காலையில் எழுந்தவுடன் உங்களின் முதல் பார்வை இவற்றின் மீது விழுவதால் உங்களுக்கு உண்டாகும் பலன்கள் என்னவென்று தெரியுமா?

wake-up
- Advertisement -

ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்திருக்கும் பொழுது அந்த நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாக இருக்கும். அந்த வகையில் காலை எழுந்தவுடன் யாரைப் பார்க்க வேண்டும? எதைப் பார்க்க வேண்டும்? எப்படி பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக உள்ளது. இதற்கான பல விளக்கங்களை நமது முன்னோர்கள் சொல்லி விட்டு தான் சென்றிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் சொல்லிச் சென்ற விளக்கங்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ளப் போகின்றோம்.

wakeup1

காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் தரிசனத்திற்கு விழிப்பு தரிசனம் என்று பெயர். காலையில் எழுந்தவுடன் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்பதற்கான முக்கிய விஷயங்கள் உள்ளன. காலையில் எழுந்தவுடன் நாம் எதை பார்க்கின்றோமோ அதன் ஞாபகமும் அவற்றின் தாக்கமும் அந்த நாள் முழுவதுமே நம்மிடம் இருக்கும்.

- Advertisement -

காலையில் எழுந்திருக்கும் பொழுது நல்ல ஒரு அருமையான சூழலில் எழுந்திருக்க வேண்டும். அதற்காக ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை பார்க்க உங்கள் கண்களை மூடிக்கொண்டு தடுமாறி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. காலை எழுந்தவுடன் நம்முடைய உள்ளங்கைகளை பார்ப்பதே மிகவும் சிறந்ததாகும். இதனை தவிர சிறப்பு வாய்ந்த சூழல் வேறெதுவும் இருக்காது. ஏனெனில் நமது உள்ளங்கையில் மகாலட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே எப்போதும் கண் விழிக்கும் பொழுது நமது உள்ளங்கைகளை பார்க்கும் வழக்கத்தை பழகிக் கொள்ள வேண்டும்.

wake-up

மகாலட்சுமி தேவியை மனதில் நினைத்து கொண்டு உள்ளங்கையை பார்க்க வேண்டும். இவ்வாறு பார்க்கும் பொழுது சிலருக்கு குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. வலது கை, இடது கை இவற்றில் எதனை முதலில் பார்க்க வேண்டும் என்ற குழப்பம் தான் பலருக்கும் அதிகமாக ஏற்படும். இரண்டு கைகளிலும் நாம் விழிகளாம் இதில் தவறொன்றும் இல்லை. ஆனால் வலது கையினை பார்ப்பதனால் பெறும் பலன்கள் உண்டு என்று நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

- Advertisement -

அடுத்ததாக பூரணகும்பம், கோவில் கோபுரம், கோவில்மணி, பசுமாடு, கன்று குட்டி விபத்தை பார்ப்பதன் மூலம் மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றி அந்த நாள் முழுவதுமே உங்களுக்கு சாதகமான விஷயங்களே நடக்கும்.

இயற்கை காட்சி, இயற்கை அழகு, அருவிகள், மலர்கள், அற்புதமான இசைக்கருவிகள் இவற்றை பார்ப்பதன் மூலம் மனதில் புத்துணர்ச்சி உண்டாகி அந்த நாள் முழுவதுமே எந்த ஒரு காரியத்தை நீங்கள் செய்வதாக இருந்தாலும் அவற்றை மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் செய்வீர்கள். இயற்கை காட்சிகளை நேரில் பார்க்க முடியாதவர்கள் அவற்றின் புகைப்படங்களையும் பார்க்கலாம்.

மங்கலப் பொருட்களான குங்குமம், விபூதி, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை பார்ப்பதால் அன்றைய நாள் உங்களுக்கு மங்கள கரமானதாக இருக்கும்.

malai-kovil-kungumam-manjal

கணவன் மனைவி முகத்திலும் மனைவி கணவன் முகத்திலும் பெற்றோர்கள் குழந்தைகள் முகத்திலும் குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் முகத்திலும் விழிக்கலாம். இவை அனைத்தும் விழிப்பு தரிசனத்திற்கான சிறந்த வழிகளாகும். இப்படி மங்களம் நிறைந்த வற்றை பார்ப்பதால் அந்த நாள் முழுவதும் இன்பம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும் என்பதில் ஐயம் எதுவுமில்லை.

- Advertisement -