உங்களை தொடரும் பல பிரச்சனைகளுக்கு இதை நீங்கள் தவிர்த்தாலே போதும். மலை போன்ற துன்பம் கூட பனி போல மாறி விடும்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டம் என்பது மிகவும் சிக்கலான ஒன்று. ஒரு சிலர் நாம் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைத்து நம்மிடம் பேசுவார்கள், பழகுவார்கள், தெரிந்தும் நாம் அவர்களிடம் இருந்து விலக முடியாது. இப்படிப்பட்ட நபர்கள் நாம் அலுவலகத்திலும் இருக்கலாம், நம் வீட்டின் அருகிலும் இருக்கலாம், ஏன் நம் உறவுகளாக கூட இருக்கலாம். இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அப்படிப்பட்டவர்களின் இந்த தீய பார்வையில் இருந்து தப்பித்து நல்ல முறையில் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து பதிவு தான் இது.

எந்த ஒரு மனிதனும் நல்ல நிலைமைக்கும சாதாரணமாக வந்துவிடவே முடியாது. ஒவ்வொரு படி ஏறவும் அத்தனை துன்பமும், துயரமும், கடின உழைப்பும் பட்டால் மட்டுமே வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை எட்ட முடியும். இது நல்ல முறையில் வாழுபவர்களுக்காக கூறுவது. சிலர் ஏமாற்றி அடுத்தவரை தள்ளிவிட்டு முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் அவர்களை எண்ணி நீங்கள் ஒருநாளும் கவலைப்பட வேண்டாம் எத்தனை வேகமாக முன்னேறுகிறார்களோ அத்தனை வேகமாக விழவும் செய்வார்கள்.

- Advertisement -

வாழ்க்கையில் கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை கூட இந்த தீய எண்ணம் கொண்டவர்களின் பார்வையானது, அவர்களின் முன்னேற்றத்தை பெருமளவு தாக்கி விடும். பில்லி, சூனியம், செய்வினை இவை எல்லாம் விட அதிக கெடுதல் வாய்ந்தது இந்த கண் திருஷ்டி. ஒருவர் பார்த்து ஐயோ இவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று நினைத்தாலே போதும், அவர்களுக்கு அடுத்தடுத்து நஷ்டங்களாக வர ஆரம்பிக்கும்.

இதை எப்படி சமாளிப்பது என்றால் இது போன்றவர்களை முதலில் பார்த்து பேசுவதை தவிர்த்து விடுங்கள். இவர்களின் கண்பார்வை நேரடியாக நம் கண்களை பார்ப்பது தவிர்த்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும். அவர்கள் நம் கண் களை உற்றுப் பார்க்கும் போது அவர்களின் எதிர் மறை எண்ணங்களை நம் கண்கள் ஈர்த்து விடும். ஆகையால் தான் இதற்கு கண் திருஷ்டி என்று பெயர் . அதற்காக யாரைப் பார்த்தாலும் கண்ணை மூடிக் கொண்டு பேசிவிட முடியுமா என்ன? இந்த கேள்வியும் வரத்தானே செய்கிறது. கண்ணை திறந்து கொண்டு இருந்தாலே வாழ முடியாத இந்த காலத்தில் கண்ணை மூடிக் கொண்டால் கேட்கவே வேண்டாம். அதற்கு ஒரு சின்ன பரிகாரம் இருக்கிறது அதையும் இந்த பதிவில் பார்த்து விடுவோம்.

- Advertisement -

அது வேறு ஏதும் இல்லை மிளகு. பச்சை கற்பூரம் பரிஹாரம் தான் . மிளகுக்கு நிகரானது எதுவும் இல்லை எதிரியின் வீட்டிற்கு கூட மிளகு இருந்தால் தைரியமாக செல்லலாம் என்று பழமொழியை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் என்றால் அத்தனை சக்தி வாய்ந்தது மிளகு. இந்த நம் முன்னோர்கள் எதையும் சாதாரணமாக சொல்லி விடவும் இல்லை செய்து விடவும் இல்லை அவர்கள் செய்த இந்த ஒரு சின்ன பரிகாரம் தான் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் இருந்து நம்மையும் காக்க போகிறது

அதற்கு நீங்கள் முதலில் ஒரு வெள்ளை துணி எடுத்துக் கொள்ளுங்கள் சின்னதாக இருந்தால் போதும். அதில் ஆறு மிளகையும் கொஞ்சம் பச்சை கற்பூரம் சேர்த்து சிறிய மூட்டை போல் கட்டி உங்கள் இரண்டு புருவத்தின் இடையில் உள்ள அந்த மையப்புள்ளியில் இரண்டு நிமிடம் வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விடுங்கள். இது போல வாரம் ஒரு முறை செய்யும் போது உங்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்வர்களின் தீய எண்ணங்களை இந்த மிளகும், பச்சைக் கற்பூரமும் எடுத்து விடும். இதை வாரம் ஒரு முறை மறக்காமல் செய்து விடுங்கள். இந்த எந்த கிழமையில் செய்தாலும் பரவாயில்லை இந்த மூட்டையை மட்டும் நீங்கள் மாற்றிக் கொண்டே இருங்கள். ஒரு முறை பயன்படுத்திய சேர்ந்த மூட்டையை அடுத்த முறை பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -

நம் மீது இவர்கள் பொறாமையில் இருக்கிறார்கள் இவர்கள் சரியானவர்கள், தவறானவர்கள் என்று நமக்கு பார்த்த உடனே தெரியும். அவர்களின் பார்வை நேரடியாக நம் கண்களில் படாதவாறு தவிர்த்து விடுதல் நல்லது. அடுத்தது எந்த மூட்டை வைத்து இது இரண்டுமே மிக மிக எளிய பரிகாரம் தான். இதை நீங்கள் செய்தாலே போதும் அந்த கொடுமையான கண் திருஷ்டிகளில் இருந்து தப்பித்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: பூஜையில் அர்ச்சிக்க சிறந்த பூவாக சாஸ்திரம் சொல்வது என்ன தெரியுமா? இந்த பூவால் மட்டும் அர்ச்சனை செய்தால் நீங்கள் வேண்டிய வேண்டுதல் உடனே நிறைவேறுமாம்!

வாழ்க்கையில் நீங்கள் பெரிய அளவில் முன்னேற வேண்டும் என்றால் இந்த சின்ன விஷயத்தை சரி செய்து கொள்ளுங்கள். இதிலிருந்து தப்பித்தல் போதும் உங்களின் வாழ்க்கை வளமாகும் இல்லறம் சிறப்பாக அமையும் அனைத்து நம்மையும் நம்மை தேடி வரும்.

- Advertisement -