கட்டுக்கடங்காத கண்திருஷ்டியில் இருந்து உங்கள் குடும்பத்தை விடுவிக்க, திருஷ்டிகள் முழுவதுமாக விலக இந்த நாய்க்கடுகு ஒன்று மட்டும் போதும்

kan
- Advertisement -

நமது முன்னோர்கள் வாழ்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தொலைத்துவிட்டோம். இதற்கு மனிதர்களை குறை கூறிப் பயனில்லை. இன்றைய சூழ்நிலை ஒருவரை ஒருவர் பொறாமையுடன் பார்க்கும் காலமாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் விலைவாசி ஏற்றம், வேலையின்மை, பணப்பற்றாக்குறை. நேர்மையாக இருப்பவர்கள் கூட தங்களை உயர்த்திக் கொள்ள சில சந்தர்ப்பங்களில் மற்றவரை ஏமாற்ற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். ஏனென்றால் மற்றவர் முன்னேறினால் இவர்களுக்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே மனிதன் சுயநலமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டான். எனவ ஒருவரின் வளர்ச்சி மற்றவருக்கு பொறாமையாக மாறி விடுகிறது. இதனால் உண்டாகும் தீய பார்வைகள் ஒருவருக்கு கண் திருஷ்டியாக மாறுகிறது. நன்றாக இருக்கும் அவர்களது குடும்பம் இந்த கண் திருஷ்டியினால் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகிறது. இவ்வாறான கண் திருஷ்டிகளை அடியோடு விரட்ட இந்த நாய் கடுகு பரிகாரத்தை உங்கள் வீடுகளில் அமாவாசை தோறும் தொடர்ந்து செய்திடுங்கள். வாருங்கள் இந்த பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த கண்திருஷ்டியை உணர்ந்து கொள்வதற்கு சில முக்கிய அறிகுறிகள் இருக்கின்றன. அதற்கு முதலில் வீட்டிலுள்ளவர்கள் உடல்நலனை சரியாக கவனிக்க வேண்டும். நன்றாக இருப்பவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படும், வீட்டில் உள்ள பெண்களுக்கு வேலை செய்ய முடியாத அளவிற்கு சோர்வு உண்டாகும், எப்பொழுதும் சுறுசுறுப்பாக வேலைக்கு செல்லும் ஆண்கள் மிகவும் சோர்வுடன் வீட்டிலேயே இருக்க வேண்டும், படுத்து உறங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பர்.

- Advertisement -

நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் திடீரென கீழே விழுந்து அவர்களுக்கு காயம் ஏற்படும். இது ஒரு முறை நிகழ்ந்தால் பரவாயில்லை. தொடர்ந்து மறுபடியும் நடந்து கொண்டே இருந்தால் கண் திருஷ்டியும் காரணமாக இருக்கலாம். அது போல வீட்டில் இருக்கும் குழந்தைகள் காரணமில்லாமல் அழுது கொண்டே இருப்பார்கள்.

உங்கள் வீட்டில் இருக்கும் செடி கொடிகள் திடீரென காய்ந்து போகலாம் அல்லது பட்டுப் போகலாம். அதுபோல வீட்டில் வளர்க்கப்படும் உயிரினங்கள் அமைதியாக இல்லாமல் ஏதேனும் சத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும். இதுபோல அறிகுறிகளை உங்கள் இல்லங்களில் நீங்கள் உணர்ந்து கொண்டால் உடனே இந்த கண் திருஷ்டிகான பரிகாரத்தை செய்து விட வேண்டும். இல்லையெனில் இதற்கான தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

அதற்காக அமாவாசைக்கு முந்தைய இரவு ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் சிறிதளவு நாய் கடுகு, சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு இவை மூன்றையும் சேர்த்து கலந்து கொண்டு, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். பிறகு மறுநாள் காலை இதில் இருக்கும் தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து கொண்டு வீட்டிற்குள் இருந்து வெளியில் வரும் வரை தெளிக்க வேண்டும்.

இவ்வாறு தெளித்துக் கொண்டு வெளியில் வந்த உடன் வீட்டின் வாசலில் கற்பூரம் ஏற்ற வேண்டும். பின்னர் இதே போன்று அமாவாசை அன்று மாலை வேளையிலும் ஒருமுறை செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து அமாவாசை தோறும் காலை, மாலை என இரு வேளை இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை சுற்றியுள்ள கண் திருஷ்டியும், தீய எண்ணங்களும் அடியோடு ஒழிந்து விடும்.

- Advertisement -