கணவனின் முன்னேற்றத்திற்கு பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்.

cow
- Advertisement -

நிறைய பேர் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு ஒரு சரிவு வரும். உதாரணத்திற்கு நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஆண்கள், வாழ்க்கையின் முன்னேற்றப்படியில் சென்று கொண்டிருக்கும் ஆண்களுக்கு, திருமணம் நடக்கும். உடனடியாக அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கி செல்லும். இதை யார் மனதையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை.

ஆனால் சில பேருக்கு திருமண வாழ்க்கையானது தோல்வியை கொடுத்து விடும். மனைவி வந்த நேரம் இவனுக்கு ஜாக்பாட் அடித்தது என்று சில பேர் சொல்லுவார்கள். மனைவி வந்த நேரம் இவனுக்கு துரதிஷ்டம் என்று சில பேர் சொல்லுவார்கள். அது மனைவி வந்த நேரம் கிடையாது. இவர்களுடைய ஜாதக கட்டத்தில் ஏற்படக்கூடிய சில மாற்ற நிகழ்வுகள் குடும்பத்தில் கஷ்டத்தை கொடுத்து விடும்.

- Advertisement -

நீங்க திருமணம் ஆகி போன பின்பு உங்களுடைய கணவருக்கு வாழ்க்கையில் ரொம்ப கஷ்டம் வந்திருக்கிறதா. அவரால் வாழ்க்கையில் முன்னேறவே முடியவில்லையா. கவலைப்படாதீங்க. உங்களுக்கு ஒரு பரிகாரம் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. எளிமையான பரிகாரம் தான். இந்த பரிகாரத்தை மனைவி செய்தால் போதும். கணவரது வாழ்க்கை செழிப்பாக மாறும்.

கணவர் முன்னேற்றத்திற்கு பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நாட்டு பசு மாடு கிடைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. நாட்டு பசு மாடு கிடைக்கவில்லை என்பவர்கள் சாதாரண பசுமாடிடம் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். ஒரு கோசாலைக்கு சென்றாலே நாட்டு பசு மாடுகள் உங்களுக்கு சுலபமாக கிடைக்கும். 11 நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பசு மாட்டிற்கு செய்ய வேண்டும். ஒரே பசுமாட்டை, 11 நாட்களுக்கும் பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இன்று முதல் நாள் என்று வைத்துக் கொள்வோம். பசு மாட்டுக்கு நெற்றியில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பசுமாடை வணங்கி பசுமாடை 19 முறை வலம் வர வேண்டும். பிறகு பசு மாட்டிற்கு வயிறு நிரம்ப உங்கள் கையால் தீனி கொடுக்க வேண்டும். இரண்டு கட்டு கீரை, இரண்டு வாழைப்பழம், கொஞ்சமாக வெல்லம், அரிசி மாவு கொடுத்தேன் என்று இருக்கக் கூடாது. ஒரு நாளைக்கு அந்த பசுமாடு பசியாற எவ்வளவு தீவனம் தேவையோ அதை உங்கள் கையால் வாங்கி கொடுங்கள். பெரிய அளவில் புல்லுக்கட்டுகள் வாங்கி கொடுத்தாலும் நல்லது.

இப்படியாக 11 நாள் பரிகாரம் செய்ய வேண்டும். 11 நாளும் பதினோரு நாட்டு பசுவுக்கு செய்ய வேண்டும். ஒரே பசுவுக்கு தயவு செஞ்சு செஞ்சுடாதீங்க. உங்களுடைய கர்மாவை எல்லாம் அந்த பசு எடுத்துக் கொள்ளும். பசுவிடம் இருக்கும் நேர்மறை ஆற்றலை உங்களுக்கு கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உங்களுடைய மொத்த நெகட்டிவ் எனர்ஜியையும் ஒரு பசுமாடால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பசுமாட்டிற்கு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். பதினோராவது நாள் பரிகாரம் நிறைவடையும் நாளில் கோ பூஜை செய்ய வேண்டும். அந்த கோமாதாவுக்கு தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து அந்த பசுவை பராமரிப்பவருக்கு உங்கள் கையால் வஸ்திர தானம் செய்து, பசுவுக்கு மாலை வாங்கி போட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கவும்.

பசுவுக்கு தீவனம் வாங்கிக் கொடுத்து வணங்கி உங்கள் பரிகாரத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய கணவரின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதில் இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனிக்கணும். சில பேர் இந்த தோஷத்தை கொண்டவர்கள் பசு மாட்டிற்கு உணவை அவர்களது கையால் கொடுத்தால், அந்த பசு வாங்காது.

இதையும் படிக்கலாமே: திருமண தடை விலக துர்க்கை வழிபாடு.

அந்த சமயத்தில் நீங்க விட்டுருங்க. 3 நாள் தொடர்ந்து இதேபோல செய்து வரும் பட்சத்தில் பசுமாடு உங்களுடைய உணவை வாங்கத் தொடங்கிவிடும். அதை நினைத்து கவலைப்படாதீங்க. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த குறிப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -