இந்த ரகசியம் மட்டும் தெரிந்தால் முருகனை இன்னைக்கே உங்க வீட்டுக்கு அழைத்து வரலாம்.

murugan1
- Advertisement -

முதலில் இந்த வழிபாட்டு முறையை தெரிந்து கொள்வதற்கு முன்பு, நாம் ஒரு விஷயத்தை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். நிலம் வாங்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், பெயர் புகழ் செல்வம் உங்கள் பின்னால் வரவேண்டும் என்பதற்காக மட்டும் முருகப்பெருமான் கோவிலை நாம் எட்டி பார்க்க கூடாது.

எப்போதுமே எந்த நேரத்திலும் முருகனை மனதில் இருந்து மறக்க கூடாது. முருகா முருகா என்ற நாமத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். முருகன் நமக்கு வேண்டிய வரங்களை வாரி வாரி கொடுத்து விடுவார், தேவை எனும் போது மட்டும் நம்முடைய சுயநலத்திற்காக கடவுளை வழிபாடு செய்து விட்டு, தேவை முடிந்த பின்பு கழட்டி விடுவது ரொம்ப ரொம்ப தவறு.

- Advertisement -

இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரி இப்போது முருகப்பெருமானை வசியம் செய்து நம் வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். முருகப்பெருமான் நமக்கு வேண்டிய பெயர் புகழ் பதவி செல்வம் இவைகளை எல்லாம் கொடுக்க வேண்டும் என்றால் முருகப்பெருமானை நாம் செவ்வாய்க்கிழமைகளில் எப்படி வழிபாடு செய்ய வேண்டும், என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு தான் இது. தேவைப்படுபவர்கள் பதிவை முழுமையாக படித்து பலன் பெறலாம்.

பணம் தரும் முருகர் வழிபாடு

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டும். முருகனுக்கு மிகவும் பிடித்தமான வாசம் மருவு வாசம். சில பேர் இதை மருகு என்றும் சொல்லுவார்கள். பச்சை நிறத்தில் இலை போல இருக்கும். இதனுடைய வாசம் முருகனை வசியம் செய்யும். அந்த மருவு இலையை வாங்கி மாலையாக கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆறு ஆப்பிள் பழம் வாங்கிக் கொள்ளுங்கள். முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். ஆறு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, முருகப்பெருமானுக்கு இந்த ஆப்பிள் பழத்தை கொடுத்து மருவு இலையை கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

முருகப்பெருமானிடம் வேண்டிய வரங்களை கேளுங்கள். சிறிது நேரம் முருகன் கோவிலில் அமர்ந்து கண்களை மூடி மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாம் முருகன் தான் என்று நம்புங்கள் திரும்பி வீடு திரும்பும் போதும், முருகனை அழைத்துக்கொண்டு நீங்கள் வீட்டுக்கு திரும்பலாம். முருகன் உங்களுக்கு வசியம் ஆகிவிடுவார்.

- Advertisement -

செவ்வாய் கிழமை இந்த வழிபாட்டை கோவிலுக்கு சென்று செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் உங்கள் வீட்டில் உங்கள் பூஜை அறையில் இருக்கும் முருகனின் திரு உருவப்படத்திற்கு மருவு மாலை சாத்தி ஆறு ஆப்பிள் பழங்கள் வைத்து ஒரு விளக்கு, நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தாலும் நிச்சயம் முருகன் உங்களுக்கு வசியமாகி பொன் பொருள் பெயர் புகழ் பதவி எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

ஆறு வாரம் செவ்வாய்க்கிழமை நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் பணக்கஷ்டத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல காலம் பிறந்துவிடும். வேலை இல்லை பிரமோஷன் இல்லை வருமானம் நிரந்தரமாக இல்லை என்பவர்களுக்கும் நல்ல காலம் பிறக்கும். ஏதாவது ஒரு வகையில் முருகப்பெருமான் வந்து உங்களுக்கு உதவியை செய்து விடுவார்.

இதையும் படிக்கலாமே: குங்குமத்தை இதிலிருந்து எடுத்து நெற்றியில் வைத்தால் செல்வம் குவியும்.

எப்படி அவதாரம் எடுத்து முருகப்பெருமான் நேரில் வருவாரா. கிடையாது, மனித ரூபத்தில் பூலோகத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் சில முருகப்பெருமான்களால் உங்களுக்கு விடிவுகாலம் கட்டிவிடும்.

- Advertisement -