நீங்க தொட்டதெல்லாம் துலங்கி கைராசிகாரராய் மாற கல் உப்பை வைத்து வாரத்தில் ஒரு நாள் மட்டும் இதை செய்தால் போதும் உங்கள் கைகளில் மஹாலஷ்மி தாயாரே குடி கொண்டு நீங்கள் கைராசிகராய் மாறி விடுவீர்கள்.

- Advertisement -

ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் பொழுது அனைவரும் கைராசி மிகுந்தவர் யாரோ அவரின் கைகளால் ஆரம்பிக்க வேண்டும் என்று தான் நாம் நினைப்போம். அப்படிப்பட்டவர்கள் அந்த காரியத்தை ஆரம்பித்தால் அதில் எந்தவித தடைகளும் இன்றி அந்த காரியம் நடைபெறும். இந்த பதிவில் அந்த கைராசியை எப்படி ஏற்படுத்துவது என்று தான் பார்க்கப் போகிறோம். நம் கைகளில் முப்பெரும் தேவிகளும் வாசம் புரிகிறார்கள் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆதலால் தான் நாம் தூங்கி கண்விழித்த உடன் நம் உள்ளங்கைகளை பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அற்புதம் வாய்ந்ததாக நம் கைகள் திகழ்கின்றன. மேலும் அறிவியல் ரீதியாக நம் கைகள் எந்த அளவுக்கு தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சிலருக்கு ஆரம்பத்தில் கைராசி இருந்திருக்கும். ஆனால் காலம் செல்ல செல்ல அவர்களுடைய கைராசியானது குறைய ஆரம்பித்து இருக்கும். இதற்கு காரணம் அந்த கையில் இருக்கக்கூடிய மகாலட்சுமியின் அம்சம் குறைய ஆரம்பிப்பதே ஆகும். கைகள் சுத்தமில்லாமல் இருப்பதையே இதற்கான காரணம் என்று கூறுகிறார்கள். கைராசியை மேலும் அதிகரிக்க நமக்கு தேவையான பொருட்களாக கல் உப்பும், பச்சை கற்பூரமும் திகழ்கிறது. உள்ளங்கை மகாலட்சுமியின் அம்சமாக கருதுவதைப் போலவே கல் உப்பையும், பச்சை கற்பூரத்தையும் மகாலட்சுமியின் அம்சமாகவே நாம் கருதுகிறோம். இந்த பரிகாரத்தை நாம் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டும்.

- Advertisement -

கைகளை நன்றாக சுத்தமாக கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கிழக்கு முகமாக அமர்ந்து வலது கையில் கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த கல் உப்பின் மேல் சிறிது பச்சை கற்பூரத்தை வைத்து இரண்டு கைகளிலும் சமமாக இருக்கும் அளவு சமன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு முன்பாக ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கையில் கல் உப்பை ஐந்து நிமிடம் ஆவது நாம் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய வேண்டுதலை நாம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பிறகு யாராவது ஒருவரின் துணையுடன் அந்த பச்சை கற்பூரத்தை ஏற்ற வேண்டும். பச்சைக் கற்பூரம் எரிந்து முடிந்த பிறகு, நம் முன்பாக இருக்கும் தண்ணீரில் இந்த கல் உப்பை போட்டு விட வேண்டும். கல் உப்பு தண்ணீரில் கரைந்த பிறகு அந்த தண்ணீரை யார் காலும் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.

- Advertisement -

இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் கல் உப்பையும், பச்சை கற்பூரத்தையும் வேற யாரும் தொடக் கூடாது. நாமே தான் கல்லுப்பை எடுக்க வேண்டும் அதன் மீது பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை முடித்த பிறகு கண்டிப்பாக குளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அரசாங்க வேலைக்காக முயற்சி செய்பவர்கள் வாழ்வில் ஒரே ஒரு முறை இதை செய்தால் போதும் நீங்கள் எதிர்பார்த்த வேலை நிச்சயம் உங்களை தேடி வரும்.

இவ்வாறு நம்மால் இயன்ற அளவு தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் கைகளில் ஏற்பட்டிருக்கும் தோஷத்தால் நம் அதிர்ஷ்டம் குறைந்து இருந்தால், அந்த தோஷங்கள் விலகி அதிர்ஷ்டம் அதிகரிக்கும். கல் உப்பை சிறிது நேரம் நம் கைகளில் வைத்திருப்பது மூலம் நம் உடம்பில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் கல் உப்பு உத்தரகித்துக் கொள்கிறது. ஆதலால் நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் மட்டுமே இருக்கும். இந்த எளிய பரிகாரத்தை செய்து கைராசி மிக்கவர்களாக மாறி வாழ்க்கையில் செல்வ செழிப்புடன், நினைத்தது அனைத்தும் நடந்து, ஆனந்தமாக வாழலாம்.

- Advertisement -