மனைவியின் கையால், கணவருக்கு இந்த 1 பொருளை சாப்பிட கொடுத்தால் போதும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு என்பதே இருக்காது.

husbund-and-wife
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் புரிதல் இன்மை காரணமாக தான் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு என்பது அதிகமாக வருகிறது. மனம் விட்டு பேசி ஒருவர் மனதிற்குள், என்ன இருக்கிறது என்பதை இன்னொருவர் தெரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் மனதில் என்ன இருந்தாலும் அதை வெளிப்படையாக கணவரிடம் சொல்லிவிட வேண்டும். அதேபோல்தான் கணவரின் மனதிற்குள் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறதா, அதை வெளிப்படையாக மனைவியிடம் சொல்ல வேண்டும்.

அப்படி இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் மனதிற்குள்ளேயே பிரச்சனையை போட்டு புதைப்பதன் மூலமாகத்தான் ஒரு நாள் பூதாகரமாக பிரச்சனை வெடிக்கும். மனதில் பட்டதை பட்டனை வெளியில் கேட்கும் போது, முதல் முறை கஷ்டமாகத்தான் இருக்கும். போகப் போக இந்தப் பழக்கம் உங்களுடைய வாழ்க்கையை நல்ல முறையில் திசை திருப்பி விடும். ஆகவே அப்பப்போ சண்டையை அப்பப்போதே போட்டு முடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சில வீடுகளில் கணவன்மார்கள் தொழிலுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்று விட்டு வீடு திரும்பியதும், வீட்டிற்குள் நுழைந்ததும் சண்டை சச்சரவை ஆரம்பித்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் மனைவி ‘இவர் ஏன் தான் வேலையை விட்டு இவ்வளவு சீக்கிரம் வீடு திரும்புகிறாரோ’ என்று சிந்திக்கும் அளவிற்கு சண்டை நடக்கும். உங்களுடைய வீட்டில் இப்படிப்பட்ட பிரச்சனை இருக்கா.

உங்களுடைய கணவர் வீடு திரும்பியதும் அவர் கை கால் முகம் கழுவி வந்து அமர்ந்ததும் டீ காபிக்கு பதிலாக முதலில் இனிப்பு பலகாரங்கள் ஏதாவது கொடுங்கள். குறிப்பாக ஒரே ஒரு ஸ்பூன் தேனை, வீடு திரும்பிய கணவருக்கு முதலில் கொடுத்து விட்டால் உங்கள் கணவர் சத்தம் போடாமல் சண்டை பிடிக்காமல் அமைதியாக இருப்பார். ஒரு ஸ்பூன் தேனுக்கு இத்தனை மகத்துவமா என்று யோசிக்காதீங்க. நம்பிக்கையோடு வீடு திரும்பிய கணவருக்கு ஒரு ஸ்பூன் தேன் கொடுத்து தான் பாருங்களேன். உங்கள் கணவரும் இனிமையாக தேன் போல மாறிடுவாங்க. தேன் இல்லாத பட்சத்தில் இனிப்பு சுவை நிறைந்த எந்த பலகாரங்கள் வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக சில பேர் வீடுகளில் கணவன் மனைவிக்குள் கிரக சூழ்நிலையால் பிரச்சனை ஏற்படும். குறிப்பாக சனி பகவானால் கணவன் மனைவிக்குள் பிளவு ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு அப்படிப்பட்ட பிரச்சனை ஏதாவது இருந்தால் 8 இரும்பு மோதிரத்தை வாங்கிக் கொள்ளுங்கள். இரும்பு மோதிரம் என்றால், இரும்பை வளைத்து சின்ன சின்ன வளையங்கள் போல கடைகளில் விற்கும். அதை 8 என்ற எண் கணக்கில் வாங்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரில் நிறைய நல்ல தண்ணீரை ஊற்றி, இந்த தண்ணீரில் இந்த இரும்பு மோதிரத்தை போட்டு ஏதாவது ஒரு அலமாரியின் மேல் யார் கண்ணுக்கும் தெரியாமல் வைத்துவிட்டால் கூட போதும். வாரத்திற்கு ஒரு முறை உள்ளே இருக்கும் தண்ணீரை மட்டும் மாற்றி விடுங்கள். உள்ளே இருக்கும் இரும்பு வளையங்களை அப்படியே மீண்டும் அந்த தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளலாம். இரும்பு வளையங்களை புதுசாக மாற்ற வேண்டும் என்று அவசியம் இருக்காது. இப்படி செய்தால் வீட்டில் சனி பகவானால் உண்டாகும் சண்டை சச்சரவுகள் குறையும். நம்பிக்கையோடு மேல் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -