கண் திருஷ்டி நீங்க நிலைவாசல் பரிகாரம்

nilai vasal bhairavar
- Advertisement -

இந்த கண் திருஷ்டியை போன்ற கொடிய சக்தி உலகிலே இல்லை என்றே சொல்லலாம். ஒருவரின் தீய பார்வையும் பொறாமை எண்ணங்களும் ஒருவரின் வாழ்க்கையே ஒன்றும் இல்லாமல் செய்து விடக் கூடிய ஆற்றல் கொண்டது. நன்றாக வாழ்ந்து கொண்டு இருந்த குடும்பங்கள் பல இருந்த இடம் தெரியாமல் கூட போய் விடும். அத்தகைய கொடிய அரக்கன் என்று இந்த கண் திருஷ்டியை சொல்லலாம்.

அப்படியான கண் திருஷ்டியில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் பல எளிய பரிகார முறைகளை கையாண்டார்கள். அதில் சிலவற்றை இப்போது இந்த ஆன்மீகம் குறித்த குறிப்பு தெரிந்து கொண்டு நம்முடைய குடும்பத்தையும் எந்த கண் திருஷ்டி தீய எண்ணங்களில் இருந்து காப்பாற்றி கொள்ளலாம்.

- Advertisement -

கண் திருஷ்டி நீங்க பரிகாரம்

ஒருவர் ஒருவருக்கோ அல்லது அந்த குடும்பத்திற்கு கண் திருஷ்டி விழுந்து விட்டால் தீராத வியாதிகள் வந்து கொண்டே இருக்கும். பணம் வீண் விரயம் ஆகும். எந்த வேலையும் நிரந்தரமாக செய்ய முடியாது. ஏன் வேலை செய்ய வேண்டும் என்று எண்ணம் கூட தோன்றாது. வீட்டில் சதா சர்வ காலம் சண்டையும் சச்சரவுமாக நிம்மதியே இல்லாமல் இருக்கும். இவையெல்லாம் கண் திருஷ்டிக்கான முக்கிய அறிகுறிகள்.

இதற்கு ஒரு சிறிய சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டு அடுப்புக்கரியை கட்டாயமாக இதை நீங்கள் தயார் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் நான்கு பூண்டு பற்கள் சேர்த்து கொள்ளுங்கள். மேலும் சிறிதளவு சாம்பிராணி பொடியை தூள் செய்து இவை மூன்றையும் ஒன்றாக வைத்து கட்டி நிலை வாசலில் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன் கட்டி விடுங்கள்.

- Advertisement -

ஒரு வாரம் வரை இது அப்படியே இருக்க வேண்டும். அடுத்த வாரம் இதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு மீண்டும் அதே சிகப்பு நிற துணியில் இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து கட்டி விடுங்கள். இந்த பொருள் உங்கள் வாசலில் இருக்கும் போது எந்த கண் திருஷ்டியோ தீய சக்தியோ எதிர்மறை ஆற்றலும் உங்களை தாக்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்து இன்னொரு முறை இதுவும் மிகவும் சக்தி வாய்ந்த முறை தான். இதற்கு வெண்கடுகை பயன்படுத்துங்கள். இது பைரவருக்கு மிகவும் உகந்த பொருளாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி குபேர பூஜைகள் இந்த வெண்கடுகு இல்லாமல் செய்வதே கிடையாது. எதிர்மறை ஆற்றலை போக்கவும் நேர்மறை ஆற்றலை உருவாக்கவும் வெண்கடுகு போல் ஒரு அற்புதமான வழி இல்லை.

- Advertisement -

வீட்டில் வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ இந்த வெண்கடுடன் மருதாணி விதைகளை சேர்த்து சாம்பிராணி தூபம் போடுங்கள். இந்த தூபம் வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். மருதாணி விதையில் லக்ஷ்மி தாயார் வீற்றிருப்பதாக ஐதீகம் உண்டு. இந்த சாம்பிராணி தூபத்தை வெள்ளிச் செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களில் கட்டாயமாக போடுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்ந்து செல்வம் பெருக மிளகு பரிகாரம்

கண் திருஷ்டியை போக்கிக் கொள்ள பல வழிமுறைகள் இருந்தாலும் இந்த வழிமுறைகள் மிகவும் எளிமையானது. அதே நேரத்தில் கண் திருஷ்டி கழிவதுடன் நம்முடைய செல்வ வளத்தையும் அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் இதை செய்து நல்ல முறையில் தளம் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -