இந்த 1 பொருளை உங்கள் தலையை சுற்றிப் போடுங்கள். கோடான கோடி கடனும் 16 நாட்களில் அடையும்.

kadan
- Advertisement -

கைநீட்டி வாங்கிய கடனை, திருப்பி தர முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த கஷ்டம் எவ்வளவு பெரியது என்பது. வாழ்க்கையில் சந்தோஷமே ஒரு துளி கூட இருக்காது. இன்றைய சூழ்நிலையில் எல்லாவற்றையுமே இந்த பணம்தான் நிர்ணயிக்கின்றது. மனிதனுடைய நல்ல குணம், நன்றி கடன், உதவி செய்யும் குணம், நல்ல பண்புகள், கௌரவம் இவை எல்லாவற்றையும் தாண்டி முதலிடத்தை பிடித்திருப்பது இந்த பணம். அப்படி இருக்கும் போது நாமும் இந்த ஊரோடு ஒத்து வாழ்ந்துதான் ஆக வேண்டும். ‘பணம் இருந்தால் எல்லாம் நடந்து விடுமா’ என்ற பேச்சை விட்டுவிட்டு அந்த பணத்தை சம்பாதிப்பதற்கு என்ன வழி என்பதை நல்ல வழியில் சிந்திப்போம்.

கோடி கோடியாக பணத்தை குவித்து வைக்காமல் நமக்கு தேவையான அளவு மட்டும் பணத்தை சம்பாதித்து வைத்துக் கொண்டு, அடுத்தவர்களிடம் கடன் வாங்காத சூழ்நிலையை நம் குடும்பத்திற்கு கொண்டு வர வேண்டும். முதலில் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் இருவரும் மேல் சொன்ன விஷயத்தை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். சரி இப்போது இந்த கடனை வாங்கிடோம். அதை திருப்பிக் கொடுப்பதற்கு ஒரு ஜோதிட ரீதியான சுலபமான பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான ஒரு தானியம் கொள்ளு. இது கேதுவுக்கு உரிய தானியமாக சொல்லப்பட்டுள்ளது. நிறைய கடன் ஒருவருக்கு வாழ்நாளில் அதிகம் சேருவதற்கு காரணம், இந்த கேது கிரகமும் தான். ஆகவே ஜோதிட ரீதியாக, வாங்கிய கடனை சீக்கிரம் திருப்பித் தர இந்த கொள்ளை வைத்து நாம் பரிகாரம் செய்யலாம்.

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு ஒரு கைப்பிடி அளவு கொள்ளை எடுத்துக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். காலை 6:00 மணிக்கு சூரிய உதயத்தின் போது இந்த பரிகாரத்தை செய்வது அற்புதமான பலனை கொடுக்கும். கையில் இருக்கும் கொள்ளை 27 முறை உங்களுடைய தலையை சுற்ற வேண்டும். இப்படி சுற்றும் போது ஒவ்வொரு முறையும் உங்களுடைய கடன் தீர வேண்டும் என்று மனதில் சொல்ல வேண்டும். 27 முறை உங்கள் தலையை சுற்றிய அந்த கொள்ளை அப்படியே பறவைகள் சாப்பிடுவதற்கு வைத்து விடலாம். காக்கா புறா குருவி இப்படி எந்த பறவைகள் வேண்டும் என்றாலும் அதை சாப்பிடலாம்.

- Advertisement -

தொடர்ந்து 16 நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இதோடு சேர்த்து உங்களால் முடிந்த கொள்ளை வாங்கி தானம் கொடுங்கள். யாருக்கு தானம் கொடுப்பது. குதிரை வைத்திருப்பவர்களுக்கு தானம் கொடுக்கலாம். கோவிலில் கொள்ளு சுண்டல் செய்வதற்கு இந்த தானியத்தை தானம் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் கோவிலில் இருக்கக்கூடிய குருக்களுக்கும் ஒரு கிலோ அளவு கொள்ளு வாங்கி தானம் செய்வதில் தவறு கிடையாது.

உங்களுடைய ஜாதக கட்டத்தில் கிரகச்சாரத்தின் பிரச்சனை இருந்தாலும் கூட அதை உடனடியாக சரி செய்து, தோஷங்களை விளக்கி உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனையை படிப்படியாக குறைய இது ஒரு குறைந்த செலவில் சொல்லப்பட்டுள்ள எளிமையான பரிகாரம். நம்பிக்கையோடு ஒவ்வொருவரும் பின்பற்றி பார்க்கலாம். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

பின்குறிப்பு: உங்களுக்கே பணப் பிரச்சனை இருக்கிறது. நீங்களே அடுத்தவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும் தான். இருப்பினும் ரொம்பவும் பணத்திற்காக கஷ்டப்படுபவர்கள் யாராவது இருப்பார்கள் அல்லவா. நம்மை விட தாழ்ந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், அதை தவற விடாதீங்க. ஒரு 100 ரூபாய் கொடுத்து ஒருவருக்கு நீங்கள் மருத்துவ உதவி செய்தாலும் அது உங்களுடைய கடனை சீக்கிரம் குறைக்கும். முடிந்தவர்கள் இதையம் சேர்த்து முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -