இழந்த சொத்து, பொன், பொருள், பணம், நகை அத்தனையும் மீட்டெடுக்க, கொடுத்த பணம் திரும்பி வர, கால பைரவரை நினைத்து இந்த தீபத்தை ஏற்றினாலே போதும்.

kala-bairavar-vilakku
- Advertisement -

கெட்ட நேரம் காரணமாக சில பேர் தங்களுடைய வாழ்க்கையை இழந்து, உடைமைகளை இழந்து, நடுத்தெருவில் நிற்க கூடிய சூழ்நிலைக்கு கூட வந்திருப்பார்கள். ஒருகாலத்தில் பெயர் புகழ் அந்தஸ்து சொத்து என்று ஓஹோவென வாழ்ந்த குடும்பம் ஒன்றுமே இல்லாமல், கையில் இருந்ததை எல்லாம் இழந்து விட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய இழந்த உடைமைகளை எல்லாம் சொத்துக்களையெல்லாம் மீட்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நிறையபேர் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கொடுத்த நகை பணம் திருப்பி வருவதற்காகவும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

காலத்தால் நமக்கு வந்த கஷ்டத்தை தீர்க்க கூடிய சக்தி, இந்த காலபைரவருக்கு உண்டு. காலபைரவர் சன்னதி இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்ல வேண்டும். 6 வெற்றிலைகளை வரிசையாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த 6 வெற்றிலையின் மேல் கொஞ்சமாக மஞ்சள் வைக்க வேண்டும். அந்த மஞ்சளின் மேல் ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவேண்டும். இந்த 6 வெற்றிலை தீபத்திற்கு முன்பாகவும் 6 தாமரை பூக்களை வைத்து விட வேண்டும். இப்படி தீபம் ஏற்றி வைத்துவிட்டு காலபைரவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். (6 வெற்றிலையின் மேல் 6 மண் அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையின் மேலும் ஒவ்வொரு தீபம்.)

- Advertisement -

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். சனிக்கிழமை காலை அல்லது மாலை நேரத்தில் உங்களுக்கு எப்போது சௌகரியமாக உள்ளதோ அப்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். பரிகாரத்தை ஒரே ஒரு வாரம் மட்டும் செய்துவிட்டு பலனை எதிர்பார்ப்பது தவறு. நம்பிக்கையோடு தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். குறைந்தது 11 சனிக்கிழமைகளாவது இந்த தீபத்தை ஏற்றி உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு காலபைரவரின் பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் கடனாக கொடுத்து வராத பணமாக இருந்தாலும் அந்த பணம் நிச்சயம் உங்கள் கைக்கு வந்து சேரும். நீண்ட நாட்களாக கோர்ட் கேஸ் வழக்குகளில் உங்களுக்கு வரவேண்டிய சொத்து வரமுடியாமல் இழுபறியாக இருந்தாலும் அந்த வழக்கு கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வேறு ஏதாவது காரணத்துக்காக உங்களுடைய உடைமைகளை நீங்கள் எழுந்து இருந்தாலும் நிச்சயமாக அது உங்கள் கைக்கு வந்து சேரும்.

- Advertisement -

அடுத்தவர்களுடைய சொத்துக்கு ஆசைப்பட்டு பரிகாரத்தை செய்தால் அதில் பலன் இருக்காது. நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய சொத்து, நகை பணத்திற்காக மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

காலம் நமக்கு கொடுக்கக்கூடிய கஷ்டத்தை தீர்த்து வைக்கக்கூடிய காலபைரவரை நம்பி இந்த பரிகாரத்தை செய்பவர்களை நிச்சயமாக அந்த எம்பெருமான் கை விடமாட்டார். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -