கணவன் மனைவி ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வரவில்லையா? பிரச்சினைகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கையில் இந்த 2 பொருளை வைத்துக் கொண்டு இப்படி செய்யுங்கள்!

couple-narasimmar-milagu
- Advertisement -

கணவன், மனைவி இருவருக்கும் விட்டுக்கொடுத்தல் என்கிற மனப்பான்மை வேண்டும். இதில் யார் பெரியவர்? என்கிற போட்டி, பொறாமை எல்லாம் இருந்தால் வாழ்க்கையில் இன்பம் என்பதே ஏற்படாது போய்விடும். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதில் கணவனுடைய ஆதரவு மனைவிக்கும், மனைவியுடைய ஆதரவு கணவனுக்கும் இருந்தால் தான் அந்த துன்பங்களை எல்லாம் எளிதில் சமாளிக்க முடியும். சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் அன்பு பெருக வழிபட வேண்டிய பரிகாரம் என்ன? இதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

marraige-couple

கணவன், மனைவி இருவருக்குள்ளும் அன்பு என்பது ஒரு காலகட்டம் வரை தான் இருக்கும். திருமணம் முடிந்த பின்பு படிப்படியாக அவை குறையத் தொடங்கும். ஒருவரை ஒருவர் மனம் ஒருமித்து வாழ ஆரம்பிக்கும் பொழுது எல்லாமே நன்றாகத் தான் இருக்கும். ஆனால் பல்வேறு பிரச்சனைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் பொழுது உண்மையான சுயரூபம் தெரிய வரும். அப்பொழுது தான் கணவன், மனைவி பிரச்சினைகளும் தலைதூக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

முதலில் பொறுமையாக ஒருவர் பிரச்சனையை இன்னொருவர் ஏற்றுக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். உங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து முன் வைப்பீர்கள். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் போகவும் மறுபடியும் அதை வைத்து வேறு சில பிரச்சனைகளும் வரும். எந்த ஒரு பிரச்சனையையும் அவரவர் இடத்தில் இருந்து தான் நாம் யோசிக்க வேண்டும். கணவன் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர் இடத்தில் நின்று, அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? என்பதை யோசிக்க வேண்டும். அதற்கு பிறகு தான் எந்த ஒரு முடிவையும் நீங்கள் எடுக்க வேண்டும்.

marraige

அதே போல் தான் மனைவியின் இடத்தில் நின்று மனைவி ஏன் இப்படி செய்கிறாள்? ஏன் இப்படி பேசுகிறாள்? என்று அவர்களிடத்தில் நீங்கள் இருந்தாள் என்ன செய்வீர்கள்? என்பதை சிந்திக்க வேண்டும். அதன் பிறகு தான் எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக எடுக்க வேண்டும். உங்கள் இடத்தில் நின்று யோசித்தால் எல்லாமே தவறாகத் தான் தெரியும். ஆனால் மற்றவர்களிடத்தில் நின்று யோசிக்கும் பொழுது உண்மை நிலை புரியும். அப்படியும் அவர்களிடம் நியாயமில்லை என்று தோன்றினால் காலப்போக்கில் அவர்கள் மீது வெறுப்பு உண்டாகத் தொடங்கும்.

- Advertisement -

அந்த வெறுப்பு இல்லற வாழ்க்கையில் துன்பத்தை ஏற்படுத்திவிடும். இத்தகைய துன்பத்தை ஏற்படாமல் தடுக்கவும், கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் நீக்கவும் கோரி நாம் வழிபட வேண்டிய தெய்வம் தான் லட்சுமி நரசிம்மர். லட்சுமி நரசிம்மர் இடம் வேண்டி வணங்கி எதை நீங்கள் கேட்டாலும் அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து உங்களுடைய இரு கைகளிலும் உப்பு மற்றும் மிளகு ஒரு டீஸ்பூன் எடுத்து இரண்டு கைகளிலும் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை கணவன், மனைவி இருவரும் சேர்த்துத் தான் செய்ய வேண்டும். தனித்தனியான நேரத்தில் கூட செய்து கொள்ளலாம்.

salt-with-pepper

நாரஸிம்ம மந்திரம்:
ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச

வெள்ளிக்கிழமையில் பூஜை அறைக்கு சென்று லட்சுமி நரசிம்மர் படத்தை வைத்து இந்த மந்திரத்தை உச்சரித்தவாறு கையில் உப்பு மிளகு கலந்த கலவையை வைத்து கொண்டு கைகளை இறுக்கமாக மூடி ஜபம் செய்வது போல அமர்ந்து கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு உங்கள் கைகளில் இருக்கும் உப்பு மிளகை யாருடைய கால்களிலும் படாதவாறு ஓரமாகப் போட்டு விடுங்கள். இப்படி இருவரும் செய்தால் நிச்சயம் காலப்போக்கில் உங்களுடைய பிரச்சனைகள் மாறத் துவங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். அன்பு அதே போல மறுபடியும் துளிர்க்கும்.

- Advertisement -