வீட்டில் இவ்வளவு கண் திருஷ்டியா இருக்குது? தெரிந்து கொள்ள இதைத்தான் செய்யணும்.

milagai
- Advertisement -

வாழ்க்கையில் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவன் அழிந்து போவதற்கு முதல் காரணம் இந்த கண் திருஷ்டி தான். கண்பார்வைக்கும் அடுத்தவர்களுடைய எண்ணத்திற்கும் அத்தனை ஒரு பவர். நெருப்பாக நம்மை பொசுக்கி விடும். நம்முடைய உடல் பஞ்ச பூதங்களால் ஆனது என்று சொல்லுவார்கள். அதில் கண்களுக்கு நெருப்பு என்று சொல்லப்பட்டுள்ளது.

பொறாமை எண்ணத்தோடு ஒருவன், இன்னொருவனை பார்த்தால் முடிந்தது. அந்த நெருப்பில் பொசுங்கிதான் போக வேண்டும். இதை அனுபவபூர்வமாக நாம் நிறைய பேர் உணர்ந்தும் இருப்போம். நன்றாக வியாபாரம் போய்க் கொண்டிருந்த கடை, திடீரென்று நஷ்டத்தில் விழுந்தது. நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் திடீரென்று கஷ்டப்படுகிறது.

- Advertisement -

இப்படி நம்முடைய வாழ்க்கையை பொசுக்கக் கூடிய அந்த கண்திருஷ்டியை பொசுக்க ஒரு பரிகாரம் இருக்கிறது. இந்த பரிகாரத்தை செய்தால் நம் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியும் நீங்கும். நம் வீட்டில் எவ்வளவு அதிகமாக கண்திருஷ்டி இருக்கிறது என்பதையும் நம்மால் உணர முடியும். அது என்ன பரிகாரம் அந்த பரிகாரத்தை எப்படி செய்வது? ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கண் திருஷ்டி நீங்க மிளகாய் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் கிலோ கணக்கில் தான் மிளகாய் வாங்க வேண்டும். உங்களுடைய வீடு மீடியம் சைஸில் இருக்கிறது என்றால் ஒரு கிலோ மிளகாய் வாங்கிக் கொள்ளலாம். கொஞ்சம் பெரிய வீடு இரண்டு பெட்ரூம் இருக்கிறது எனும் பட்சத்தில் இரண்டு கிலோ மிளகாய் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதே போலத்தான் தொழில் செய்யும் இடத்திற்கும் மிளகாய் வாங்க வேண்டும். சின்ன கடையாக இருந்தால் 1 கிலோ மிளகாய் போதும். கொஞ்சம் பெரிய கடையாக இருந்தால் 2 கிலோ மிளகாய், அதிலும் கொஞ்சம் பெரிய அளவில் ஏதாவது தொழிற்சாலை வைத்திருக்கிறீர்கள். பத்து டெய்லர் மெஷின் போட்டு இருக்கீங்க அப்படின்னா கொஞ்சம் கூடுதலாக மூன்று கிலோ மிளகாயை வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த மிளகாயை சாக்கு பையில் போடவும். மிளகாய் பைக்கு உள்ளே ஒரு எலுமிச்சம் பழத்தை போடவும். பூஜை அறையில் எலுமிச்சம்பழத்தை வைத்து, குலதெய்வத்தை நினைத்து அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து, அந்த மிளகாய் பையில் போட்டு விடுங்கள். பிறகு ஒரு கட்டி கற்பூரம் பெருசாக கிடைக்கும். மெழுகு கற்பூரம் கிடையாது.

- Advertisement -

பூஜை பொருட்கள் விற்கும் கடையில் கட்டி கற்பூரம் என்று கேட்டால் கொடுப்பார்கள். கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும் பெரிய அளவில் இருக்கும் கட்டி கற்பூரத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதையும் அந்த மிளகாய் பைக்குள் போட்டு, உங்களுடைய வலது கையை அந்த மூட்டையை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள்.

மேல் பக்கம் ஒரு நூல் போட்டு அந்த பையை கட்டிக் கொண்டாலும் சரிதான். இந்த கையை எடுக்கவே கூடாது. மிளகாயை பையில் இருந்து பிரிக்கவும் கூடாது. அப்படியே மிளகாய் மூட்டையை மேல் பக்கம் முடிச்சில், உங்கள் கையில் பிடித்துக் கொண்டு இந்த மிளகாய் மூட்டையை கொண்டு போய் உங்களுடைய வீட்டின் நான்கு மூலைகளிலும் வைத்து எடுக்க வேண்டும்.

நான்கு திசைகள் இருக்கிறது அல்லவா, அந்த இடத்தில் வைத்து எடுங்கள். வீட்டுக்கு மேல் பக்கத்திலிருந்து, கீழ் பக்கம் இந்த மிளகாயை நான்கு திசைகளிலும் வைத்து வீட்டிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும். வீட்டிற்கு வெளியே கொண்டு வந்த இந்த மிளகாய் பையை கீழே வைக்கக்கூடாது.

கையை அந்த பையில் இருந்து எடுக்கக் கூடாது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடத்திற்கு சென்று மிளகாய் பையில் இருக்கும் கட்டி கற்பூரத்தை கொளுத்தி விடவும். அந்த நெருப்பில் இந்த மிளகாய் எலுமிச்சம் பழம் எல்லாம் எரிந்து விட வேண்டும். உதாரணத்திற்கு ஒரு கிலோ மிளகாயை பையில் போட்டு கையில் வைத்துக் கொண்டு உங்கள் வீட்டு நாலு மூலைகளிலும் வைத்து எடுத்து விட்டீர்கள்.

உங்களுடைய வீட்டில் நிறைய கண் திருஷ்டி இருந்தால் இந்த ஒரு கிலோ மிளகாய் கூடுதலான பாரத்தை உங்களுக்கு கொடுக்கும். ஒரு கிலோ மிளகாயை உங்களால் தூக்கவே முடியாது. இரண்டு கிலோ மிளகாய் போல தோன்றும். அந்த அளவுக்கு கண் திருஷ்டியை அந்த மிளகாய் தன்னகத்தை ஈர்த்துக் கொள்ளும். நீங்களே கண்டுபிடிப்பீங்க.

உங்க வீட்டில எவ்வளவு கண் திருஷ்டி இருந்தது என்று. இதே போல தான் தொழில் செய்யும் இடத்திலும் நான்கு மூலையில் மிளகாயை வைத்துவிட்டு எடுத்துக்கொண்டு போய் எரிக்கலாம். மாதம் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம். அமாவாசை நாளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுடன் கூட ஒருத்தர் இருக்க வேண்டும். அப்போதுதான் பைக்கில் செல்ல வசதியாக இருக்கும். நீங்கள் இதை பைக்கில் மாட்டிக் கொண்டு எல்லாம் எடுத்துச் சென்று எரிக்கக் கூடாது. நீங்கள் கையில் இருந்து எடுத்த உடனேயே அந்த மிளகாய் பையை எரிக்கத்தான் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதேபோல கார் பைக் இவைகளுக்கு கூட நீங்கள் கண் திருஷ்டி எடுக்கலாம். இப்படி மாதம் தோறும் கண்திருஷ்டியை கழித்து விட்டால் கண் திருஷ்டியின் மூலம் உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த ரகசியம் மட்டும் தெரிந்தால் முருகனை இன்னைக்கே உங்க வீட்டுக்கு அழைத்து வரலாம்.

பின்குறிப்பு: இதை எரிக்கும் போது ஜாக்கிரதையாக ஏரிக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்கும் வகையில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. இந்த நெருப்பு வேறு இடத்திற்கு பரவி எந்த பாதிப்பும் கொடுக்கக் கூடாது. அதிலும் கவனம் தேவை.

- Advertisement -