திருஷ்டி சுத்தும்போது இந்த 2 பொருளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கொடூர கண் திருஷ்டியும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும்.

- Advertisement -

வாழ்க்கையை சந்தோஷமாக நடத்திச் செல்லும்போது, திடீரென்று ப்ரலயமே உண்டாவது போல கஷ்டம் வந்தால், அதற்கு காரணம் கண் திருஷ்டி. யாரோ ஒருவரின் வயிற்றெரிச்சல் தான் நம்மை பாடாக படுத்துகிறது என்று அர்த்தம். ஆகவே, கூடுமானவரை உங்களுடைய குடும்ப சந்தோஷத்தை வெளி ஆட்களிடம் முழுசாக பகிர வேண்டாம். அடுத்தவர்களிடம் பொய்யாக பழகுவது போல இருந்தாலும், வேறு வழி கிடையாது. உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம். நமக்கு கிடைக்காத சொகுசான ஆடம்பர வாழ்க்கை, அடுத்தவர்களுக்கு கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். அவர்களைப் பார்க்கும்போது நம்மை அறியாமல் நம் மனதிற்குள் ஒரு ஏக்கம் வர செய்கிறது. அந்த ஏக்கம் தான் கண் திருஷ்டி.

ஆகவே, எல்லா மனிதர்களும் நல்ல மனிதர்களாகவே இருந்தாலும், இந்த ஏக்கம் என்பது இயல்பாக வரக்கூடிய ஒரு விஷயம். அதுவே அதிகப்படியான ஏக்கம் ஒரு மனிதனுக்கு வந்துவிட்டால், கண் திருஷ்டியாக மாறி அது நம்மை தாக்கி விடும்.

- Advertisement -

பொல்லாத கண் திருஷ்டியை விரட்டி அடிக்க வழி:
இன்னும் சில பேர் கொஞ்சம் எல்லையை தாண்டி பொறாமை பட்டு சந்தோஷமாக இருப்பவர்களை அழிக்க, எதிரிகளாக மாறிவிடுவார்கள். ஏவல், பில்லி, சூனியம் என்ற எதிர்மறை ஆற்றலை எல்லாம் ஏவி விடுவார்கள். இதெல்லாம் உண்மையா பொய்யா என்ற விஷயத்திற்குள் நாம் செல்ல வேண்டாம். ஆனால் நம் குடும்பத்திற்கு கஷ்டம் வராமல் இருக்க என்ன செய்வது என்று மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வோம். வாரம் ஒரு முறை மாதம் ஒருமுறை கண் திருஷ்டி கழிக்க வேண்டும்.

வாரம் ஒருமுறை வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் கண் திருஷ்டி கழிக்கவும். மாதம் ஒரு முறை வரக்கூடிய அமாவாசை தினத்தில் கண் திருஷ்டி கழிக்கவும். உங்கள் வீட்டு முறைப்படி நீங்கள் வெறும் உப்பு சுற்றி போட்டுக் கொண்டாலும் சரி, கற்பூரம் சுற்றி போட்டுக் கொண்டாலும் சரி, அல்லது பூசணிக்காய் சுற்றி உடைத்தாலும் சரி, எல்லா விஷயத்திற்கு முன்பும் இந்த இரண்டு பொருட்களை வீட்டில் ஏற்ற வேண்டும். இந்த புகை எதிர்மறை ஆற்றலை கண் திருஷ்டியை அழித்து விடும்

- Advertisement -

இந்த பரிகாரத்துக்கு நமக்கு தேவையான பொருள் 2. பச்சை கற்பூரம், தர்ப்பை புல். ஒரு சிறிய அகல் விளக்கில் ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரம் வைத்துவிட்டு, கொஞ்சமாக தர்பை புல்லை பொடிசாக நறுக்கி, அதில் போட்டு நெருப்பு மூட்டிவிடுங்கள். இதை வீடு முழுவதும் காண்பித்து, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை கண் திருஷ்டியை வெளியே விரட்டலாம்.

இதையும் படிக்கலாமே: விநாயகரை இந்த மூன்று பொருள் கொண்டு பிடித்து வைத்து வணங்கி வந்தால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கி ராஜ போக வாழ்க்கை வாழ்வது உறுதி.

வீட்டில் இருப்பவர்களை கிழக்கு பார்த்த வார அமர வைத்து அவர்களை சுற்றியும் திருஷ்டி கழிக்கலாம். இந்த முறையில் திஷ்டி கழித்தால் எவ்வளவு பெரிய கொடூர திருஷ்டியும் நம்மை விட்டோ, நம் வீட்டை விட்டு நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான ஆன்மீகம் பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -