வெறும் 15 நிமிடத்தில் கண் கருவளையம் மறைந்து போக இந்த 3 பொருட்கள் மட்டுமே போதும். நீங்க நினைச்சு பார்க்க முடியாத பெஸ்ட் ரிசல்ட் உடனடியாக கிடைக்கும்.

eye
- Advertisement -

சரியாக தூக்கம் இல்லை. உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. நிறைய நேரம் கணினி முன்பாக, செல் ஃபோன் முன்பாக வேலை எனும் பட்சத்தில் நம்முடைய கண்கள் சோர்வடையும். கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கும். சில பேருக்கு கண்ணுக்கு கீழே வீங்கியது போல கூட இருக்கும். சில பேருக்கு கண்களுக்கு கீழே நிறைய சுருக்கம் இருக்கும். இளமையாக இருப்பவர்கள் வயதான தோற்றத்தை பெற இந்த கண் கருவளையம் ஒரு காரணமாக இருக்கும். பார்த்தால் சில பேர் நோயாளி போலவே இருப்பார்கள். சரி, இந்த கண் கருவளையத்தை சரிசெய்ய இயற்கையான முறையில் ஒரு ரெமிடியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கண் கருவளையத்தை போக்க கூடிய அந்த 3 பொருட்கள் என்னென்ன பார்த்து விடலாமா. திரிபலா பொடி, பாதாம் ஆயில், ரோஸ் வாட்டர். அவ்வளவு தாங்க. இந்த எல்லா பொருட்களையும் நல்ல தரமான பொருட்களாக பார்த்து வாங்கி கொள்ள வேண்டும். எந்த ஒரு கலப்படமான பொருளும் இதில் சேர்த்து இருக்கக் கூடாது. இது ரொம்ப ரொம்ப அவசியம் பாத்துக்கோங்க. ஆர்கானிக் பொருட்களா என்று பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் திரிபலா பொடி – 1 ஸ்பூன், பாதாம் ஆயில் – 1 ஸ்பூன், இந்த பொடியை கலக்குவதற்கு தேவையான அளவு ரோஸ் வாட்டர் ஊற்றி, இதை கொஞ்சம் திக் பேஸ்டாக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை தூங்கச் செல்வதற்கு முன்பு உங்களுடைய கண்ணை சுற்றி அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

20 நிமிடங்கள் இந்த பேக் அப்படியே கண்களில் இருக்கலாம். கண்களை மூடி ரிலாக்ஸ் ஆக படுத்துக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கண்களை கழுவிய உடனேயே உங்களுடைய கண் கருவளையத்தில் நல்லதொரு மாற்றம் தெரியும். மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த பேக்கை பயன்படுத்தி பாருங்கள். உங்களுடைய கண் கருவளையம் காணாமலேயே போய்விடும்.

- Advertisement -

திரிபலா பொடி என்பது வேறு எதுவும் கிடையாது. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் இந்த 3 பொருட்களுடைய கலவை தான் இந்த திரிபலா பொடி. நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

கண்ணுக்கு கீழே இருக்கக்கூடிய பகுதி ரொம்பவும் மெதுவாக(சாஃப்டாக) இருக்கக்கூடிய பகுதி. அந்த இடத்தில் நாம் எந்த ஒரு பொருளையும் தொடர்ந்து பயன்படுத்த கூடாது. அது நமக்கு சில சமயம் பக்க விளைவுகளை கூட ஏற்படுத் வாய்ப்புகள் உள்ளது. இந்த பேக்கை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டுவிட்டு பிறகு வாரத்தில் ஒரு நாள் மட்டும் பயன்படுத்தி வர வேண்டும். கண் கருவளையம் மறைந்து விட்டால் அதன் பின்பு பேக் பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளலாம். இந்த டிப்ஸ்  உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -