சித்தர்கள் சொன்ன ஜாதிக்காய் ரகசியம். இதை மட்டும் செய்தால் இனி கணவன் மனைவி இடையே சண்டைகளே வராது. அந்யோன்யம் மட்டுமே அதிகரிக்கும்

jadhikai
- Advertisement -

சித்தர்கள் கொடிய நோய்களுக்கான மருந்துகளை மட்டும் கொடுத்து செல்லவில்லை. முற்றும் அறிந்த ஞானிகளான சித்தர்கள் குடும்ப உறவில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான வழிபாடு மற்றும் வழிமுறைகளையும் கூறியுள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்படும் சண்டைகள் தீர்ந்து அவர்களிடையே அன்பும், வசியமும் அதிகரிப்பதற்கான வழியையும் கூறியுள்ளனர். அவ்வாறான வழி முறைகள் என்ன. இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sithar-compressed

சமூகத்தில் பலரும் திருமணமான சிறிது நாட்களிலேயே விவாகரத்து வேண்டி குடும்ப நல நீதி மன்றங்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணமாக அமைவது கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சந்தேகம் தான். திருமண பந்தம் எனும் வண்டி ஓடுவதற்கு அச்சாரமாக அமைவது நம்பிக்கைதான். அந்த பந்தம் விட்டுக் கொடுத்தல் என்ற சக்கரத்தின் மீது தான் பயணிக்கிறது. இப்படி நம்பிக்கையுடனும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் இருந்தால்தான் கணவன் மனைவி இடையே அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.

- Advertisement -

சந்தேகத்தைப் போக்க சித்தர்கள் காட்டிய வழி:
லவங்கம் ஒரு அற்புதமான வசிய பொருளாகும். இதனை மகாலட்சுமிக்கு படைத்து வணங்கி வந்தால் உங்கள் நிதிநிலைமை உயரும் அற்புதம் நடக்கும். சித்தர்கள் கூறக்கூடிய வசிய குறிப்புகளில் லவங்கம், ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய் இவைகள் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை அனைத்திற்கும் நேர்மறை எண்ணங்களை தன்னிடம் வசியப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

krambu

இப்பொழுது வசியம் என்பது ஒருவரை தன்னிடம் மயக்குவதற்காக செய்யும் செயல் போல் சித்தரித்துள்ளதால் வசியம் என்ற சொல் தற்போது தவறானதாக மாறியுள்ளது. ஆனால் உண்மையில் வசியம் என்பது ஒருவரிடம் நல்ல நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்காக செய்யப்படுவதாகும்.

- Advertisement -

கணவன் மனைவியிடையே வசியம் உண்டாக செய்ய வேண்டிய வழிமுறை:
ஒரு சிறிய நெல்லி குச்சி மற்றும் துளசி குச்சியை எடுத்துக்கொண்டு அவை இரண்டையும் ஒரு நூலினை வைத்து ஒன்றாக கட்டிக்கொள்ள வேண்டும். ஒரு வெற்றிலையில் சிறிதளவு மஞ்சள் மற்றும் குங்குமம் ஜாதிக்காய் வைத்து நன்றாக மடித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு பச்சை துணியில் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.

vethalai 3

இவ்வாறு இரண்டு மூட்டைகள் செய்து அவை ஒவ்வொன்றையும் கணவன் மனைவி இருவரும் தாங்கள் தூங்கும் தலையணைக்கு கீழே இருபத்தியோரு நாட்கள் வைத்து உறங்க வேண்டும்.

Jathikkai

கணவன் மனைவி இருவருமே இந்த பச்சை துணி மூட்டையை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு தூங்குவதற்கு முன் சிவன் மற்றும் பார்வதியை நினைத்து “தீர்க்க சுமங்கலி பவ” எனும் மந்திரத்தை சொல்லி மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

sivan

இவ்வாறு இருபத்தியோரு நாட்களும் அதனை வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலை வீட்டில் பூஜை செயது, அந்த பச்சை நிற முட்டைகளுக்கும் தூபம் காட்டி பூஜை செய்ய வேண்டும். இருபத்தியோரு நாட்கள் முடிந்ததும் அந்த மூட்டைகளை கடல், ஏரி என்று ஏதேனும் ஓடும் நீரில் கொண்டு சென்று போட்டு விட்டு, கையெடுத்துக் கும்பிட்டு, இனி எங்களிடம் இருந்த தீய சக்திகள் எங்களை விட்டு விலகி நாங்கள் இருவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும். என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இதனை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்யலாம். அல்லது எவரேனும் ஒருவர் மட்டும் கூட செய்யலாம்.

- Advertisement -