இந்த கோவிலுக்கு போய் வேண்டுதல் வைத்தால், உங்களுடைய வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும். என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும்.

kamatchi mantra
- Advertisement -

நிறைவேறாத வேண்டுதல், நிறைவேறாத ஆசை, கனவு லட்சியம் எல்லாம் நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு இறைவழிபாடு மட்டும்தான் நமக்கு கை கொடுக்கும். குடும்பத்தில் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கலாம். அந்த ஆயிரம் கஷ்டத்தையும் சரி செய்ய ஆயிரம் கண் கொண்ட ஒரு சக்தி தேவியால் தான் முடியும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு அம்மன் வழிபாட்டை தான் இன்று பார்க்கப் போகின்றோம். உங்களுடைய வீட்டின் அருகில் இந்த அம்மனின் கோயில் இருந்தால் தினமும் அந்த கோவிலுக்கு சென்று உங்களுடைய கஷ்டங்களை சொல்லி வேண்டுதல் வையுங்கள். கஷ்டங்களுக்கு உண்டான தீர்வு சீக்கிரம் கிடைத்துவிடும். தினமும் ஒரு வேண்டுதல் வைக்கக்கூடாது. ஒரு வேண்டுதலுக்காக தினமும் கோவிலுக்கு செல்ல வேண்டும். அது எந்த எந்த அம்மன் கோயில், எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான குறிப்புகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

காமாட்சி அம்மன் வழிபாடு தாங்க அது. உங்களுடைய வீட்டின் அருகில் காமாட்சியம்மன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு தினமும் சென்று வந்தால், குடும்பம் சுபிட்சம் பெறும். காமாட்சியம்மன் வழிபாட்டிற்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது. இந்த உலகத்தின் நன்மைக்காக நெருப்பின் மேல் தவம் இருந்த தாய் தான் அவள். ஆயிரம் கண்களைக் கொண்டு உலகத்தை காப்பவள். உங்கள் வீட்டின் அருகில் காமாட்சி அம்மன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று அம்மனுக்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

- Advertisement -

மஞ்சள், குங்குமம், புடவை, பூ வளையல், அம்மன் அலங்காரத்திற்கு தேவையான வேறு ஏதாவது மற்ற பொருட்கள், அதாவது அம்மனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு புடவை சாத்திவிட்டு அட்டிகை ஆரம் போன்ற ஆபரணங்கள் எல்லாம் கூட செலுத்துவார்கள். அதை தங்கத்தில் தான் வாங்கி தர வேண்டும் என்று அவசியம் கிடையாது. கவரிங்கில் கூட வாங்கிக் கொடுக்கலாம். இப்படி அம்மனை அலங்காரம் செய்யக்கூடிய பொருட்களை உங்களால் முடிந்த அளவு வாங்கி கொடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து உங்களுடைய மன குறைகளை சொல்லி அதை சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்கள் தீரும்.

அம்மனுக்கு இந்த பொருட்கள் எல்லாம் வாங்கி கொடுத்தால் தான் நல்லது நடக்கும் என்பது கட்டாயம் கிடையாது. நம்முடைய திருப்திக்காக நாம் செய்யக்கூடிய வழிபாடு தான் இது. அம்மனுக்கு நீங்கள் எதுவுமே செய்யாமல், மனதிற்குள் காமாட்சியம்மன் தாயே என்று நினைத்து கஷ்டத்திற்கு கூப்பிட்டால் கூட, கூப்பிட்ட குரலுக்கு தெய்வம் நிச்சயமாக வரும். இருப்பினும் மேல் சொன்ன வழிபாட்டை செய்யும் போது நம்மை அறியாமலேயே ஒரு நேர்மறை ஆற்றல் நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் நமக்கும் வந்துவிடும்.

- Advertisement -

பிறகு நாம் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் சீக்கிரம் நிறைவேற தொடங்கிவிடும். என்னால் எதுவுமே செய்ய முடியாது என்பவர்கள் பத்து ரூபாய்க்கு சுத்தமான குங்குமத்தை வாங்கி கொடுத்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வேண்டுதல் வைத்தாலும் நிச்சயமாக வேண்டுதல் நிறைவேறும். உங்களுடைய வீட்டில் அருகில் காமாட்சி அம்மன் கோவில் இல்லையா வீட்டிலேயே காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அந்த காமாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் தினமும் நெற்றியில் வைத்து குடும்ப கஷ்டம் தீர பிரார்த்தனை செய்தாலும், கஷ்டங்கள் உடனடியாக தீரும்.

முடிந்தால் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரு முறை சென்று அந்த காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வருவது வீட்டில் சுப காரியதடையை விளக்கி சுபிட்சத்தை உண்டு பண்ணும். உங்களுடைய வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும்.

- Advertisement -