கண் திருஷ்டி போக்கும் தேங்காய் பரிகாரம்

thengai pariharm
- Advertisement -

ஒருவரின் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய தடைகளுக்கு மிகவும் முக்கியமான காரணமாக திகழ்வது கண் திருஷ்டி தான். ஒருவருக்கு கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டால் அவர்களுடைய வளர்ச்சியில் தடைகள் ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் வீட்டில் சந்தோஷம் என்பது இருக்கவே இருக்காது. நிம்மதியற்ற சண்டை சச்சரவுகள் நிறைந்த இல்லமாகவே அந்த வீடு திகழும். மேலும் உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படும். இப்படிப்பட்ட பாதிப்புகள் அனைத்தையும் நீக்குவதற்கு தேங்காயை நிலை வாசலில் எந்த நாளில் எப்படி கட்ட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கண் திருஷ்டியை நீக்குவதற்கு பல பரிகாரங்கள் இருந்தாலும் ஒரு சில பரிகாரங்கள் நல்ல பலனை தரக்கூடிய பரிகாரங்களாக இருக்கும். அதிலும் குறிப்பாக எந்த கிழமையில் எந்த நேரத்தில் கண் திருஷ்டியை கழிப்பது என்று இருக்கிறது. அதை வைத்து நாம் அந்த நேரத்தில் செய்தால் தான் அதற்குரிய பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -

கண் திருஷ்டி நீக்க தேங்காய் பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு நல்ல தேங்காய் தேவைப்படும். அந்த தேங்காயை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். பிறகு சுத்தமான மஞ்சளில் பன்னீரை ஊற்றி நன்றாக குலைத்து தேங்காய் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காயில் கண் இருக்கும் பகுதியில் 3 குங்கும பொட்டை வைக்க வேண்டும். பிறகு இந்த தேங்காயை ஒரு சிவப்பு நிற துணியில் கட்டி நிலை வாசலில் கட்டிவிட வேண்டும்.

இந்த பரிகாரத்தை வளர்பிறையில் வரக்கூடிய நவமி நாள் அன்று தான் செய்ய வேண்டும். பிறகு தினமும் நாம் பூஜை செய்யும் பொழுது கற்பூர தீப தூப ஆராதனை காட்டுவோம் அல்லவா? அப்பொழுது அந்த தேங்காய்க்கும் காட்ட வேண்டும். நிலை வாசலில் கட்டும் பொழுது எக்காரணத்திற்கு கொண்டும் நிலை வாசலில் ஆணி அடிக்கக் கூடாது. ஏனென்றால் நிலைவாசல் என்பது மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. நிறைவாசலுக்கு மேலே ஆணி அடித்து அதில் நாம் இந்த தேங்காயை கட்டிவிடலாம்.

- Advertisement -

மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். பூ போட வேண்டும். இதில் இருக்கும் தேங்காயை மாத மாதம் வளர்பிறை நவமி அன்று மாற்ற வேண்டும். பழைய தேங்காயை ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும். தடைப்பட்டு இருக்கும் காரியங்கள் அனைத்தும் எந்தவித தடையும் இன்றி நல்லபடியாக நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் மேலோங்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: கர்ம வினைகளை நீக்கும் முருகன் வழிபாடு

கண் திருஷ்டியை போக்க பல பரிகாரங்கள் இருந்தாலும் இந்த எளிமையான பரிகாரத்தை நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்கள் கண்டிப்பான முறையில் கண் திருஷ்டி பிரச்சினையில் இருந்து முழுமையாக வெளியில் வருவார்கள்.

- Advertisement -