நிலை வாசலுக்கு வெளியே இந்த 1 பொருளை நெருப்பில் போட்டு வெடிக்க வையுங்கள். கண் திருஷ்டி அனைத்தும் ஒரு நொடிப்பொழுதில் பஸ்பமாகிவிடும்.

dhupam
- Advertisement -

கஷ்டம் இல்லாத வீட்டில் கூட கஷ்டத்தை கொண்டுவந்து கலங்க வைக்க கூடிய சக்தி இந்த கண் திருஷ்டிக்கு உண்டு. அடுத்தவர்களிடம் இல்லாத ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் அந்த பொருளின் மூலம் உங்களை கண் திருஷ்டி தேடி வரும். பணம், தங்கம், அழகான ஆடைகள், அழகான நகைகள், அழகான குழந்தை, அழகான வாழ்க்கை, மகிழ்ச்சி, இப்படி எது இருந்தாலும் சரி உங்களைப் பார்த்து கண் திருஷ்டி வைக்க ஒரு கும்பல் உங்களை பின் தொடரத் தான் செய்யும்.

அந்த கண் திருஷ்டி ஆனது உங்களுக்கு ஒரு சில கஷ்டங்களை கொடுக்கத்தான் செய்யும். இதிலிருந்து தப்பிக்க அந்த கண் திருஷ்டியில் இருந்து விடுபட என்னென்ன பரிகாரங்களை சுலபமாக நாமே நம் கையால் செய்து கொள்ளலாம் என்பதைப் பற்றிய சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வாரம் தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போட வேண்டும். வெள்ளி செவ்வாய் இந்த 2 நாட்கள் போட்டால் கூட போதும். அப்படி சாம்பிராணி தூபம் போடும் போது அதில் வில்வ பொடி, அருகம்புல் பொடி இவைகளை சேர்த்து சாம்பிராணி தூபம் போடுங்கள்.

நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் கொஞ்சமாக நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் வெண்கடுகை போட்டு விடுங்கள். வாசலுக்கு வெளியிலேயே அந்த தூபத்தை வைத்து விடுங்கள். வென்கடுகு வெடித்து அதிலிருந்து சத்தமும் புகையும் வெளியாகும். இந்த தூபத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு மேல் போடலாம். அப்படி இல்லை என்றால் அமாவாசை இரவு ஒன்பது மணிக்கு மேல் போடலாம். இந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாள் இந்த தூபத்தை மாதத்தில் 1 முறை போட்டாலே போதும். வீட்டில் கண் திருஷ்டி நெருங்காது.

- Advertisement -

அடுத்தபடியாக வாரம்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் இருப்பவர்களுக்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கண் திருஷ்டி கழிக்க ஆள் இல்லாமல் இருக்கலாம். பெண்கள் தங்களுக்குத் தாங்களே உப்பை சுற்றி போட்டு கண் திருஷ்டி கழித்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் கடுகு மிளகாய் உப்பு இந்த மூன்று பொருட்களை ஒன்றாக வைத்து சுற்றி நெருப்பில் போட்டு தனக்குத்தானே திருஷ்டி கழிப்பது மிகவும் நல்லது.

குடும்பத்தோடு வெளியே செல்கிறீர்கள். உங்களுடைய உறவினர்கள் கண்கள், உங்கள் வீட்டின் அருகில் இருப்பவர்கள் கண்கள் நிச்சயம் உங்கள் மேல் விழும். குடும்பத்தோடு எவ்வளவு அழகாக சந்தோஷமாக வெளியே செல்கிறார்கள். இவர்களுடைய சந்தோஷத்திற்கு எந்த குறையும் வரக்கூடாது என்றும் சிலர் நினைப்பார்கள். எல்லோரும் கெட்ட எண்ணம் பிடித்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது அல்லவா. இருப்பினும் அடுத்தவர்களுடைய ஏக்கம் நமக்கு பிரச்சனையை தரக்கூடாது. குடும்பத்தில் யாராவது ஒருத்தர் கையில் ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பர்ஸில் வேப்ப இலையை வைத்துக்கொண்டால் கூட போதும். அது உங்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும். மேல் சொன்ன பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -