கடன் தீர செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு

sivan2
- Advertisement -

நாளை 9-1-2024 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையோடு பிரதோஷ நாள் சேர்ந்து வரவிருக்கின்றது. ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வரிசையில் செவ்வாய் கிழமை, செவ்வாய் பகவானுக்கு உரிய நாள். நவகிரகங்களில் செவ்வாய் பகவானால் தான் நம்முடைய வாழ்க்கையில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வருகிறது.

கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர, வருமானம் அதிகரிக்க, நல்ல வேலை கிடைக்க, செல்வ வளம் அதிகரிக்க, இந்த செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷ நாளில் சிவபெருமானை எப்படி வழிபாடு செய்வது, எந்த பொருளை சிவபெருமானுக்கு வாங்கி கொடுத்தால் பணப் பிரச்சனையிலிருந்தும், கடன் சுமையிலிருந்து வெளிவர முடியும் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டு முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு

நாளைய தினம் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலை வேலையிலேயே எழுந்து குடித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி விரதம் எடுங்கள். சாப்பிடாமல் விரதம் இருக்க முடியாது என்பவர்கள், சாதாரணமாக மந்திரத்தை சொல்லி இந்த நாளை தொடங்குங்கள். வழக்கம் போல சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இன்று மாலை சிவன் கோவில்களில் சிறப்பான அபிஷேகங்கள் ஆராதனைகள் பிரதோஷ நேரத்தில் நடக்கும் அல்லவா. அந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

நல்ல வேலை கிடைக்க வேண்டும். வருமானம் பல மடங்கு அதிகரிக்க வேண்டும். கடன் சுமையிலிருந்து எப்படியாவது வெளிவந்து விட வேண்டும் ஈஸ்வரா என்று மனதை ஒருநிலைப்படுத்தி பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வேண்டி வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு உங்கள் கையால் ஒரே ஒரு இளநீர் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்தாலும், உங்கள் மனசுக்கு பிடித்த நல்ல வேலையை சீக்கிரமே அந்த சிவபெருமான் உங்களுக்கு கொடுத்து விடுவார்.

- Advertisement -

பண பிரச்சனை தீர வேண்டும் என்பவர்கள் செண்பகப் பூவை இன்று சிவபெருமானுக்கு உங்கள் கையால் வாங்கி கொடுக்க வேண்டும். 5 செண்பகப்பூ, 7 செண்பகப் பூ, அல்லது 11 அல்லது அதற்கு மேல் வாங்கினாலும் தவறு கிடையாது. அதை வாங்கி அழகாக ஒரு நூலில் கட்டி, சிவபெருமானுக்கு உங்க கையால் கொண்டு போய் கொடுத்து பாருங்க.

அதுவும் இந்த செவ்வாய்க்கிழமை, இந்த செண்பகப் பூவை சிவபெருமானுக்கு கொடுப்பது அபரிவிதமான பலனை கொடுக்கும். இதேபோல முடியும் என்பவர்கள் தொடர்ந்து 11 வாரம் செவ்வாய்க்கிழமை செண்பகப் பூவை கட்டிக்கொண்டு போய் சிவபெருமானுக்கு கொடுத்தீர்கள் என்றால், உங்கள் வாழ்நாளில் பணக்கஷ்டமே வராது.

- Advertisement -

வாழ்க்கையில் உங்களை அட்டை போல ஒட்டி இருக்கும் பணக்கஷ்டம் காணாமலே போய்விடும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த வழிபாட்டு முறை இது. சிவபெருமானுக்கு இந்த செண்பகப்பூ என்றால் அவ்வளவு பிடிக்கும். இந்த செண்பக பூ உங்களுக்கு எளிதாக கிடைக்காது என்றால், பூக்கடைக்காரரிடம் இன்றே சொல்லி வைத்து விடுங்கள். நாளை மாலைக்குள் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: ராகு கேது உச்சம் தொடும் ராசிகள்

செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த பிரதோஷ நாளில், இந்த ஒரு வழிபாட்டு முறையை செய்து தான் பாருங்களேன். பணக்கஷ்டம் தீர எவ்வளவோ கஷ்டப்படுகின்றோம். இது ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த வழிபாடு தான். இதை நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு அந்த ஈசன் நிச்சயம் நல்வழியை காட்டிக் கொடுப்பான்.

- Advertisement -