உங்கள் கால் பாதங்களின் மூலம் எந்த ஒரு கெட்ட சக்தியும் உங்களுடைய உடம்புக்குள் நுழைய முடியாது. உங்கள் காலடி மண்ணை எடுத்து செய்வினை வைத்தாலும் அதில் இருந்து தப்பிக்க என்ன வழி?

pillaiyar
- Advertisement -

பாதையில் நாம் நடந்து செல்லும்போது எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத விஷயங்களைத் தாண்டி செல்கின்றோம். அதாவது நிறைய பேர் திருஷ்டி சுற்றி போட்ட எலுமிச்சம்பழம், திருஷ்டி சுற்றி போட்டு வைத்திருக்கும் கற்பூரம், திருஷ்டி சுற்றிப் போட்டு வைத்திருக்கும் மிளகாய், ஆலம் இப்படி அடுத்தவர்களுடைய எதிர்மறை ஆற்றலை தாங்கி நிற்கும் பொருட்களை நாம் தாண்டும் போது, அதன் மூலம் நமக்கு, அந்த எதிர்மறை ஆற்றலினால் பிரச்சனைகள் வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

lemon

மனதளவில் மிகவும் பலவீனமாக உள்ளவர்கள் இப்படி ஏதாவது கழிப்பு எடுத்த பொருட்களை தாண்டி விட்டால், அவர்களுக்கு உடல் நிலை உடனடியாக சரியில்லாமல் போய்விடும். அடுத்தபடியாக, சிலபேர் சிலருடைய காலடி மண் எடுத்து ஏதாவது செய்வினைகளை செய்து வைத்துவிடுவார்கள். இப்படி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், நீங்கள் உங்களை அறியாமல் ஏதாவது கழிப்பினை தாண்டி இருந்தாலும், அல்லது உங்கள் காலடி பாதத்தின் மண்ணை எடுத்து யாரேனும் உங்களுக்கு செய்வினை செய்து விட்டதாக உணர்ந்தாலும், நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

- Advertisement -

எப்போதும் மனதளவில் காக்கும் கடவுளான கணபதியை நினைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும். இப்படி செய்தால் எப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலும் உங்களை தாக்க முடியாது. இது முதல் வழி. இரண்டாவதாக உங்களுக்கு உடலளவில் ஏதோ ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. அது எதிர்மறை ஆற்றல் என்று நீங்கள் உணர்ந்தால், அது உங்களுடைய பாதங்களின் மூலம்தான் உங்கள் உடம்புக்குள் வந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்தால், இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

leg

நாட்டு மருந்து கடைகளில் வெள்ளை குங்குலியம் என்று கிடைக்கின்றது. அந்த வெள்ளை குங்குலியத்தினை வாங்கி உங்கள் பாதம் முழுவதும் நன்றாக தேய்த்து, உப்பு தண்ணீரில் பாதங்களை சுத்தமாக கழுவி விடுங்கள். அதன் பின்பு கருப்புக் கம்பளி கயிறு வாங்கி உங்களுடைய கால்களில் கட்டிக் கொள்ள வேண்டும். பெண்கள் இடது காலில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் கருப்பு கம்பளி கயிறை வலது காலில் கட்டிக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இப்படி செய்து கொண்டால் எப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும் அது உங்களுடைய பாதங்களின் வழியாக உங்களுடைய உடம்புக்குள் நிச்சயமாக நுழைய முடியாது. ஒருவேளை உங்கள் காலடி மண்ணை எடுத்து செய்வினை வைத்து இருந்தாலும் அந்த எதிர்மறை ஆற்றல் உங்களை வந்து தாக்காது.

Vinayagar-1

உங்களுடைய பாதங்கள் ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்துவிடும். நம்முடைய உடலில் எதிர்மறை ஆற்றல் நுழையக்கூடிய முக்கியமான இடங்களில் இந்த பாதங்களும் ஒன்று. நம்முடைய பாதங்களில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத துவாரங்களின் மூலம் எதிர்மறை ஆற்றல் நுழையாமல் பாதுகாக்க ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சுலபமான பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்த நல்ல பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -