பணக்கஷ்டம் தீர கல் உப்பு பரிகாரம்

kal-uppu
- Advertisement -

தெய்வங்களுக்கே உரிய மாதம் இந்த மார்கழி மாதம். அந்த தேவர்கள் இந்த பூமிக்கு வருகை தரக்கூடிய மாதம் இந்த மார்கழி மாதம். விஷ்ணு பகவானும் மகாலட்சுமி தேவையும் நமக்கு அருள் ஆசியை கொடுக்கக்கூடிய மாதம் இந்த மார்கழி மாதம். அந்த ஈசனின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும் மாதம் இந்த மார்கழி மாதம். ஹனுமன் ஜெயந்தி ஆனது இந்த மாதத்தில் வரவிருக்கின்றது.

ஆகவே ஒட்டுமொத்த இறை அருளையும் பெற்றிருக்கும் இந்த மார்கழி மாதத்தில் நாம் செய்யக்கூடிய சில பரிகாரங்கள் நமக்கு பல மடங்கு பலனை கொடுக்கும். அந்த வகையில் இது மார்கழி மாதத்தின் கடைசி வாரம். இந்த நாட்களை யாரும் தவற விட்டுராதீங்க. இதுவரை மார்கழி மாதத்தில் விளக்கு ஏற்றி பூஜை செய்ய முடியவில்லை என்பவர்கள் கூட, கடைசி இந்த ஒரு வார்த்தை பூஜை புனஸ்காரங்கள் செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நிச்சயம் குடும்பத்தில் நல்லது நடக்கும். சரி, இப்போது இந்த கடைசி ஒரு வாரம் இருக்கக்கூடிய மார்கழி மாத நாட்களில் பணக்கஷ்டம் தீர செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் ஒரே ஒரு பொருள் தான். அது என்ன பொருள். அந்த பொருளை எந்த நேரத்தில் எப்படி கல்லுப்பு ஜாடையில் வைக்க வேண்டும் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

பணக்கஷ்டம் தீர மார்கழி முடிவதற்குள் செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான வசிய பொருள் ஜாதிக்காய். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் இது கிடைக்கும். முழுசாக இருக்கும் ஒரே ஒரு ஜாதிக்காயை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த மார்கழி மாதம் இன்னும் 1 வாரம் இருக்கின்றது. இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் ஏதாவது ஒரு கிழமையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பரிகாரத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டும்.

- Advertisement -

அதிகாலை 5.30 மணிக்கு முன்பாகவே இந்த பரிகாரத்தை செய்து முடித்து விட வேண்டும். அதற்கு நீங்கள் அதிகாலை வேலை 4.00 மணிக்கு எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, வாசல் தெளித்து கோலம் போட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வீட்டை மகாலட்சுமி கடாட்சத்துடன் தயார் செய்து கொள்ளுங்கள். வாங்கி வைத்திருக்கும் ஜாதிக்காயை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு மகாலட்சுமி பாதங்களில் வைத்துவிட்டு மனம் உருகி பிரார்த்தனை செஞ்சுக்கோங்க.

வீட்டில் இருக்கும் கடன் சுமை குறையணும். செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து பூஜை முடிந்தவுடன் இந்த ஜாதிக்காயை வீட்டில் இருக்கும் குடும்ப தலைவியின் கையால் எடுத்துக்கொண்டு போய் கல்லுப்பு ஜாடியில் புதைத்து வைத்து விட வேண்டும். கல் உப்புக்குள் இந்த ஜாதிக்காய் முழுசாக மறைந்து விட வேண்டும்.

- Advertisement -

வெளியில் தெரியக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. உப்பு காலியாக அதன் மேலேயே புது உப்பை கொட்டி நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஜாதிக்காய், உப்பில் இருக்கும் போது உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் வராது. பண வசியம் ஏற்படும். மகாலட்சுமி வசியம் ஏற்படும் என்பது தாந்த்ரீகத்தில் ஒரு நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. எளிமையான பரிகாரம் தான்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு

ஜாதிக்காய் கெட்டுப் போகக்கூடிய பொருள் அல்ல. ஆறு மாதத்திற்கு ஒரு முறை பழைய ஜாதிக்காயை எடுத்து மீண்டும் புதுசு வைக்கலாம். உங்களுக்கு இந்த பரிகாரத்தை செய்ததால் மன நிறைவு இருக்கிறது, பணம் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது என்றால் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -