எந்நேரமும் உங்களிடம் சண்டை போட்டு எரிச்சல் படும் உங்க வாழ்கை துணை உங்கள் வசம் ஆக ஏழு கிராம்பு உங்களிடம் இருந்தா போதும். கணவன் மனைவி அன்னோன்யமாக வாழ எளிய பரிகாரம்.

husband wife kirambhu
- Advertisement -

இல்லறம் என்பது எப்போது நல்லறமாக மாறும் என்றால் அந்த குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஒருவர் மேல் உண்மையான அன்போடு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அப்படி இல்லாமல் எப்போது பார்த்தாலும் ஒருவர் மேல் ஒருவர் எரிச்சல் அடைந்து கொண்டும், பார்த்தாலே சண்டை போட்டுக் கொண்டும், எதற்கெடுத்தாலும் வீண் விதண்டாவாதம் செய்து கொண்டிருந்தால் அந்த குடும்பத்தில் நிம்மதி இருக்காது என்பதோடு, அந்த குடும்பத்தில் வளரும் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்வி குறியாகி விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழும் கணவன் மனைவி கூட அன்னோன்யமாக வாழ இந்த எளிய பரிகாரத்தை பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது அதை என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கணவன் மனைவி சொல் பேச்சு கேட்டு நடக்க
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு தேவையான பொருள் கிராம்பு மட்டுமே ஆனால் இந்த கிராம்பை வாங்கும் முறை தான் மிகவும் முக்கியம். அதேபோல் இந்த பரிகாரத்தை நாம் செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று காலையிலே சீக்கிரமாக எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் தீபம் ஏற்றி வணங்கிய பின் அருகில் இருக்கும் மளிகை கடைக்கு செல்லுங்கள். அங்கே முதல் ஆளாக இந்த கிராம்பை வாங்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் வாங்கி பணத்தை கொடுப்பதற்கு முன்பாக வேறு ஒருவர் கொடுத்து விட்டால் இந்த பரிகாரம் பலனைத் தராது. எனவே இதை மட்டும் கவனமாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். கடையில் முதல் ஆளாக இதை வாங்க வேண்டும் உங்கள் பணம் தான் கடைக்கு முதல் பணமாக இருக்க வேண்டும்.

இப்படி வாங்கிய இந்த கிராம்பை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு சின்ன கிண்ணத்தில் ஏழு கிராம்பை மட்டும் தனியாக எடுத்து போட்டு வைத்து விடுங்கள். இதை எந்த அறையில் வேண்டுமானாலும் வைக்கலாம். அன்று மாலை 6:00 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு நீங்கள் வைத்த ஏழு கிராம்பில் இருந்து ஒரே ஒரு கிராம்பை மட்டும் கையில் எடுத்து உங்கள் கணவரின் பெயரை 21 முறை சொல்லி முடித்த பிறகு கடைசியாக கிராம்பை உங்கள் அருகில் கொண்டு வந்து ஓம் என்ற வார்த்தையை மூன்று முறை சொல்லி இதை வேறு ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்து விடுங்கள். இதையும் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம் ஆனால் யாரும் இதை தொடக் கூடாது.

- Advertisement -

அடுத்த நாள் புதன்கிழமை காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்த பிறகு நீங்கள் முதல் நாள் உங்கள் கணவரின் பெயரை சொல்லி வைத்த கிராம்பை மட்டும் எடுத்து வீட்டிற்கு வெளியே சென்று எரித்து விடுங்கள். இந்த கிராம்பு முழுவதுமாக எரிந்து விட வேண்டும் அதுவும் மிக முக்கியம். மீதம் இருக்கும் 6 கிராம்பையும் இதே போல் தினமும் மாலையில் விளக்கு வைத்த பிறகு பெயரை உச்சரித்து அடுத்த நாள் காலையில் எரித்து விடுங்கள். ஏழு நாட்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதையும் படிக்காலமே: படுக்கை அறையில் இந்த இரண்டு பொருள் ஒன்றாக வைத்து விட்டு உறங்கினால், உங்களைப் தகர்க்க நினைக்கும் எந்த எதிர்மறை சக்தியும் நீங்க இருக்கும் திசை பக்கம் கூட தலை வைத்து படுக்காது.

இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கிய ஒன்று இரண்டு நாட்களுக்குள்ளாகவே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரமானது கணவன் மனைவிக்கு மட்டுமல்லாது உங்கள் உயர் அதிகாரிகள் அல்லது சகோதரர்கள் யாரேனும் உங்கள் மேல் வெறுப்பாக இருந்தால் அவர்கள் உங்களிடம் மறுபடியும் பேச வேண்டும் சமாதானமாக இருக்க வேண்டும் என்றாலும் இதை செய்யலாம். ஆனால் நீங்கள் செய்யும் இந்த பரிகாரம் நியாயமானதாக மட்டும் இருந்தால் தான் பலன் உங்களுக்கு கிடைக்கும் இதையும் கவனத்தில் கொண்டு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -