அம்மன் மடியில் காணிக்கையாக இதை வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஆடி மாதம் முடிவதற்குள் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

amman2
- Advertisement -

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இந்த ஆடி மாதத்தில் அம்மன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நாம் வேண்டிய வரங்களை அள்ளி தந்து விடுவாள். அந்த வரிசையில் வீட்டில் மங்களகரமான, சுப காரியங்கள் நடப்பதில் தடை இருந்தால், தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று அம்மனை எப்படி வழிபாடு செய்வது, என்பதைப் பற்றிய ஒரு சுலபமான ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய வேண்டுதலுக்கு காணிக்கையாக நாம் முடிந்து வைக்கக்கூடிய ஒரு ரூபாய்க்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. மனநிறைவே இல்லாமல் நம்பிக்கையே இல்லாமல், ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஆடம்பரமான முறையில் பிரார்த்தனைகளை செய்வதைவிட, நம்பிக்கையோடு வெறும் ஒரு ரூபாய் காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்தினால் போதும். நம்முடைய வேண்டுதல் கூடிய விரைவிலேயே நிறைவேறிவிடும் என்று, நமக்கு நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

இதனடிப்படையில் நம்பிக்கையோடு நீங்களும் உங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனை செய்துகொண்டு, அம்மன் மடியில் காணிக்கையை வைக்க வேண்டும். ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 11 ஒரு ரூபாய் நாணயங்களை, வைத்துவிட்டு முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். முடிச்சுப் போடும் போது ஏதாவது ஒரு பிரார்த்தனையை மனதார ஆழமாக நினைத்துக் கொண்டு முடிச்சு போடவேண்டும். அம்மனையும் குலதெய்வத்தையும் நினைத்து முடிச்சு போடுங்கள்.

one rupee

இந்த ஆடி மாதம் முடிவதற்குள் உங்கள் வீட்டின் அருகில் எந்த அம்மன் கோவில் இருந்தாலும் சரி, அந்த அம்மன் கோவிலுக்கு, நீங்கள் முடிந்து வைத்த காணிக்கையை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். இந்த காணிக்கையை அம்மனுடைய மடியில் வைத்துவிட சொல்லுங்கள். அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகர், அந்த காணிக்கையை அம்மனுடைய மடியில் செலுத்தி விடுவார். அல்லது பாதங்களில் வைத்து விடுவார்.

- Advertisement -

அதன் பின்பு அம்மனுக்கு தீப ஆரத்தி காண்பிக்கப்படும். அந்த சமயம் முழுமனதோடு உங்களுடைய வேண்டுதலை அம்பாளிடம் சொல்லுங்கள். அம்பாளை மனநிறைவோடு வழிபாடு செய்துவிட்டு, நீங்கள் செய்த வேண்டுதல் நிச்சயம் இந்த ஆடி மாதத்துக்குள் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு, மீண்டும் வீடு திரும்பிவிட வேண்டும். அவ்வளவு தான். உங்களுடைய பிரச்சனையை நிச்சயம் அந்த அம்பாள் பார்த்துக் கொள்வாள்.

amman

நீங்கள் அம்மனிடம் வைத்த வேண்டுதலை இந்த ஆடி மாதம் முடிவடைவதற்குள் நிச்சயம் நிறைவேற்றி தந்து விடுவாள். அப்படி முடியாதபட்சத்தில், அடுத்து வரக்கூடிய ஆடி மாதத்திற்க்குள்ளவது உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் நடந்தே தீரும் என்ற முழு நம்பிக்கையோடு, அந்த அம்பாளை வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -