வெறும் 10 ரூபாய் செலவு செய்தால் போதும். 3 நாட்களில் கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம், வீக்கம், சுருக்கம், எல்லாம் காணாமலே போகும்.

face6
- Advertisement -

அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மனிதர்களுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்து வேலைகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக ஓய்வே கொடுக்காமல் கண்களை திறந்து வைத்துக்கொண்டு முழித்து முழித்து வேலை பார்ப்பது என்பது ரொம்பவும் தவறான ஒரு விஷயம். என்ன தான் உங்களுக்கு கம்ப்யூட்டரில் வேலை இருந்தாலும், போனை பார்த்துக் கொண்டே இருந்தாலும், கண்ணுக்கு அப்பப்போ ரெஸ்ட் கொடுங்க. கண் இமைகளை மூடி மூடி திறக்க வேண்டும். கம்ப்யூட்டரை பார்த்துக்கொண்டே இல்லாமல், 5 நிமிடத்திற்கு ஒரு முறை, 10 நிமிடத்திற்கு ஒரு முறை கண்களை வேறு ஏதாவது இடத்திற்கு திருப்பி பார்வையை அங்குமிங்குமாக மாற்ற வேண்டும். ஒரேயடியாக பிரஷரை கொடுத்தால் நம்முடைய கண்கள் தாங்காது.

நிறைய பேருக்கு கண்ணை சுற்றி கருவளையம், கண்ணுக்கு கீழே சுருக்கம், கண்ணுக்கு கீழே வீக்கம் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு மேலே சொன்ன விஷயங்களும் ஒரு காரணம். இது ஒருவருடைய அழகை மட்டும் பாதிப்பது கிடையாது. கண்பார்வை குறைந்து போகும். கண்களில் தேவையற்ற பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும். ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் நோயாளி போல தோற்றத்தை கொடுக்கக்கூடிய இந்த கருவளையத்தை சுலபமாக நீக்க என்ன செய்வது. முதலில் உங்களுடைய கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். பிறகு இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -

கடைகளில் விற்கும் வேஸ்லின் ஒரு டப்பாவை வாங்கி கொள்ளுங்கள். இந்த குறிப்புக்கு இந்த ஒரு பொருள் மிக மிக முக்கியமானது. ஒரு சிறிய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வேஸ்லின் – 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்போது டபுள் பாய்லிங் மெத்தடில் லேசாக இதை சூடு செய்ய வேண்டும்.

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி சூடு செய்து, அந்த சுடுதண்ணீரில் எல்லா பொருட்களையும் போட்டு தயாராக இருக்கும் பவுலை வைத்து, 2 லிருந்து 3 நிமிடங்கள் சூடு செய்து அடுப்பை அணைத்து விடுங்கள். பின்பு இந்த பவுலை எடுத்து ஓரமாக வைத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இதில் 1 ஸ்பூன் அளவு அலோ வேரா சேர்த்து நன்றாக கலந்தால் கிரீம் போல நமக்கு ஒரு ஜெல் கிடைத்திருக்கும். இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம். வெளியில் வைத்தாலே இது 20 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதை எப்படி பயன்படுத்துவது. இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி துடைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த ஜெல்லை தொட்டு உங்களுடைய கண்ணில் கருவளையம் இருக்கும் இடத்தில் லேசாக அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

அப்படியே கண்ணை சுற்றி இந்த க்ரீமை ஜென்டிலாக ஒரு நிமிடம் போல மசாஜ் செய்து விட்டு, அப்படியே தூங்கச் செல்லலாம். மறுநாள் காலை எப்போதும் போல முகம் கழுவிக் கொள்ளலாம். இதே போல 3 நாட்கள் இந்த ஜெல்லை கண்களுக்கு கீழே போட்டு பாருங்கள். மூன்று நாட்கள் கழித்து வித்தியாசம் என்ன என்பதை, முகம் பார்க்கும் கண்ணாடி உங்களுக்கு சொல்லும்.

கண்ணுக்கு கீழே மட்டும் தான் இந்த ஜெல்லை பயன்படுத்த வேண்டுமா? நிச்சயம் கிடையாது. உங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கம் நீங்க வேண்டும் என்றாலும் இந்த ஜெல்லை முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளலாம். இந்த ஜெல்லை சீரம் போல அப்ளை செய்ய வேண்டும். நிறைய எடுத்து அப்பிக் கொள்ளக்கூடாது. ஒரு விரலில் இந்த ஜெல்லை தொட்டு முகத்தில் ஆங்காங்கே சிறிய புள்ளிகள் வைத்து அப்படியே தேய்த்து விடவேண்டும். முகத்தில் போட்டதே தெரியக்கூடாது. அந்த அளவிற்கு மிக மிக குறைவாக இந்த ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.

கண்ணுக்குக் கீழே மிகவும் மிருதுவான பகுதி அந்த இடத்தில் எந்த க்ரீமையும் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. 3 நாட்களில் இருந்து 5 நாட்கள் வரை இந்த ஜெல்லை கண்களுக்கு கீழ் பயன்படுத்திவிட்டு, அதன் பின்பு நிறுத்திவிட வேண்டும். இந்த ஜெல்லை மற்றபடி முகச்சுருக்கம் நீங்க, கை சுருக்கம் நீங்க, தொடர்ந்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -