இந்த தெய்வங்கள் உங்கள் கனவில் வந்தால், உங்கள் வாழ்க்கையில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

sivan
- Advertisement -

மனிதர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது கனவு வருவது என்பது இயல்பான ஒரு விஷயம்தான். இந்த கனவு எப்படி வருகிறது. எதனால் வருகிறது. நமக்கு வரக்கூடிய கனவுகள் பலிக்குமா பலிக்காதா, நாம் கண்டது கனவா இல்லை நிஜமா, என்று கனவை பற்றிய பலவிதமான குழப்பங்கள் நம்முடைய ஆழ்மனதில் இன்றும் இருக்கின்றது. ஒரு சில கனவுகள் நமக்கு நன்மை செய்யும். ஒரு சில கனவுகள் வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை உண்டு பண்ணும். எது எப்படியாக இருந்தாலும் சரி, எல்லா கனவுகளும், எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் பலிப்பது கிடையாது.

ஒரு சில கனவுகள் வந்தால் இன்னது பலன் என்று, நமக்கு சில ஆராய்ச்சியின் மூலம் சொல்லப்பட்டுள்ளது. அது ஆன்மீகம் அடிப்படையில் இருந்தாலும் சரி, அல்லது பொதுப்படையான விஷயங்களை வைத்து சொல்லப்பட்டிருந்தாலும் சரி. இதன் அடிப்படையில் நமக்கு வரக்கூடிய ஒரு சில கனவுகளுக்கான பலன் என்ன என்பதைப் பற்றிய அரிய தகவல்களைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கனவுகளும் அதன் பலன்களும்:
ஒருவருடைய கனவில் சிவனும் பார்வதியும் சேர்ந்து வந்தால் அவர்கள் வாழ்க்கையில் இல்லற வாழ்க்கை இனிமையாக போகின்றது. கணவன் மனைவி உறவு ஆயிசுக்கும் நல்லபடியாக தொடர போகிறது என்று அர்த்தம். திருமணம் ஆகாதவர்கள் கனவில், சிவன் பார்வதி வந்தால் அவர்களுக்கு மனதிற்கு பிடித்தபடி நல்லபடியான இல்லற வாழ்க்கை அமையப்போவது என்று அர்த்தம்.

சில பேருக்கு சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடுவது போல கனவு வரும். இப்படி ஒரு கனவு வந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் எதிரி தொல்லை அதிகரிக்க போகின்றது என்று அர்த்தம். வாழ்க்கையில் எதிர்பாராத சில சின்ன சின்ன சங்கடங்கள் வரக்கூடும் என்பதும் அர்த்தம். வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது. என்பதை உணர்த்துவதற்காக சிவபெருமான் உங்களிடம் சின்ன திருவிளையாடலை விளையாடி பார்ப்பார். பயப்படத் தேவையில்லை. சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடுவது போல கனவு வந்தால் நீங்கள் தினமும் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்து வாருங்கள். அவர் உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குவார்.

- Advertisement -

கீரிப்பிள்ளை கனவில் வந்தால் உங்களுடைய பணக்கஷ்டம் சரியாகப் போகிறது என்று அர்த்தம். கீரிப்பிள்ளையும் பாம்பும் சண்டை போட்டுக் கொள்வது போல கனவு வந்தால் பிரிந்த உறவுகள் ஒன்று சேரப் போகிறது என்று அர்த்தம். நீண்ட நாள் பகை ஒரு முடிவுக்கு வரப் போகிறது என்று அர்த்தம். உடல்நிலை சரியில்லாதவர்கள் கனவில் கீரிப்பிள்ளை வந்தால் அவர்கள் ஆரோக்கியத்தை பெறப் போகிறார்கள். நீண்ட நாள் கஷ்டப்பட்ட நோயிலிருந்து விடுபட போகிறார்கள் என்பது அர்த்தம்.

ஓநாய் நரி கனவில் வருவது அவ்வளவு சரியான விஷயம் அல்ல. உங்கள் குடும்ப உறவினர்கள் யாரோ இறப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. துக்க செய்தி உங்கள் செவிகளை எட்டும். ஆகவே இந்த கனவு வந்தவுடன் நீங்கள் பயப்பட வேண்டாம். இரவு கனவு கண்டு மனதில் குழப்பம் ஏற்பட்டு இருந்தால் மறுநாள் காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜையறையில் குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குடும்பத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு நிச்சயம் பெரிய கஷ்டத்தை கொடுக்க மாட்டான்.

இதையும் படிக்கலாமே: பொல்லாத கண் திருஷ்டியை பொடி பொடியாக்க ஒரு கைப்பிடி வெண்கடுக்கில் இதை போட்டு விடுங்கள். இனி ஊரே ஒன்றாக சேர்ந்து உங்களை பார்த்து கண் வைத்தாலும் ஒன்றும் ஆகாது

இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாம் பொதுப்படையாக ஜோதிடத்தின் அடிப்படையில் நமக்கு சொல்லப்பட்டுள்ளவை. ஆகவே இது சில பேருக்கு நடக்கும். சில பேருக்கு நடக்காமலும் இருக்கும். அது அவரவர் சொந்த ஜாதகத்தை பொறுத்தது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -