காகம் தலையில் கொத்துவது உங்களுக்கு வரப்போகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா? இதனை உடனே சரி செய்ய இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்

crow
- Advertisement -

ஆடி மாதம் போன்ற நேரங்களில் வீட்டிற்கு அருகே இருக்கும் மரங்களில் காகம் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும். இதுபோன்ற நேரங்களில் அந்த வழியாக செல்லும் அனைவரையும் காகம் தலையில் கொட்டி விடும். தனது கூட்டில் இருக்கும் தன் குழந்தைக்கு ஏதும் தீங்கிழைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் இந்த காகம் இவ்வாறு தலையில் கொத்துகிறது. ஆனால் மற்ற நேரங்களில் காகம் மனிதர்களின் நடமாட்டம கண்ட உடனே பறந்து சென்று விடும். அப்படி பயந்த சுபாவம் உடைய காகம் தனது குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது என்று அச்சத்தில் தான் மற்றவர்களை கொட்டுகிறது. ஆனால் ஒரு சில சமயம் இவ்வாறான காரணம் எதுவும் இல்லாமலேயே காகம் குறிப்பாக ஒரு சிலரை கொட்டிக்கொண்டே இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்றும், அதனை சரிசெய்வதற்கான பரிகாரத்தை பற்றியும் தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்

அமாவாசை வரப்போகின்ற நேரங்களில் ஒரு சில வீடுகளில் காகம் தொடர்ந்து அவர்களின் வீட்டு வாசலில் வந்து கேட்டுக்கொண்டே இருக்கும். அல்லது அந்த வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நபரை தங்களுடைய தலையில் கொட்டிக்கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அவர்களின் பித்ருக்கள் அவர்களிடம் எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று அர்த்தமாகும். இதனை பித்ரு தோஷம் என்றும் சொல்லலாம். இவ்வாறு காரணமில்லாமல் காகம் தலையில் கொத்தினால் பித்ரு தோஷம் இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அல்லது அவர்களின் குடும்பத்தை தரிதிரம் நிறைந்திருந்தாலும் காகம் இவ்வாறு தலையில் கொட்டி விடும். அதுவும் இல்லை என்றால் உங்களுக்கு வேண்டாத எதிரிகள் உங்களை பாதிக்கும் வகையில் ஏதாவது தீய வினைகளைச் செய்து வைத்திருந்தாலும் இவ்வாறு காகம் தலையில் கொட்டிக் கொண்டே இருக்கும்.

வேலைக்குப் போகும் வழியில் காகம் தலையில் கொட்டி விட்டால் நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்று விட்டு சிறிதளவு தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு உள்ளே நுழைந்து விடுங்கள். ஆனால் திரும்பி வீட்டிற்கு வந்ததும் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு, சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், சிறிதளவு பச்சை கற்பூரம் இவை மூன்றையும் சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த முறையில் குளித்துவிட்டு, மூன்றாம் நாள் எள் கலந்த சாதத்தை செய்து, காக்கைக்கு சிறிதளவு வைத்துவிட்டு, மீதமிருக்கும் சாதத்தை சிலருக்கு தானமாக கொடுத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு இருக்கும் தோஷம் நிவர்த்தியாகும். தரித்திரம் விலகும்.

அது மட்டுமல்லாமல் உங்களுடைய எதிரிகள் உங்களுக்கு செய்யும் தீய வினைகள் உங்களை பாதிக்காமல் தடுத்து விடும். எனவே இவ்வாறு செய்வது உங்களுக்கு வரப்போகும் தீய வினைகளைத் எடுத்துக்கூறுகிறது. உங்களுக்கு நன்மை அளிக்கவே இவ்வாறு உங்கள் தலையில் கொட்டி விடுகிறது. நீங்கள் மறந்த சில காரியங்களை நினைவூட்டவும் இவ்வாறு செய்கிறது.

- Advertisement -