தினமும் ஒரு சொட்டு மட்டும் இதை தடவுங்க ஒரே வாரத்துல உங்க கண்ண சுத்தி இருந்தா கருவளையெல்லாம் காணாம போயிடும். அப்புறம் பாருங்க உங்க கண்ணு காந்தம் போல எல்லாரையும் கவர ஆரம்பிச்சிரும்.

eyes oil
- Advertisement -

முகத்தில் அழகை எடுத்துக் காட்டுவதில் கண்களுக்கு சிறந்த பங்கு உண்டு. கண்கள் எந்த அளவிற்கு பார்க்கும் பொழுது பொலிவுடன் பிரகாசமாக இருக்கிறதோ அதன் பிரதிபலிப்பானது முகத்தில் நன்றாகத் தெரியும். இந்த கண்களை அழகாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான்இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இப்போதெல்லாம் பெரும்பாலோனருக்கு கண்களை சுற்றி கருவளையம் தோன்றி கண்கள் மிகவும் சோர்வுற்று இருப்பதை காண முடிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. தினமும் அதிக நேரம் கண்விழித்து வேலை செய்வது. அலைபேசியை பார்த்துக் கொண்டு இருப்பது இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது. அதிக மன அழுத்தம் இப்படி இதற்கான காரணங்கள் பல உண்டு. காரணங்கள் எதுவாயினும் கருவளையம் தோன்றி விட்டால் முகத்தின் அழகு போய் பார்ப்பதற்கு வயதானவர் போன்ற தோற்றம் இருக்கும். இந்த கண் கருவளையம் வராமல் இருக்க இது போன்ற காரணங்களை தவிர்த்து விடுவது நல்லது.

- Advertisement -

கண் கருவளையம் நீங்க டிப்ஸ்
இப்போது கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தை எப்படி சரி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அதற்கு ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி அலசிய பிறகு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்படி நறுக்கிய உருளைக்கிழங்குகளை இடி உரலில் சேர்த்து இடித்த சாறு எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு சின்ன பவுலில் உருளைக்கிழங்கு சாறு 2 டீஸ்பூன், கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன், விளக்கெண்ணெய் 1/4 டீஸ்பூன் மூன்றையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள். இந்த ஜெலை தயாரிக்க உங்களிடம் வீட்டில் கற்றாழை செடி இருந்தால் அதை தோல் சீவி மூன்று முறை தண்ணீரில் அவசிய பிறகு அந்த ஜெல்லையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

தினமும் இரவு உறங்க செல்லும் முன் முகத்தை சுத்தம் செய்த பிறகு இந்த ஜெல்லில் இருந்து ஒரு சொட்டு எடுத்து கண்களை சுற்றி தேய்த்து லேசாக மசாஜ் செய்து அப்படியே இரவு முழுவதும் விட்டு விடுங்கள். அடுத்த நாள் காலையில் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள்.

இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் போதும் உங்கள் கண்களை சுற்றி உள்ள கருவளையம் தோல் சுருக்கம் எல்லாம் நீங்கி கண்கள் பளிச்சென்று பிரகாசமாக மின்ன தொடங்கி விடும். இந்த அளவுகளில் தயாரிக்கப்படும் ஜெல் ஒரு வாரத்திற்கு தாராளமாக வரும். இதை நீங்கள் பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து தான் பயன்படுத்த வேண்டும். வெளியில் வைத்தால் வீணாகி விடும்.

இதையும் படிக்கலாமே: சருமத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க பச்சைப்பயிறு ஃபேஸ் பேக்

கண் கருவளையம் போக்க இந்த எளிமையான குறிப்பு உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் இதை முயற்சி செய்து பார்த்து உங்க கண்களை சுற்றி உள்ள கருவளையத்தை நீக்கி உங்கள் முகத்தை பிரகாசமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -