கல் உப்புடன் இந்த பொருளை சேர்த்து வைத்தால், பண பிரச்சனை, பல மயில் தூரம் பறந்தோடும்.

uppu
- Advertisement -

பணப் பிரச்சனையை வெகு தூரம் துரத்தி அடிக்க ஒரு சின்ன தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று பார்க்கப் போகின்றோம். எல்லோருக்கும் தான் பண பிரச்சினை இருக்கிறது. ஆகவே வரக்கூடிய பண பிரச்சனையை கண்டு யாரும் கஷ்டப்பட வேண்டாம். அடுத்த மாத செலவுக்கு என்ன செய்வது, அடுத்த வருட செலவுக்கு என்ன செய்வது என்று யோசிக்காதீங்க. இன்னைக்கான செலவை சமாளிக்க என்ன வழி, வருமானத்தை தேட என்ன வழி, என்று ஓடிக்கொண்டே இருங்கள். நிச்சயமாக உங்கள் தேவைக்கு ஏற்ற பணத்தை அந்த கடவுள் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

இது எல்லாவற்றையும் விட வந்த பணத்தை செலவு செய்யும் போது கஷ்டத்தோடு செலவு பண்ணாதீங்க. மனக்கவலையோடு கஷ்டத்தோடு செய்யக்கூடிய எந்த நல்ல காரியமும் திரும்பவும் நம்மிடம் வராது. அதே போல தான் பணமும். சந்தோஷமாக செலவு செய்யும் போது செலவான பணம் கூட, மீண்டும் ஒரு சில நாட்களிலேயே நம் கைக்கு வந்துவிடும். இந்த ட்ரிக்க ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

சரி இப்போது பரிகாரத்திற்கு வந்து விடுவோம். கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம். பல பரிகாரங்களை செய்வதற்கு இந்த கல்லுப்பை பயன்படுத்துகிறார்கள். இதே கல்லுப்பை தான் பணம் பிரச்சனை தீர்வதற்கு நாம் பயன்படுத்த போகின்றோம். புதியதாக பாக்கெட்டில் இருக்கும் கல் உப்பை எடுத்து பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள்.

ஒரு வெள்ளை நிறத்தில் இருக்கும் பட்டு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பட்டு துணியில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, 3 ஏலக்காய்கள் இரண்டையும் ஒன்றாக வைத்து முடிச்சு போட்டு வீட்டின் ஈசானிய மூலையில் வைக்க வேண்டும். அதாவது வீட்டின் வடகிழக்கு மூலையில் இந்த முடிச்சை வைத்து விட வேண்டும். (முடிச்சை தயார் செய்யும் போது மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் மனமுருக வேண்ட வேண்டும்.)

- Advertisement -

தினமும் சாமி கும்பிடும் போது குலதெய்வத்தை நினைத்து ஊதுவத்தி ஏத்துவீர்கள் அல்லவா. அதை கொண்டு வந்து இந்த முடிச்சுக்கும் காண்பியுங்கள் போதும். வடகிழக்கு மூலையெல்லாம் எங்களுக்கு தெரியாது என்றால் இந்த முடிச்சை எடுத்து பத்திரமாக பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

அவ்வளவு தான். வேலை முடிந்தது. ஆனால் பீரோவுக்குள் இருக்கும் முடிச்சுக்கு ஊதுவத்தி தினமும் காண்பிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. ஏனென்றால் பீரோவுக்குள் இருக்கும் துணியில் நெருப்புப்பட்டுவிடும். ஆகவே அதை செய்யாதீங்க. இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து ஏழு மணிக்குள் செய்யலாம். (கல்லுப்பு என்பது மகாலட்சுமியையும், ஏலக்காய் பெருமாளையும் குறிக்கிறது. இருவரையும் ஒரு சேர மகிழ்ச்சியோடு வைக்கும்போது நம் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்.)

பரிகாரத்திற்கு பலன் இரட்டிப்பு மடங்காக உடனடியாக கிடைக்கும். வீட்டில் இருக்கக்கூடிய பண பிரச்சனைகள் சரியாகும். புதியதாக பலவிதமான பண பிரச்சனைகள் வராது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை முடிச்சிக்கு உள்ளே இருக்கும் பழைய பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, புதிய பொருட்களை வைத்துக் கொள்ளலாம். இந்த எளிமையான தாந்திரீக பரிகாரம் உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -