விநாயகரை இந்த மூன்று பொருள் கொண்டு பிடித்து வைத்து வணங்கி வந்தால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கி ராஜ போக வாழ்க்கை வாழ்வது உறுதி.

vinayagar
- Advertisement -

ஒரு மனிதனுக்கு காலமும் நேரமும் நன்றாக இருந்தால் அவன் தொட்டது அனைத்தும் பொன்னாக மாறும். இந்த வார்த்தையை நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படி அமையாத பட்சத்தில் எதை செய்தாலும் அது சரியாக நடக்காது. இப்படியானா பிரச்சனை உள்ளவர்கள் முதலில் காலத்தையும் நேரத்தையும் நம் வசப்படுத்த வேண்டும். இந்த காரிய சித்தியை பெறுவதற்கான எளிய ஒரு பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தெய்வங்கள் அனைவருக்கும் முதன்மை தெய்வமாக விளங்கக் கூடியவர் விநாயகப் பெருமானே இவரை நாம் சித்தி விநாயகர் என்றும் அழைப்போம். அப்படிப்பட்ட இந்த விநாயகரை காரிய சித்திக்காக நாம் வழிபடுவதால் அந்த காரிய சித்தி நம் வசப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -

காரிய சித்தி பெற பரிகாரம்:
இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படுகின்றன. அவை விநாயகருக்கு உகந்த அருகம்புல் பொடி, பெண்கள் குளிக்க உபயோகப்படுத்தும் கிழங்கு மஞ்சள் பொடி அல்லது கஸ்தூரி மஞ்சள் பொடி, சுத்தமான தேன். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் தொடங்கலாம்.

விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து நீராடி வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு வீட்டு பூஜை அறைக்கு சென்று ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடி, ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு அதில் தேனை சிறிது சிறிதாக கலந்து பிள்ளையார் பிடிப்பது போல் பிடித்துக் கொள்ள வேண்டும். நாம் பிடித்த இந்த பிள்ளையாரை ஒரு தட்டில் வெற்றிலையை வைத்து, அதன் மேல் வைக்க வேண்டும். பிறகு எப்போதும் போல் நம்முடைய அன்றாட வழிபாட்டை மேற்கொண்டு நம் பிரார்த்தனைகளை வைக்கலாம்.

- Advertisement -

இவ்வாறு நாம் வைக்கும் பிரார்த்தனைகள் அனைத்தும் வெற்றி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நமக்கு இருக்கக் கூடிய காரிய தடங்கல்கள் அனைத்தும் தகர்த்தெறியப்பட்டு நம்முடைய காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும். நம் காரியம் வெற்றிகரமாக நடைபெறும் பொழுது நம்மால் வாழ்க்கையில் நல்ல ஒரு உயர்ந்த நிலைக்கு முன்னேற முடியும். இந்த பரிகாரத்தை நம்மால் இயன்ற அளவு தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும்.

இதையும் படிக்காலமே: உங்களைச் சுற்றி ஓர் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அனைத்தும் நொடி பொழுதில் காணாமல் போக இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும். துன்பக் கடலில் தத்தளிப்பவர்களின் துயர் நீக்கும் எளிமையான தீப பரிகாரம்.

இந்த பிள்ளையாரை நாம் வாரா வாரம் மாற்ற வேண்டும். அடுத்த வாரம் இதை நாம் செய்வதற்கு முன்பு பழைய வெற்றிலை மற்றும் அருகம்புல் பிள்ளையாரை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இதை நாம் தொடர்ந்து செய்து வர வேண்டும். அவ்வாறு நாம் தொடர்ந்து செய்வதால் ஒரு காரியத்தில் மட்டும் அல்லாமல் நாம் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் காரிய சித்தி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -