மனைவி பேச்சுக்கு, மறுபேச்சு இனி கிடையாது. தினமும் சமையலில் கணவருக்கு இந்த 1 பொருளை சேர்த்து சாப்பிட்ட கொடுத்தாலே போதும். கணவனும் மனைவியும் காலம் முழுவதும் ஒற்றுமையாக வாழலாம்.

pudhina
- Advertisement -

கணவன் மனைவிக்குள் வரக்கூடிய பிரச்சனையை தீர்த்து வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வருவது என்பது இயற்கை தான். ஆனால் பிரச்சினைகள் வரும்போது தவறு யார் பக்கம் இருந்தாலும் சரி, மனைவி அந்த இடத்தில் தவறு செய்து இருந்தாலும், கணவர் அந்த இடத்தில் தவறு செய்து இருந்தாலும், ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து மன்னிக்கக் கூடிய சுமாவும் அவர்களிடத்தில் இருக்கவேண்டும். ஒரு பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றால், செய்த தவறுக்கான மன்னிப்பை அவர்களுக்கு கொடுத்து பாருங்கள். நிச்சயமாக அவர்கள் மனம் திருந்துவதற்கு இந்த மன்னிப்பு ஒரு தூண்டுகோலாக அமையும்.

fight2

தவறு செய்யும் ஒருவரை நம்மால் தண்டித்து அவ்வளவு சுலபமாக திருத்திவிட முடியாது. ஆனால் நாம் கொடுக்கக்கூடிய மன்னிப்பு, அவர்களை சீக்கிரத்தில் திரித்திவிடும். காரணம் குற்ற உணர்ச்சி. இவ்வளவு நல்ல மனைவிக்கு, இவ்வளவு நல்ல கணவருக்கு நாம் உண்மையாக இருக்கவில்லையே. அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி, அவர்களை நிச்சயமாக நல்லவர்களாக மாற்றும். இனிமே சண்டை வந்தால் தண்டனை கொடுக்காதீர்கள். மன்னிப்பு கொடுங்க. வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் தெரியும். இந்த ஒரு நல்ல விஷயத்தோடு இன்றைய பதிவுக்குள் செல்வோம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் உங்கள் கணவர் சரி இல்லை, உங்களுடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். வாழ்க்கையில் தவறான பாதைக்கு செல்கின்றார். உங்களுடன் கருத்து வேறுபாடு வருகிறது. வீட்டில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு இருந்து வருகிறது. வீட்டில் குழப்பங்கள் நிறைந்துள்ளது. நிம்மதி இல்லை எனும் பட்சத்தில் உங்களுடைய கணவரை உங்கள் சொல்படி கேட்டு நடக்க வைக்க, தினமும் உங்களுடைய வீட்டில் சமையலில் புதினாவை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

puthina

புதினாவில் செய்த பலகாரங்களை உங்களுடைய கணவருக்கு அடிக்கடி சாப்பிடக் கொடுங்கள். புதினா சட்னி, புதினா சாதம், புதினா டீ, இப்படி புதினாவை உங்களுடைய கணவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள், கோபங்கள் எதிர்மறையாக சிந்திக்கும் யோசனைகள், அனைத்துமே நேர்மறையாக மாறிவிடும். மனிதனுடைய இரத்தத்தில் இருக்கும் கெடுதலை நீக்கி, கெட்ட புத்தியை நல்ல புதிதாக மாற்றி, நேர்மறையாக சிந்திக்க வைக்கக்கூடிய திறன் கொண்டது இந்தப் புதினா என்று சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக, கணவன் மனைவி வசியத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் குப்பைமேனி வேர், குப்பைமேனி இலை. குப்பைமேனி செடியிலிருந்து ஒரு இலையைப் பறித்து ஒரு பேப்பரில் மடித்து உங்களுடைய வாழ்க்கைத் துணையை மனதார நினைத்து உங்களுடனே அந்த இலையை வைத்துக் கொள்ளுங்கள். இந்த குப்பைமேனி இலையை உங்கள் வாழ்க்கைத் துணையை நினைத்து, உங்களுடன் வைத்துக்கொண்டால், உங்களுடைய வாழ்க்கைத்துணை உங்கள் மீது அதிக அன்பு செலுத்துவார் என்று சொல்லப்பட்டுள்ளது.

kuppaimeni 1-compressed

குப்பைமேனி வேர் கிடைத்தாலும் இந்த பரிகாரத்திற்கு நான் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் குப்பைமேனி வேரை சாப நிவர்த்தி செய்யாமல் செடிகளிலிருந்து எடுக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். செடியை பிடுங்காமல் செடியின் பக்கவாட்டிலிருந்து குப்பைமேனி வேர் கிடைத்தால் அதை எடுத்து நம்முடன் வைத்துக்கொள்ளலாம். குப்பைமேனி இலை, குப்பைமேனி வேர் இந்த இரண்டுமே கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய அன்பை அதிகரிக்க பயன்படுத்தக்கூடிய ஒரு மூலிகைப் பொருள் ஆக சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இதனை முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -