கலியுகத்தில் கால சக்கரத்தை மாற்றி அமைக்கக்கூடிய கால பைரவரை இப்படி வழிபட்டால் காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் அனைத்தும் தீருமாம் தெரியுமா?

kala-bairavar-vilakku
- Advertisement -

சிவ ஸ்வரூபமாக கருதப்படும் பைரவ மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக போற்றப்படுகிறார். கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக விளங்கக்கூடிய இந்த கால பைரவர் கடன் பிரச்சனைகள், பகைவர் தொல்லைகள், காலத்தால் தீர்க்க முடியாத எத்தகைய பிரச்சனைகளையும் தீர்த்து சுபீட்சத்தை கொடுக்கக்கூடிய நல்லதொரு அருளை புரியக்கூடியவர். இவரை எப்படி வழிபட்டால் நற்பலன்கள் பெறலாம்? என்கிற பலரும் அறியா ஆன்மீக தகவலைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எந்த ஒரு விஷயத்திற்கும் அருமருந்தாக இருப்பது காலம்! ஆனால் காலத்தாலும் தீர்க்க முடியாத பிரச்சனையை கால பைரவர் தீர்த்து வைப்பார் என்பது நியதி! 64 வடிவங்களை கொண்டுள்ள பைரவர் வடிவங்களில் கால பைரவர் மிகவும் பிரசித்தி பெற்றது. நாயை வாகனமாக கொண்டுள்ள இவரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பதே வராதாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த காலபைரவர் விபூதி ஒன்றே நம் வீட்டை காக்கும் பொருளாகும். காலபைரவர் கோவிலுக்கு சென்றால் அங்கு கொடுக்கும் விபூதியை வாங்கி வந்து பூஜை அறையில் வையுங்கள், இதனால் துர்ஷக்திகள் வீட்டிற்குள் நுழைய முடியாது.

- Advertisement -

பைரவ மூர்த்திக்கு மிகவும் பிடித்த பூக்களை மாலையாக தொடுத்து அல்லது அர்சித்து வழிபட்டு வருபவர்களுக்கு தீராத கடன்களும் தீர்வதாக ஐதீகம் உண்டு. கால பைரவர் சந்நிதிக்கு சென்று அங்குள்ள பைரவருக்கு இந்த பூக்களால் மாலைகள் தொடுத்து அணிவித்து வழிபடுங்கள். அவருக்கு மிகவும் பிடித்தது சிவப்பு நிற மலர்கள்! எனவே சிவப்பு நிற மலர் எதுவாயினும் அதை சாற்றலாம். குறிப்பாக செவ்வரளி மலர் சாற்றி வழிபட்டு வந்தால் கடன்கள் தீரும். செவ்வரளி மட்டுமல்ல, பொன்னரலி, செவ்வந்தி, தாமரை பூ மாலை, வில்வமாலை, தும்பை பூ மாலை, சந்தன மாலை போன்றவற்றையும் பைரவருக்கு அணிவிக்கலாம். மல்லிகை மலரை தவிர மற்ற பூக்களை பைரவருக்கு அணிவிக்கலாம்.

திங்கட் கிழமையில் மற்றும் சனிக்கிழமையில் பைரவருக்கு சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், உளுந்த வடை, அவல் பாயாசம், வெல்ல பாயாசம் போன்றவற்றை படைத்து வழிபடலாம். மேலும் பைரவருக்கு சம்பா அரிசி சாதம், பால், பழங்கள், செவ்வாழை, தேன், நெய்யால் சுட்ட உழுந்த வடை ரொம்ப பிடித்தமான நைய்வேத்திய பொருட்கள் ஆகும், எனவே இவற்றில் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை பைரவருக்கு அன்போடு படைத்து வழிபட்டு வந்தால் உங்களை சுற்றி இருக்கும் பகைவர்கள் ஒழிந்து நாசமாகி போவர். இதனால் தொழிலில் நல்லதொரு முன்னேற்றம் அடைந்து வருமானம் பெருக துவங்கும்.

- Advertisement -

பைரவருக்கு சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது போல, மிளகு மூட்டை கட்டி தீபம் ஏற்றி வழிபட்டு வருபவர்களுக்கு தீராத எல்லா பிரச்சனையும் தீரும், செல்வ வளம் பெருகும். பணத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இது போல மிளகு தீபம் கட்டி வழிபடலாம். மிளகு தீபம் ஏற்றுபவர்கள் நல்லெண்ணெய் ஊற்றி மண் அகல் விளக்கில் தான் ஏற்ற வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் தேங்காயை இரண்டாக உடைத்து நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அதே போல பைரவருக்கு பூசணிக்காயை இரண்டாக வெட்டி அதிலும் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடலாம்.

மேலும் நீண்ட நாள் ரோகம் உடையவர்கள் அதாவது தீரவே தீராத நோய்கள் உடையவர் மற்றும் குழந்தை பாக்கியத்தில் தடை, திருமண தடை போன்றவை இருப்பவர்கள் காலபைரவருக்கு சந்தன காப்பு மற்றும் வாசனை மிகுந்த மூலிகை பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம். பைரவருக்கு சந்தன காப்பு ரொம்பவும் பிடிக்கும். பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, புனுகு, அரகஜா, கஸ்தூரி மஞ்சள், கோரோசனை, ஜவ்வாது, குங்குமப்பூ போன்றவற்றை சேர்த்து காப்பு அணிவிப்பது, பால், பழரசம், பன்னீர், தேன் போன்றவற்றால் அபிஷேகம் செய்து வழிபடுவது ரொம்பவே விசேஷமானதாக கருதப்படுகிறது. இப்படி செய்பவர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்வார்கள் என்று சிவபுராணம் கூறுகிறது.

- Advertisement -