கண்களை சுற்றி உள்ள கருவளையம் நிரந்தரமாக போக இதை மட்டும் போட்டால் போதும். அப்புறம் பாருங்க கருவளையம் மறைஞ்சு உங்க கண்ணு ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசமா மின்னும்.

Black circle remedies
- Advertisement -

இப்போதெல்லாம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்குமே கண்களைச் சுற்றி கருவளையம் இருக்கும் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் மொபைல் பார்ப்பது என்று சொல்லலாம். அதுமட்டுமின்றி அதிகப்படியான டென்ஷன், தூக்கமின்மை போன்ற காரணங்களால் கூட கண்களை சுற்றி கருவளையம் தோன்றி மிகவும் சோர்வுற்று இருக்கும். இந்த பிரச்சனைகளை எளிதில் சரி செய்ய இந்த அழகு குறிப்பு பதிவில் அதற்கான எளிய தீர்வுகள் உள்ளது. வாங்க அது என்னன்னு தெரிந்து கொள்ளலாம்.

கண் கருவளையம் நீங்க:
முதலில் சிறுவயது பிள்ளைகளுக்கு இந்த பிரச்சனையும் சரி செய்வது பற்றி தெரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு பெரும்பாலும் அதிக அளவு டிவி பார்ப்பது, மொபைல் பார்ப்பது போன்ற காரணத்தினால் வரும். அதையும் மிக அருகில் வைத்துக்கொண்டு பார்க்கும் போது இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதை முதலில் சரி செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்போது அப்படி கருவளையம் தோன்றிய குழந்தைகளுக்கு இந்த குறிப்பை செய்வதற்கு முன்பு கடைகளில் கண்களின் மேல் வைக்கும் ஐ பேடு இருக்கும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு பௌலில் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் பன்னீரையும் சேர்த்த பிறகு இந்த பேடை அதில் நனைத்து பிழிந்த பிறகு குழந்தைகள் இரவில் தூங்கும் முன் கண்களில் 5 நிமிடம் வரை வைத்து லேசாக மசாஜ் செய்த பின் பேடை எடுத்து விட்டு உறங்க சொல்லுங்கள். இதை தொடர்ந்து செய்து வரும் போது குழந்தைகளுக்கு கண் கருவளையம் வராது. அதே நேரத்தில் அவர்கள் கண்களும் சோர்வு இல்லாமல் இருக்கும்.

இப்போது பெரியவர்களுக்கு கண் கருவளையம் இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் ஒரு உருளைக் கிழங்கை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு எந்த அளவு எடுத்து இருக்கிறீர்களோ அதே அளவு வெள்ளரிக்காய் எடுத்து இரண்டையும் அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். அந்த சாரில் ஒரே இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு கலந்த பிறகு,
இதையும் அந்த காட்டன் பேடில் நனைத்து பிழிந்த பிறகு இரவு தூங்கும் போது முன் கண்களை சுத்தம் செய்த பிறகு பத்து நிமிடம் இந்த காட்டன் பேடை வைத்து லேசாக மசாஜ் செய்த பின் எடுத்து விடுங்கள். இதை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வர உங்கள் கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் மறைய தொடங்கி விடும்.

- Advertisement -

அதே போல் சிலருக்கு கண்களை சுற்றி தோல் சுருங்கி அல்லது கொஞ்சம் வீக்கம் வந்து நீர் கோர்த்து இருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கும். அதற்கு முட்டையின் வெள்ளை கருவை லேசாக தேய்த்து ஐந்து நிமிடத்திற்கு எல்லாம் சுத்தம் செய்து விட வேண்டும். இதை அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது. முட்டை சாப்பிடாதவர்கள் ஒட்ஸை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்தப் பிறகு அந்த தண்ணீரை இப்படி கண்களை சுற்றி தேய்த்து வர இந்த பிரச்சனைகள் முற்றிலுமாக நீங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: தோல் வறட்சி நிரந்தரமாக சரியாக

கண் கருவளையம் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்குமானால் நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -