படுக்கையறையில் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தால் உங்களை பிடித்திருக்கும் பீடை, தரித்திரம் விலகி விடும்.

bed room glass
- Advertisement -

மகிழ்ச்சியான குடும்பமே நிறைவான குடும்பம். இன்றைய சூழ்நிலையில் இப்படியான வாசகங்களை படிக்கவும் பார்க்கவும் மட்டுமே முடிகிறது. பலருடைய வாழ்க்கை நிம்மதி இழந்து மகிழ்ச்சி இல்லாமல் தான் இருக்கிறது. இதற்கு பலவகை காரணங்கள் இருந்தாலும் முக்கியமானதாக கருதப்படுவது கண் திருஷ்டி, தீய எண்ணங்கள், பிறரால் ஏவப்படும் தீய செயல்கள் தான்.

ஒரு மனிதன் நல்ல முறையில் நிம்மதியாக வாழ்ந்தால் அது பிறருக்கு பிடிப்பதில்லை. பிறர் நல்ல முறையில் வாழ்வதை பார்த்து சந்தோஷப்படும் மனநிலை பெரும்பாலான மனிதருக்கு வாய்க்கவில்லை. இதனால் அவர்களுடைய வயிற்றெரிச்சல் தீய பார்வை, தகாதவைகளை செய்வது எல்லாம் ஒரு குடும்பத்தையே நாசப்படுத்துகிறது. அதை சரி செய்வதற்கான எளிய பரிகாரத்தை இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற

வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற வேண்டுமெனில் முதலில் வீட்டில் இருப்பவர்களுடைய சிந்தனையும் செயலும் தெளிவடைய வேண்டும். அதற்கு அவர்களை சுற்றி நேர்மறை எண்ணங்கள் உருவாக வேண்டும். இதற்கு வீட்டில் காலை மாலை விளக்கு ஏற்றுவது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்தாதாக பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

இவற்றையெல்லாம் செய்வதோடு இந்த பரிகாரத்தையும் செய்து கொள்ளுங்கள். ஒரு குடும்பத்தில் நிம்மதி இல்லை, பிரச்சனை என்றால் அது முதல் கணவன் மனைவி இடையே தான் தொடங்கும். இங்கு ஏற்படும் சிறு சிறு பூசல்கள் தான் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும். இதை சரி செய்ய இந்த பரிகாரம் சிறந்த தீர்வு என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதற்கு ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு எலுமிச்சை பழத்தை போட வேண்டும். இந்த எலுமிச்சை பழம் புள்ளிகள் இல்லாத பழமாக இருக்க வேண்டும். இதை படுக்கையறையில் எங்காவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். மூன்று நாள் வரை அங்கிருக்க வேண்டும். மூன்றாவது நாள் எலுமிச்சை பழத்தை தூக்கி போட்டு விட்டு தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியத்தில் வெற்றி அடைய தீப பரிகாரம்

அடுத்து இதே போல் புதிதாக வேறு தண்ணீர் ஊற்றி எலுமிச்சை பழத்தை போட்டு விடுங்கள். இதனால் வீட்டில் எப்போதும் நேர்மறை எண்ணங்களை நிறைந்து இருக்கும். கணவன் மனைவி பிரச்சனைகள் நீங்கி நல்லவைகள் நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எலுமிச்சை கனிக்கு எப்பொழுதுமே தீயவற்றை அழிக்கும் சக்தி உண்டு. இது அப்படியான ஒரு பரிகாரமே நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -