உங்க வீட்டு தெய்வங்கள், உங்கள் வீட்டில் தான் வாழுகின்றது என்பதை உறுதி செய்ய இது ஒன்றே சாட்சி.

vilakku
- Advertisement -

இந்த உலகத்தில் இறைசக்தி இல்லாத இடம் என்று ஒன்று கிடையவே கிடையாது. நம்முடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் நாம் செல்லக்கூடிய சுடுகாடு வரை அந்த ஈசன் வாசம் செய்கின்றான். ஆக நம்முடைய வீட்டில் இறை சக்தி இருக்கிறதா என்ற சந்தேகம் மனிதராகப் பிறந்த ஒருவர் மனதில் கூட இருக்கவே கூடாது. நம்முடைய வீட்டிலும், நாம் சுவாசிக்கும் காற்றிலும் நம்மை சுற்றி இருக்கும் மழை வெயில் மண், நாம் உட்கொள்ளும் ஆகாரம் ஒவ்வொரு அணுவிலும் அந்த ஆண்டவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையோடு யார் இருக்கிறார்களோ அவர்கள் இறை சக்தியை நிச்சயமாக உணர்ந்திருக்க முடியும். இதை ஆழமாக நம்முடைய மனதிலும் பதிய வைத்துக் கொண்டு இந்த பதிவிற்குள் செல்வோம்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றால் எல்லோரது வீடும் சுத்தமாக இருக்கும். பூஜை அறை சுத்தம் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அந்த வெள்ளிக்கிழமை பூஜையில் உங்களுடைய வீட்டில் இப்படி செய்து பாருங்கள். ஒரு தாம்பூலத் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். பச்சரிசியின் மேலே காமாட்சி அம்மன் விளக்கு, மண் அகல் விளக்கு உங்களுடைய விருப்பம், ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் தடிமனாக திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் இருக்கும் மற்ற விளக்குகளை அதாவது மின்சார விளக்குகளை அணைத்துவிடுங்கள். நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபச் சுடரின் முன்பாக அமர்ந்து, உங்களுடைய குலதெய்வத்தை நினைத்து, குலதெய்வம் உங்கள் வீட்டில் இருப்பதாக மனதார நம்பி அந்த தீப சுடரின் பார்த்து கண்களைத் திறந்தபடி மனதை ஒரு நிலைப் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபம், இருக்கும் நிலையிலிருந்து ஒரு படி மேலே எழும்பி எரியத் தொடங்கும். அதாவது இன்னும் கொஞ்சம் பிரகாசமாக லேசான அசைவோடு மேலெழும்பி எரியத் தொடங்கும். (உன் தெய்வம் உன் வீட்டில் தான் இருக்கிறது என்பதற்கு இந்த தீபச்சுடர் ஒளியே சாட்சி.)

நம் வீட்டு தெய்வம் நம் வீட்டில் தான் இருக்கின்றது என்பதை உணர்த்துவதற்காக அந்த தீபச்சுடரில் நிச்சயமாக உங்கள் வீட்டு தெய்வம் வந்து உங்களுக்கான பதிலை சொல்லும். மனப்பூர்வமாக மானசீகமாக நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டு தீபச்சுடரில் வித்தியாசத்தை உணர்வீர்கள். ஒருவேளை உங்களால் இந்த தீபச்சுடரில் வித்தியாசத்தை உணர முடியவில்லை என்றால் என்ன செய்வது. உடனடியாக உங்கள் வீட்டில் தெய்வங்கள் வாழவில்லை என்று நினைத்து மனதை குழப்பிக் கொள்ளக்கூடாது.

- Advertisement -

அடுத்து வரக்கூடிய 3 வெள்ளிக்கிழமைகளில், ஒரு மண் அகல் விளக்கை இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் வீட்டு குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்குள் வரச் சொல்லி அழைக்க வேண்டும். இதே போல மூன்று வெள்ளிக்கிழமைகள் வீட்டில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு உங்கள் வீட்டு தெய்வத்தை உள்ளே அழித்து விட்டீர்களா.

மீண்டும் நான்காவது வெள்ளிக்கிழமை மேலே சொன்னது போல பச்சரிசியில் காமாட்சியம்மன் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் வீட்டு தெய்வம் உங்கள் வீட்டிற்குள் வர வேண்டும் என்று நம்பிக்கையோடு வேண்டினால், உங்கள் வீட்டு தெய்வம் வந்த அந்த தீபச்சுடரில் அமர்ந்து உங்களுக்கான விடையைச் சொல்லும். உங்கள் வீட்டில் தொடர் கஷ்டங்கள் வருகிறது மனதில் நிம்மதி இல்லை என்றால், நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -