உங்கள் வாழ்க்கை துணை, உங்களை வாழ்நாள் முழுவதும் அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களா? உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவர இந்த பரிகாரம் போதும்.

- Advertisement -

கணவன் மனைவிக்குள் வரக்கூடிய பிரச்சனைகளில் முதல் பிரச்சினையாக வந்து நிற்பது இதுதான். கணவன், மனைவிக்கு எப்போதுமே அடிமையாக இருக்க வேண்டும் என்று சில வீடுகளில் மனைவி நினைப்பார்கள். சில வீடுகளில் மனைவி, தனக்கு எப்போதுமே அடிமையாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பது உண்டு. இந்த பிரச்சனைக்கு தீர்வே கிடையாது. அடுத்தவர்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைப்பவர்களுடைய மனதை யாராலும் நிச்சயமாக மாற்ற முடியாது. ஆங்கிலத்தில் டாமினேஷன் மைன்ட் என்று இதை நாம் சொல்லுவோம்.

இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்களுடைய குடும்பத்தில் நிச்சயம் நிம்மதி இருக்காது. ஆணும் பெண்ணும் சமம். கணவனும் மனைவியும் சேர்ந்த, இரண்டு சக்கரமும் ஒரே மாதிரி சென்றால் தான் குடும்பத்தை சந்தோஷமாக நடத்திச் செல்ல முடியும் என்ற எண்ணம் இல்லாத குடும்பம் நிச்சயமாக நல்ல குடும்பமாக இருக்க முடியாது. சரி, இப்படிப்பட்ட பிரச்சனை உங்கள் வீட்டில் இருந்தால், உங்களுக்கான சுலபமான 2 பரிகாரங்கள் இதோ. இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஹோரையில் நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்கு ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி, அதில் 3 டைமண்ட் கற்கண்டுகளைப் போட்டு, திரி போட்டுத் தீபம் ஏற்றிவர கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் அகலும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். இது முதல் வழி.

இது தவிர இன்னொரு சுலபமான பரிகாரம். தாந்திரீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. மரிக்கொழுந்து, நாம் எல்லோருக்கும் தெரியும். இது வாசம் நிறைந்த ஒரு தாவரம் என்பது. பூஜை செய்யும்போது இறைவழிபாட்டிற்கு இந்த மரிக்கொழுந்தை வைத்தால் அத்தனை தெய்வ ஆகர்ஷன சக்தி கிடைக்கும். நம்மை சுற்றியிருக்கும் இறைசக்தியை வசியம் செய்ய கூடிய வாசம் இந்த மரிக்கொழுந்துக்கு உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்படிப்பட்ட மரிக்கொழுந்தை நல்ல விஷயங்களை வசியம் செய்வதற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் மனைவியாக இருந்து, உங்களுடைய கணவர் உங்களை அடக்கி ஆளவேண்டும். உங்களை அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், உங்கள் கணவரை நினைத்து கொஞ்சம் மரிக்கொழுந்தை உங்கள் தாலி சரடில் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். தினம் தினம் இந்த மரிக்கொழுந்தை புதியதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நீங்கள் கணவராக இருந்து, உங்களுடைய மனைவி உங்களுக்கு அடங்காமல், உங்களை அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், கணவன்மார்கள் கொஞ்சம் மரிக்கொழுந்தே ஒரு பேப்பரில் மடித்து உங்களுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்த பின்பு நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கை துணையின் நடவடிக்கையில் மாற்றத்தை பார்க்க முடியும்.

மேலே சொன்ன இரண்டு பரிகாரத்தையும் செய்தாலும் சரி, இரண்டில் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்து கொண்டாலும் சரி நன்மையே நடக்கும். ஆனால் நல்ல விஷயத்திற்காக மட்டும், உண்மையாகவே உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் மட்டும் தான், இந்த பரிகாரம் பலிக்கும். தவறாக எந்த விஷயத்திற்கும், இந்த பரிகாரத்தை பயன்படுத்த முடியாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -