போதும் போல நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் சாம்பிராணி புகையை போடுங்கள். அந்த புகை வரும் போது கொஞ்சமாக அதில் கடுக்காய் பொடியையும் தூவி விடுங்கள். வீட்டிற்கு உள் பக்கத்திலிருந்து வெளிப்பக்கம் வரை இந்த புகையை காட்டி வந்து வீட்டிற்கு வெளியே புகை போட்ட தூபக் காலை வைத்து விட வேண்டும். இந்த வாசம் வீடு முழுவதும் நிரம்பும் பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி பிரச்சனைகள் சீக்கிரம் சரியாகிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -