கடுமையான கண் திருஷ்டியும் நொடியில் நீங்க இந்த காசை இப்படி செய்யுங்கள்! உங்களின் மறைமுக எதிரிகளின் சூழ்ச்சியும் இது முறியடிக்குமாம்!

thirusti-copper-coin
- Advertisement -

‘கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது’ என்பது கண் திருஷ்டியின் மிக முக்கிய பழமொழி ஆகும். இதைப் பலரும் அனுபவ பூர்வமாக நிச்சயமாக ஏதோ ஒரு விதத்தில் உணர்ந்து இருப்பீர்கள்! நன்றாக இருந்த குடும்பத்தில் கண் திருஷ்டி என்கிற ஒன்று வந்தவுடன் சில குழப்பங்களும், இடையூறுகளும் ஏற்படுவதை உணர்ந்து இருப்போம். ஓடியாடிக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென அழுது கொண்டே இருந்தால் அதற்கும் கண் திருஷ்டி காரணம் என்று கூறுவார்கள். இப்படியான கடுமையான கண் திருஷ்டிகளையும் எளிதாக நீக்க செப்பு காசை வைத்து நம் முன்னோர்கள் என்ன செய்வார்கள்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

kan-thirusti

கடுமையான கண் திருஷ்டியை எளிதாக நீக்கக் கூடிய அற்புத சக்தி செப்பு காசுக்கு உண்டு. பழங்காலத்தில் குழந்தைகளிடம் இருக்கும் திருஷ்டிகளை கழிக்க ஒரு மஞ்சள் துணியில் செப்புக் காசு முடிந்து அதனை குழந்தை கையில் கட்டி விடுவார்கள். இப்படி செய்யும் பொழுது எத்தகைய திருஷ்டிகள் இருந்தாலும் ஓடிவிடும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்து வந்தது.

- Advertisement -

செப்புத் தகடுகள், செப்பு காசுகள் போன்றவைகள் திருஷ்டிகளை தன்னுள் கிரகித்து கொள்ளும் தன்மையுடன் இருக்கிறது. எனவே இது போன்ற கடுமையான கண் திருஷ்டிகளைக் அழிப்பதற்கு இதே போல நாமும் மஞ்சள் துணியில் செப்புக்காசு முடிந்து கைகளில் கட்டிக் கொள்ளலாம். உங்கள் பிரச்சனை தீர்ந்ததும் அந்த செப்பு காசினை நீர் நிலைகளை போட்டு விடலாம்.

copper coins

சிலர் கண் திருஷ்டிக்கு ஆகாச கருடன் கிழங்கு வாங்கி கட்டி விடுவார்கள். இந்த கிழங்கை வாங்கி கட்டியவுடன் அது துளிர்க்க ஆரம்பிக்கும். நீர் எதுவும் இல்லாமல் காற்றினை மட்டும் உள்வாங்கி வளரக்கூடிய இந்த ஆகாச கருடன் கிழங்கு எத்தகைய திருஷ்டிகளையும் வீட்டில் இருந்து அகற்றி விடும். உங்கள் வீட்டில் திருஷ்டி இருக்கிறதா? இல்லையா? கெட்ட சக்திகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த கிழங்கை வாங்கி மஞ்சள் நூலில் கட்டித் தொங்கவிடலாம்.

- Advertisement -

திருஷ்டிகள், கெட்ட சக்திகள் எதுவும் இல்லை என்றால் இந்தக் கிழங்கு துளிர்விட ஆரம்பிக்கும். அப்படி ஏதாவது இருந்தால் துளிர்க்காமல் காய்ந்து விடும். இதை வைத்தே நம் வீட்டில் திருஷ்டி இருக்கிறதா? இல்லையா? என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று தூபத்துடன் வெண்கடுகு போட்டு பொரிய விட்டால் கெட்ட சக்திகள், கெட்ட திருஷ்டிகள், துர் தேவதைகள் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

venkadugu

அது மட்டுமல்லாமல் வெண்கடுகினை வீட்டில் எல்லா மூலைகளிலும், எல்லா திசைகளிலும் போட்டு வைத்தால் எத்தகைய கெட்ட சக்தியும், வீட்டை நெருங்காது. வாரம் ஒரு முறை அதனை அகற்றி விடலாம். கல் உப்பை அகல் விளக்கில் வைத்து நிலை வாசலில் இருபுறமும் வைத்து விட்டாலும் எத்தகைய கெட்ட சக்திகளும், தீய தேவதைகளும் நம் வீட்டை நெருங்காது. மேலும் திருஷ்டிகள் அனைத்தும் வெளியேறிவிடும். இப்படி கண் திருஷ்டிகள் நீங்க பல வழிமுறைகள் இருந்தாலும் எலுமிச்சை பழத்திற்கு ஈடு இணை ஆகாது. நல்ல சக்தி, கெட்ட சக்தி இரண்டையும் கிரகிக்கும் எலுமிச்சை பழத்தை வாரம் ஒரு முறை குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கிழக்கு நோக்கி அமர செய்து திருஷ்டி கழித்து போடலாம்.

- Advertisement -