யார் நினைத்தாலும் உங்கள் வீட்டின் மீது கண் திருஷ்டியை வைக்க முடியாது. வரவேற்பறையில், தண்ணீரில் இந்த 3 பொருட்கள் இருந்தால்.

uruli3
- Advertisement -

கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது என்று சொல்லுவார்கள். நம்முடைய வீட்டின் சந்தோஷத்தையும், செல்வ செழிப்பையும், அழகான இல்லற வாழ்க்கையையும், பார்த்து அடுத்தவர்கள் கண் வைத்துவிட்டால் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக வர தொடங்கிவிடும். ஆகவே, அந்த கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க ஒரு ஆன்மீகம் சார்ந்த எளிமையான வழிமுறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வீட்டில், கண் திருஷ்டி படாமல் இருப்பதோடு சேர்த்து, வீட்டில் இருக்கும் வயதானவர்கள், முதல் குழந்தைகள் வரை எல்லோருக்கும் ஒரு மன நிம்மதி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பரிகாரம் தான் இது. மிக மிக எளிமையான பரிகாரம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்து முடித்து விடலாம்.

பரிகாரத்தை செய்வதற்கு முன்பு வழக்கம் போல சொல்லுவது தான். வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அழுக்கு துணிகளை வீட்டிற்கு உள்ளே மூலை முடுக்குகளில் போட்டு வைக்காதீங்க. வீடு எப்போதும் நறுமணமாக இருக்க வாசனை நிறைந்த சாம்பிராணி தூபம் ஊதுபத்தி ஏற்றி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாம்பிராணி வாசம் கூட வீட்டில் இருக்கும் எதிர்மறையாற்றலையும் கண் திருஷ்டியையும் விரட்டி அடிக்க கூடியது.

- Advertisement -

கண் திருஷ்டி விலக உருளி வைக்கும் முறை:
உங்களுடைய வீட்டில் இருக்கும் உரிலி எடுத்து இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் அகலமான பீங்கான் பவுல், கண்ணாடி பவுல், இப்படி ஏதாவது ஒரு பாத்திரத்தை பயன்படுத்தலாம். இல்லையென்றால் பித்தளை சொம்பு, செம்பு சொம்பு, இருந்தால் கூட பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். எவர்சில்வர், இரும்பு பாத்திரத்தை பரிகாரத்திற்கு பயன்படுத்தாதீங்க.

எடுத்திருக்கும் பாத்திரம் நிரம்ப குடிக்கின்ற நல்ல தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து புதினா இலைகள், சோம்பு ஒரு ஸ்பூன், ஏலக்காய் ஒன்று, மல்லிகை பூ, கிடைக்கும் சமயத்தில் மல்லிகை பூ 4, போட்டு இந்த தண்ணீரை அப்படியே வரவேற்பறையில் வைத்து விட வேண்டும். (உங்களுடைய வீட்டில் பச்சைக் கற்பூரம் இருந்தால் அதை ஒரு சிட்டிகை இந்த தண்ணீரில் கலந்து வைக்கலாம்).

- Advertisement -

மல்லிகைப் பூ கிடைக்காத சமயத்தில், உங்களுடைய வீட்டில் சாமந்திப் பூ இருந்தால் கூட இதில் போட்டுக்கொள்ளுங்கள். ஆனால் மல்லிப்பூ போடுவது லட்சுமி கடாட்சத்தை ஈர்க்கும். இருக்கும்போது அந்த மல்லி பூவை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த வாசனை நிறைந்த தண்ணீரை வரவேற்பறையின் ஏதாவது ஒரு பகுதியில் திறந்தபடி வைத்து விடுங்கள். இதில் இருக்கும் வாசம் வரவேற்பறை முழுவதும் நிறைந்திருக்கும். இந்த வாசத்தை சுவாசிக்கும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு அப்படி ஒரு மன நிம்மதி வரும். உங்களுடைய வீட்டிற்கு யாரோ விருந்தாளிகளோ, உறவினர்களோ, நண்பர்களோ வராங்க. நல்ல எண்ணத்தோடு பலர் வரலாம். ஆனால் சிலர் நம் வீட்டை நோட்டம் பார்ப்பதற்காகவே கெட்ட எண்ணத்தோடு வருவார்கள்.

- Advertisement -

அப்படி எதிர்மறையான சிந்தனையோடு அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தாலும் இந்த புதினா சோம்பு ஏலக்காய் வாசத்தை சுவாசிக்கும் போது அவர்களுக்கு ஒரு மன நிம்மதி ஏற்படும். கெட்ட எண்ணம் கூட நல்ல எண்ணமாக மாறும். (சில பேர் நம் வீட்டிற்கு வந்து சென்ற பிறகு, அடுத்த இரண்டு நாட்களில் பிரளயமே வெடிக்கும். அந்த அளவுக்கு அவர்களுடைய கண்கள் மோசமானதாக இருக்கும்).

உங்கள் குடும்பத்திற்கு அவர்கள் கெடுதல் செய்வதற்காகவே வீட்டிற்குள் நுழைந்தாலும், அந்த கெடுதலை மறக்கடிக்கச் செய்யும் சக்தி இந்த வாசத்திற்கு இதற்கு உண்டு. பாசிட்டிவ் எனர்ஜி அவ்வளவு தாங்க. இந்த தண்ணீரை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றினால் கூட போதும். அதாவது உங்கள் வீட்டில் தண்ணீர் அடிக்கடி தூசி படிந்து அசுத்தம் ஆகும் என்றால் தினந்தோறும் மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொள்வது நல்லது.

இதையும் படிக்கலாமே: நீங்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்ட வேண்டுமா? யாருக்கும் தெரியாமல் இதை மட்டும் செய்து விடுங்கள். அதிர்ஷ்டத்தை வழங்கும் அற்புதமான பரிகாரம்.

உங்களால் முடியும் என்றால் சிறிய அழகான தொட்டியில் இரண்டு புதினா இலைகளை நட்டு வளர்த்தாலும், அது வீட்டிற்கு பாசிட்டிவ் எனர்ஜியை நல்லதை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதை எடுத்து சமைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். சின்ன குறிப்பு. பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி தரும். முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -