இந்த ஐந்து மிளகாய் உங்கள் கையில் இருந்தால் போதும். பணவிரயம் ஆகாமல் உழைப்புக்கேற்ற ஊதியம் உங்கள் பாக்கெட்டில் வந்து சேரும்

thirusti-ganapathi
- Advertisement -

குழந்தைகள் பிறக்கும்போதே பெற்றோர்கள் அவர்கள் டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என்று கனவு காண்பவர்கள். அவ்வாறு அந்த கனவு நினைவாக நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். ஒரு குழந்தை எந்த அளவிற்கு நன்றாக படிக்கிறதோ அந்த அளவிற்கு நல்ல கல்லூரிக்கு சென்று படிப்பை முடித்து நல்ல வேலை கிடைக்க பல தேர்வுகள் எழுதி காத்திருக்கிறான். ஆனால் படித்த அனைத்து இளைஞர்களுக்கும் நல்ல வேலை கிடைத்து, நல்ல வருமானம் கிடைத்து, வாழ்க்கை நல்ல படியாக அமைவதென்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அவ்வாறு கிடைத்த வேலையிலும் போட்டிகள் அதிகமாக இருக்கும். கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதென்பதும் சந்தேகம் தான். ஒரு சிலர் உழைக்காமலே பாக்கெட் நிறைய பணம் வைத்திருப்பார்கள். அவர்கள் சிறிய விஷயம் செய்தாலும் பெரிய அளவு பலன் கிடைக்கும். இவ்வாறு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை அமைகிறது. எனவே நமது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க 5 மிளகாய் வைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரம் மட்டும் போதும்.

docter

இந்த காலத்தில் ஒருவரை கீழே தள்ளியாவது மற்றவர்கள் மேலே வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே ஒருவரின் முன்னேற்றம் என்பதே மற்றவர்களின் பொறாமையாக மாறுகிறது. அதிலும் ஒரே தொழிலிலோ, ஒரே வேலையிலோ உள்ளவர்களோ தன்னுடன் இருப்பவர்களின் சந்தோஷத்தை விரும்புவதில்லை. தான் மட்டும் தான் நன்றாக இருக்க வேண்டும், எனக்கு மட்டும்தான் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு செயல்படுகிறார்கள். எனவே திறமை உள்ளவனுக்கு அதற்கான பலன் கிடைக்காதபடி இடையூறு செய்கின்றனர்.

- Advertisement -

அப்படி ஒரு சிலர் இப்படி இருக்க, இன்னும் சிலருக்கோ அவர்கள் ஜாதக அமைப்பின்படி எதனை செய்தாலும் அதில் அதிக அளவு பலன் பெறக் கூடிய அளவிற்கு அதிர்ஷ்டம் பொருந்தியவராக இருக்கிறார்கள். ஒருவரது வாழ்க்கையின் ஏற்றத்தாழ்விற்க்கு நமது ஜாதகத்தில் அமைந்திருக்கும் கட்டங்களும் காரணமாக உள்ளன. எனவே இவ்வாறான ஜாதக பிரச்சனை மற்றும் பொறாமையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் போதும்.

jadhagam

அதற்காக ஒரு கைக்குட்டையை தொடர்ந்து மூன்று நாள் உங்கள் கையில் வைத்து உபயோகிக்க வேண்டும். அதேபோல் ஒரு பத்து ரூபாய் நோட்டை உங்கள் பரிசில் மூன்று நாள் செலவு செய்யாமல் வைத்திருக்க வேண்டும். பிறகு மூன்றாம் நாள் அந்த கைக்குட்டையையும், இந்த பத்து ரூபாய் நோட்டையும் ஐந்து சிவப்பு மிளகாயையும் அதாவது சிகப்பு மிளகாய் என்றால் பச்சை மிளகாய் பழுத்து சிவப்பாக மாறியிருக்க வேண்டும்.

- Advertisement -

அதனையும் இந்த ரூபாய் நோட்டுடன் வைத்து லேசாக அவற்றில் ஒரு முடிச்சுப் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டின் கிழக்குப் புறமாக நின்று கொண்டு, தலையைச் சுற்றி, வலது புறம் மூன்று சுற்றும், இடது புறமாக ஒரு சுற்று சுற்றி விட்டு, அதனை யாரும் பார்க்காமல் வீட்டின் வெளிப்புறம் எடுத்துச் சென்று ஒரு ஓரமாக போட்டுவிட வேண்டும்.

சிவப்பு மிளகாய்

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுகிருக்கும் கண்திருஷ்டி மற்றும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் உங்கள் பாக்கெட்டை வந்தடையும். இந்த பரிகாரத்தை மாதம் ஒருமுறையாவது செய்வதென்பது நல்ல பலனைக் கொடுக்க வல்லது.

- Advertisement -