கணவனின் ஆயுள் அதிகரிக்க, கணவன் மனைவியும் சந்தோஷமாக இருக்க, பெண்கள் இந்த 3 விஷயங்களை தவறாமல் கடைபிடித்தாலே போதும்.

mangalyam
- Advertisement -

கணவன் மனைவி ஒற்றுமைக்கு, கணவனின் முன்னேற்றத்திற்கு, குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு, செல்வ செழிப்புக்கு, இப்படி ஒரு குடும்பத்தின் முழு சந்தோஷத்திற்கும் பொறுப்பு பெண்கள் மட்டும் தான். ஒரு வீட்டில் பெண்களுடைய நடவடிக்கையை வைத்து தான், அந்த வீட்டின் முன்னேற்றமும் அமையும். இதில் ஒரு சிறு துளி கூட சந்தேகம் கிடையாது. ஒரு குடும்பம் செல்வ செழிப்போடு வளர்கிறது என்றால் நிச்சயமாக அந்த வீட்டில் இருக்கும் பெண்ணும் அதற்கு ஒரு காரணமாக இருப்பாள். கணவன் செல்வ செழிப்போடு மேலும் மேலும் சம்பாத்தியத்தை பெறுகின்றான் என்றால், அதற்குக் காரணமும் அந்த வீட்டில் இருக்கும் பெண்களாகத்தான் இருப்பார்கள்.

ஒரேடியாக பெண்களை போற்றி புகழ்வதாக நினைக்க வேண்டாம். காலம் காலமாக நம்முடைய முன்னோர்கள் சொல்லி வந்த விஷயங்கள் தான் இவை. நாம் எதையும் புதுசாக சொல்லிவிட கிடையாது. அவர்கள் சொன்ன விஷயத்தை மறந்தவர்களுக்காக நினைவு கூறும் படியான ஒரு பதிவு இது என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

சரி பதிவிற்குள் செல்வோம். பெண்கள் தினம் தோறும் கடைபிடிக்க வேண்டிய அந்த மூன்று விஷயங்கள் என்னென்ன. குறிப்பாக கணவரின் ஆயுள் நீடிக்க கணவரின் முன்னேற்றத்திற்காக இதை நீங்கள் செய்தே தான் ஆக வேண்டும். குங்குமம், திருமாங்கல்யம், பூ. இந்த மூன்றும் பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு தெரியும். நம்முடைய சாஸ்திர சம்பிரதாயத்தின் படி பெண்கள் இந்த மூன்று பொருட்களையும் தெய்வமாக நினைத்து மதிக்க வேண்டும்.

தினமும் காலையில் பெண்கள் கண்விழித்தவுடன் தங்களுடைய திருமாங்கல்யத்தை எடுத்து பார்த்து கண்களில் ஒற்றிக்கொண்டு ‘சர்வ மங்களாதேவி போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். அப்போது சர்வ மகளா தேவி உங்களுக்கு தீர்க்க சுமங்கலி ஆசீர்வாதத்தை வழங்குவாள். சர்வ மங்களதேவி என்பவள், தன்னுடைய கணவனின் உயிரை மீட்டெடுக்க எமனிடம் போராடியவள் என்று புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக சர்வ மங்களா தேவியை தினமும் நினைவுகூர்ந்து திருமாங்கல்யத்தை கண்களில் ஒற்றிக் கொள்ளும் போது கணவரின் ஆரோக்கியம் மேம்படும் கணவனின் ஆயுள் நீடிக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக குளித்து முடித்து விட்டு பூஜையறைக்கு வந்து நெற்றியில் பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளும்போது வகுட்டிலும் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடி கட்டாயமாக உங்களுடைய திருமாங்கல்யத்திற்கும் தினமும் குங்குமம் வைக்க வேண்டும்.

தினமும் வீட்டில் பூ வாங்கி வைக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்து குளித்துவிட்டு பொட்டியிட்டுக் கொண்டு, தலையை சீவி சிறிதளவாவது பெண்கள் தலையில் பூ சூடிக்கொள்ள வேண்டும். தலையில் சூடிக்கொடுத்த பூக்களும் பெண்களுக்கு ஒரு சுபத்தை கொடுக்கக் கூடிய விஷயமாக சொல்லப்பட்டுள்ளது. கூடவே சிறிதளவு பூவை எடுத்து உங்களுடைய திருமாங்கல்யத்திலும் சொருகிக் கொள்ளுங்கள். இது லட்சுமி கடாட்சத்தை கொடுப்பதோடு கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கவும் ஒரு பரிகாரமாக இருக்கும்.

இதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரியவில்லை. மனைவியாகப்பட்டவள் தினமும் கணவனின் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்பதும் நம்முடைய சாஸ்திரத்தில் உள்ளது. காலை எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு கணவரின் காலில் விழுந்து வணங்க வேண்டும். பெரும்பாலும் இன்றைய பெண்கள் இதை செய்வது கிடையாது. இருப்பினும் வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்றோ அல்லது வருடத்திற்கு ஒரு முறை சுமங்கலி பூஜை, அதாவது வரலட்சுமி விரதத்தின் அன்றோ கட்டாயமாக கணவனின் காலில் விழுந்து மனைவி ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.

இது கணவருக்கும் நன்மை தரக்கூடிய விஷயம். குடும்பத்திற்கும் நன்மை தரக்கூடிய விஷயம். அந்த மனைவிக்கும் நன்மை தரக்கூடிய விஷயம். இந்த விஷயங்களை எல்லாம் எல்லோரும் கட்டாயம் கடைப்பிடித்து ஆக வேண்டும் என்று சொல்ல வரவில்லை. கடைபிடித்தால் நல்லது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -