கடன் தீர அரச மர பரிகாரம்

arasa mara valipadu
- Advertisement -

கடன் இல்லாத நபர்கள் யாரும் இல்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகை அது சிறிய அளவாக இருந்தாலும் சரி பெரிய அளவாக இருந்தாலும் சரி வாங்க கூடிய சூழ்நிலையும் நிர்பந்தமும் அனைவருக்கும் ஏற்படத்தான் செய்யும். அப்படி ஏற்பட்ட அந்த சூழ்நிலையில் இருந்து உடனுக்குடன் வெளியில் வந்து விடுவது தான் புத்திசாலித்தனம். அவ்வாறு வெளியில் வர முடியாமல் அதை தொடர்ந்து கொண்டு இருந்தாலும் மேலும் பல கடன்களை வாங்கிக் கொண்டு இருந்தாலும் அந்த கடன் பிரச்சினையால் பெரிதும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் அரச மரத்தை எவ்வாறு வழிபட்டால் கடன் பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக கடன் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கும் நபர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானையும் துர்க்கை அம்மனையும் ராகு காலத்தில் வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் செவ்வாய் பகவானுக்குரிய துவரம் பருப்பை தானமாக தருவதும் துவரம் பருப்பில் தீபம் ஏற்றி வழிபடுவதும் கடன் நிவர்த்தி செய்வதற்குரிய வழியை காட்டும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதை தவிர்த்து நாம் கடனை அடைப்பதற்காக நம்முடைய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இப்படி நாம் நம்முடைய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது தாந்த்ரீக ரீதியாக பரிகாரங்கள் செய்தோம் என்றால் அந்த பரிகாரங்களுக்கு விரைவிலேயே பலன் கிடைக்கும்.

மரங்களுக்கெல்லாம் அரசனாக திகழக்கூடியது தான் அரசமரம். இந்த அரச மரத்தில் அனைத்து தெய்வங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் குடியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த அரச மரத்தடியில் தான் விநாயகப் பெருமானையும், ராகு கேது போன்ற நாக சிலைகளும் வைத்து வழிபடுவார்கள். அப்படிப்பட்ட அரச மரத்தை நாம் பரிபூரணமாக நம்பி வழிபடும் பொழுது நம்முடைய கடன் பிரச்சனையும் தீரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தெய்வங்கள் இருக்கும் மரமாக இருந்தாலும் சரி தெய்வங்கள் இல்லாத மரமாக இருந்தாலும் சரி இந்த மரத்தை நாம் சுத்தம் செய்து நம்முடைய கைகளினால் நீரை ஊற்றி இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து இந்த மரத்தை 21 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வந்த பிறகு அந்த மரத்தின் அடியிலேயே அமர்ந்து கொண்டு குறைந்தது ஐந்து நிமிடமாவது நம்முடைய வாழ்வில் இருக்கக் கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்க வேண்டும். கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த வழிபாட்டை நாம் காலை 6 மணிக்கு முன்பாகவே செய்து விட வேண்டும். அதிலும் குறிப்பாக ஞாயிறு, திங்கள், வியாழன் இந்த மூன்று கிழமைகளும் கண்டிப்பான முறையில் அரச மரத்தை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு மற்றும் தம்பதி ஒற்றுமை அதிகரிக்க வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக வழிபாட்டில் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டு கடன் பிரச்சனையில் இருந்து வெளிவரலாம்.

- Advertisement -