நினைத்த காரியத்தில் வெற்றி அடைய தீப பரிகாரம்

pachai karpoora deepam
- Advertisement -

ஒருவர் மனநிறைவுடன் தன்னுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அவர் நினைத்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும். நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அதே சமயம் நியாயமான நம் தகுதிக்கு ஏற்ற காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு என்று பல பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு எளிய தீப பரிகாரத்தை தான் இன்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த ஒரு பரிகாரத்தை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த பரிகாரத்தை முழு மனதோடு செய்தால் தான் அதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் தெய்வ வழிபாடு என்பது நடக்கிறது. அந்த வகையில் இந்த பரிகாரத்தை நாம் மனதார செய்யும் பொழுது நமக்கு எண்ணில் அடங்காத நல்ல பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். அவை வெற்றிலை, பச்சை கற்பூரம், தேங்காய் எண்ணெய். ஒரு சிறிய தாம்பாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு வெற்றிலையை வைத்து, அதன் மீது ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரே ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயை அதில் விட்டு அந்த பச்சை கற்பூரத்தை ஏற்ற வேண்டும்.

இவ்வாறு ஏற்றும் பொழுது நாம் எந்த கோரிக்கையை தெய்வத்திடம் வைக்கிறோமோ அந்த கோரிக்கையை தெய்வம் நிறைவேற்றுவதற்குரிய வழிகளை காட்டுவார். இந்த தீபத்தை நாம் தினமும் ஏற்ற வேண்டும். நம்முடைய கோரிக்கை நிறைவேறும் வரை அந்த ஒரு கோரிக்கையை மட்டுமே முன்வைத்து இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றுவதால் தெய்வீக சக்தி என்பது நம் வீட்டில் அதிகரிக்கும். தெய்வீக சக்தி அதிகமாக இருக்கும் இடத்தில் எந்த வித தீய சக்திக்கும் இடம் இருக்காது. நாம் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நோய் நொடிகள் எதுவும் அண்டாது. குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் பெருகும் என்று பல நல்ல விஷயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

வெற்றிகளை தரக்கூடியதாக தான் வெற்றிலை திகழ்கிறது. பச்சை கற்பூரம் மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருத்தியதாகவும், தெய்வீக நடமாட்டம் உருவாக்கக்கூடிய வாசனைப் பொருளாகவும் திகழ்கிறது. தேங்காய் என்பது தெய்வத்திற்காகவே படைக்கப்பட்ட ஒரு அமுதசுரபி. அதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையை நாம் இதற்கு உபயோகப்படுத்தும் பொழுது நமக்கு பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். மேலும் தேங்காய் எண்ணெய் விநாயகருக்குரிய எண்ணையாக கருதப்படுவதால் முழுமுதற் கடவுளான விநாயகரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: திருமண தடை விலக கருப்பு உப்பு பரிகாரம்

முழு நம்பிக்கையுடன் நாம் செய்யும் ஒரு சிறிய செயலாக இருந்தாலும் அதற்கு அந்த பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்த தீப வழிபாட்டை தினமும் முழு மனதுடன் நம்பிக்கையுடன் செய்து நம் வாழ்வில் பல வெற்றிகளையும், தெய்வத்தின் அருளையும் பெற்று நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வோம்.

- Advertisement -