கண் திருஷ்டியால் வீட்டிற்குள் நுழைந்த கவலைக்கு, கண் இமைக்கும் நேரத்தில் தீர்வு. கல் உப்போடு இந்த பொருளை சேர்த்து வீட்டிற்குள் வைத்து பாருங்களேன்.

salt-parihar
- Advertisement -

திருஷ்டிகளில் நிறைய வகைகள் உண்டு. அதில் ஒருவகையான திருஷ்டி தான் இந்த கண் திருஷ்டி. அடுத்தவர்களுடைய கண்களில் இருந்து வெளிவரும் எதிர்மறையான ஆற்றல், ஏக்கம் இவைகளின் தாக்கமே கண்திருஷ்டி. குறிப்பாக நாம் நன்றாகவே இருக்கக் கூடாது என்று நினைத்தவர்களின் முன்னால், நாம் வாழ்க்கையில் நன்றாக வாழ்ந்து ஜெயித்து காட்டி விட்டால், அவ்வளவு தான். நம்முடைய எதிராளியின் கண் திருஷ்டியும் வயிற்றெரிச்சலும் உடனடியாக நம் குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுத்துவிடும்.

இன்னும் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி சொன்னால் நம்முடைய நெருங்கிய சொந்த பந்தங்கள் அனைவரும் சாதாரணமான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள். பெரிய அளவில் சொத்துபத்து இல்லாமல் தான் இருப்பார்கள். ஆனால் நாம் எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்து கொஞ்சம் காசு பணத்தை சேர்த்து, சொத்துசுகம் வாங்கிவிட்டால் போதும். நம்மை பார்ப்பவர்களுடைய கண்கள் நிச்சயமாக, ஒரு பொறாமை கண்ணோட்டத்தில் தான் பார்க்கும்.

- Advertisement -

அழகாக ஆடை உடுத்திக்கொண்டு, அழகான நகை நட்டுகளை அணிந்துகொண்டு முகம் நிறைய சந்தோஷத்தோடு, வாய்நிறைய சிரிப்போடு ஒரு விசேஷத்திற்கு சென்று வரும்போது மற்ற உறவினர்களுடைய கண்கள் நம் மேல் விழும். இவர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகாக எல்லா விஷயமும் அமைகின்றது என்ற ஏக்கமான பார்வை நிச்சயம் நம்மேல் கண் திருஷ்டியை விழ வைக்கும்.

இப்படிப்பட்ட எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், நாம் என்ன பரிகாரம் செய்வது. மிக மிக சுலபமான ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஒரு கண்ணாடி பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே சிறிய கட்டி பெருங்காயம் – 1 துண்டு, வெள்ளருக்கன் கட்டை – 1, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, இந்த மூன்று பொருட்களையும் போட்டு விட்டு இதன் மேலே கல் உப்பை கொட்டி விடுங்கள். தயார் செய்த இந்த பவுல் வரவேற்பறையில், அதாவது நிலைவாசல் பக்கத்தில் வைத்து விடுங்கள். உங்கள் வீட்டிற்குள் கெட்ட எண்ணத்தோடு யார் நுழைந்தாலும் அந்த எதிர்மறை எண்ணத்தால் உங்களுடைய குடும்பத்திற்கு கஷ்டம் வராமல் இருக்கும். கெட்ட எண்ணத்தோடு உள்ளே நுழைபவர்களுடைய அந்த எதிர்மறை ஆற்றலை இந்த பொருட்கள் ஈர்த்தது கொள்ளும்.

நீங்கள் ஆடை அலங்காரத்தோடு வெளியே செல்கிறீர்கள் குடும்பத்தோடு வெளியே செல்கிறீர்கள். ‘ஊரு கண்ணு உங்க மேல தான் படுது’ அப்படின்னா, ஒரு சின்ன மஞ்சள் துணியில் பெருங்காய கட்டி சிறிதளவு வெள்ளெருக்கன் கட்டை தூண்டு, மஞ்சள்தூள், கல்லுப்பு, இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து சிறிய முடிச்சாக கட்டி உங்களுடைய பர்சிலோ, ஹேண்ட் பேகிலோ வைத்து எடுத்துச் சென்றாலும் அடுத்தவர்களுடைய கண் பார்வையின் மூலம் உங்களுக்கு பெரியதாக எந்த பிரச்சனையும் வராது.

பெருங்காயத் தூளை பரிகாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. வெள்ளருக்கன் கட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள் அடிக்கடி இந்த பொருட்களை மாற்ற வேண்டாம். அதிகப்படியான தூசு படிந்த பின்பு பழைய பொருட்களை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு புது பொருளை வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -