சுக்கிரனுக்கு தீபம் ஏற்றும் பொழுது இதை போட்டு ஏற்றுங்கள்! கணவன்-மனைவிக்குள் காலத்துக்கும் சண்டையே வராமல் இருக்கும்.

deepam-sukran
- Advertisement -

கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தால் அது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அவர்களுடைய குழந்தைகள் இதில் பெருமளவு மனதளவில் பாதிக்கப்படுவது உண்டு. என்றாவது ஒரு நாள் சண்டை, சச்சரவு வந்தால் பரவாயில்லை! அடிக்கடி இதே நிலை நீடித்தால் இருக்கின்ற நிம்மதியும் இழந்து விடுகிறது. தொடர்ந்து வீட்டில் பிரச்சனை இது போல் இருந்தால் உடனடியாக சுக்கிரனுக்கு இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் சண்டை வராமலிருக்க ஏற்ற வேண்டிய தீபம் என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கணவன் மனைவிக்குள் சதா சண்டை சச்சரவு என்று வந்து கொண்டே இருந்தால் வீடு நிம்மதி இழந்து போர்க்களம் ஆகிவிடும். சில வீடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகள் இருக்கும் பொழுது எவ்வளவு கோபம் வந்தாலும், அதை அடக்கி பிள்ளைகள் இல்லாத சமயத்தில் அதை வெளிப்படுத்துவார்கள். இது ஆரோக்கியமான குடும்பத்திற்கு மிகவும் அழகான ஒரு செயலாகும். ஆனால் பலரும் இதை கடைபிடிப்பது இல்லை. கோபம் வந்தால் சுற்றி இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய கண்களுக்கு தெரிவதில்லை. இதனால் தன் குழந்தை பாதிக்கப்படும் என்கிற அக்கறையும் இல்லாமல் போய்விட்டது.

- Advertisement -

எப்பொழுதும் கணவன் மனைவி இடையே நடக்கும் சண்டைகளை பெரியவர்கள் கண்முன் அல்லது நீங்கள் பெற்ற பிள்ளைகளின் கண்முன் நடப்பதை தவிர்க்க வேண்டும். மீண்டும் அந்த பிரச்சனை ஒன்றுமில்லாமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு எனவே தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்க சற்று உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதால் நிறைய பிரச்சினைகள் வருவது உண்டு. இவற்றை களைந்து கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்க, அன்யோன்யமும், அன்பும் பெறுக சுக்கிர பகவானை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும். சுக்கிரன் சுகபோக வாழ்க்கையை கொடுக்கக் கூடியவர். வசதி வாய்ப்புகள் மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய இவரை நவக்கிரக சந்நிதிக்கு சென்று ஒவ்வொரு வாரமும் நீங்கள் வழிபட்டு வர விலகி இருக்கும் கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும்.

- Advertisement -

சுக்கிரன் சுகத்தை கொடுத்தவர் என்பதால் கணவன் மனைவிக்குள் இருக்கும் இந்த நெருடல் நீங்கி, சுகம் உண்டாவதற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சுக்கிர பகவானுக்கு நெய் தீபமேற்றி வழிபட வேண்டும். சுக்கிரனுக்கு விளக்கு ஏற்றும் பொழுது புதிய அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும். பழைய அகல் விளக்குகளை மீண்டும் பயன்படுத்தி விளக்கு ஏற்றக்கூடாது. புதிய அகல் விளக்கு ஒன்று வாங்கி கற்கண்டு போட்டு நெய் ஊற்றி பஞ்சு அல்லது நூல் திரியிட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

சுக்கிர பகவான் தம்பதியருக்குள் இருக்கின்ற மனக்குறைகளை அகற்றி அவர்களை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்படி செய்து விடுவார். எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால் தான் முழு பலன் அளிக்கும். எனவே கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நீங்கும் என்கிற நம்பிக்கையோடு செய்ய வேண்டும். இதை தனித்தனியாகவோ அல்லது கணவன் மனைவி இருவரும் சேர்ந்தோ செய்யலாம். கணவன்-மனைவிக்குள் இருக்கும் புரிதல் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கும். எனவே நீங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் மனதை விட்டு உங்கள் பிரச்சனைகளை இருவருமாக பேசி தீர்த்து ஒரு முடிவுக்கு வந்து விடுங்கள். இல்லை என்றால் உங்களுடைய வாழ்க்கையே நரகமாகிவிடும்.

- Advertisement -