உங்களையும், உங்கள் வீட்டையும் பீடை பிடிப்பதற்கு முதல் காரணம் இது தான். இந்த தவறை மட்டும் எப்போதும் ஒரு வீட்டில செய்யவே கூடாது.

cry
- Advertisement -

ஒரு வீட்டில் செய்யவே கூடாத தவறுகள் என்று நிறையவே உள்ளது. அந்த வரிசையில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் துக்கங்கள் துயரங்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருக்க கூடாது. முதலில் வீட்டில் தரித்திரம் பிடிப்பதற்கு காரணம் கண்ணீர்தான். உங்கள் வீட்டில், உங்கள் கஷ்டத்தை நினைத்து நீங்கள் அழுது கொண்டு இருந்தாலும் உங்கள் வீட்டிற்கு தரித்திரம். அடுத்தவர்களுடைய கஷ்டத்தை வந்து யாராவது ஒருத்தர் உங்கள் வீட்டில் சொல்லி அழுது விட்டு சென்றாலும், அந்த தரித்திரம் உங்களை தான் பிடிக்கும். இந்த இரண்டு தரித்திரத்தையும் நம் வீட்டிலிருந்து எப்படி விளக்குவது.

sad-crying2

கண்ணீரால் வந்த தரித்திரத்தை தண்ணீரால் தான் விளக்க முடியும். குடும்பத்தில் வந்த ஏதோ ஒரு பிரச்சனையால் நீங்கள் அழுது கொண்டே இருந்து விட்டீர்கள். அதன் பின்பு உங்களுக்கே மனது சரியில்லை. வீட்டை பீடை பிடித்தது போல உள்ளது. என்ன செய்யலாம்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் உங்களுடைய முகத்தை பார்த்தால், உங்களுடைய முகம் பிரதிபலிக்கும் அல்லவா. அவ்வாறு முதலில் உங்களுடைய முகத்தை இரண்டு நிமிடங்கள் தண்ணீரில் நீங்களே பார்க்க வேண்டும். கண்ணீரால் ஏற்பட்ட தரித்திரம் இந்த தண்ணீரால் நீங்கிவிடும். உங்கள் முகம் பார்த்த அந்த தண்ணீரை கொண்டு போய் கொட்டி விட கீழே கொட்டிவிட வேண்டும். அந்தத் தண்ணீரை வேறு எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தக்கூடாது.

அதன்பின்பு அன்றையதினம் மஞ்சள் கலந்த தண்ணீரில் நீங்கள் குளித்துவிட வேண்டும். உங்களுடைய வீட்டையும் சுத்தமாக துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வீட்டில் மணக்க மணக்க சாம்பிராணி வத்தி போட வேண்டும். குறிப்பாக குங்குலியம் சேர்த்த சாம்பிராணியை போட்டு விட்டால் போதும் உங்கள் வீட்டை பிடித்த தரித்திரம் அனைத்தும் நீங்கிவிடும்.

- Advertisement -

கூடவே கொஞ்சமாக கோமியத்தை வாங்கிட்டு வந்து அதில் மஞ்சள் தூளை கலந்து அந்த தண்ணீரை உங்களுடைய தலை மீதும் தெளித்து கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டு மூளை மூடிக்கொள்ளும் தெளித்து விடுங்கள். யாராவது உங்கள் வீட்டில் வந்து கஷ்டத்தை சொல்லி விட்டு அழுது சென்றாலும், மேல் சொன்ன இந்த விஷயங்களை நீங்கள் செய்து விடுங்கள் உடனடியாக.

dhupam

இல்லை என்றால் அவர்களுடைய கஷ்டம் உங்களைத் தொற்றிக்கொள்ளும். அவர்களுடைய கஷ்டத்தை கேட்டு வாடிய உங்கள் முகத்திலும் தரிதிரம் இருக்கும். சுலபமான இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -