காலசர்ப தோஷம் நீங்க கயிறு பரிகாரம்

nagar
- Advertisement -

கால சர்ப தோஷம், ராகு கேது தோஷம் இப்படி எல்லாம் ஜாதக கட்டத்தில் இருக்கும். இப்படிப்பட்ட சர்ப தோஷங்கள் ஜாதகத்தில் இருந்தால் ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும் என்று முதலில் பார்த்து விடுவோம். உங்களுடைய ஜாதக கட்டத்தில் இந்த கால சர்ப தோஷம் இருந்தால், திருமண தடை இருக்கும்.

இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்காது. வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. நிறைய தடைகள் வந்து பிரச்சனைகளை கொடுக்கும். இதிலிருந்து விடுபட என்ன செய்வது. ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய மந்திரமும் பரிகாரமும் இதோ உங்களுக்காக.

- Advertisement -

கால சர்ப தோஷத்தில் இருந்து விடுபட பரிகாரம்

தினமும் காலையில் எழுந்து குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷத்தால் எந்த ஒரு பாதிப்பும் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்க.

ஓம் புஜங்கேஷாய வித்மஹே
சர்ப்பராஜாய தீமஹி
தன்னோ நாக ப்ரசோதயாத்

- Advertisement -

இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தாலே கால சர்ப்ப தோஷத்தால் வாழ்க்கையில் பெரும்பளவில் பாதிப்பு வராது. இதோடு சேர்த்து நீங்கள் இன்னொரு வழிபாட்டு முறையையும் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான கோவில்களில் நாகர் சிலைகள் இருக்கும். அரச மரத்தடியில் இருக்கும். பிள்ளையார் சிலைக்கு பக்கத்தில் இருக்கும்.

ஆத்தங்கரையில் இருக்கும் அரச மரத்தடியில் நாகசிலைகள் இருக்கும். இப்படி நாகர் சிலை இருக்கக்கூடிய ஒரு இடமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாக சிலைக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்கவும். வெள்ளை நூலில் மஞ்சள் தடவி அந்த மஞ்சள் கயிறை நாகசிலைக்கு போட்டு வழிபாடு செய்துவிட்டு.

- Advertisement -

நாக சிலையை மூன்று முறை வலம் வர வேண்டும். ஒரு நாள் இரவு அந்த மஞ்சள் கயிறு நாகர்சிலையில் இருக்கட்டும். மறுநாள் காலை வந்து அந்த கயிறை எடுத்து தோஷமுள்ளவர்கள் கையில் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் ராகு கேது தோஷத்தால், கால சர்ப்ப தோஷத்தால் எந்த ஒரு பாதிப்புகளும் உங்களுக்கு வராமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: புத்தாண்டில் கஜலட்சுமி யோகம் பெறும் ராசிகள்

இந்த கயிறை 48 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். 48 நாட்களுக்கு ஒரு முறை மீண்டும் நாகர் சிலைக்கு பூஜை செய்து மேல் சொன்னபடி வழிபாடு செஞ்சுக்கணும். இப்படி கயிறு போட்டு பூஜை செய்யும் போது வெற்றிலை பாக்கு பூ பழம் சூடம் ஏற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் பெரிய அளவில் ஒருவருக்கு வெற்றியை கொடுக்கும்.

- Advertisement -