கண் திருஷ்டி தீய சக்தி விலக

glass of water hall
- Advertisement -

ஒரு மனிதனை முன்னேறவே விடாமல் செய்யக்கூடிய தீய சக்திகளில் முதலாவதாக சொல்லப்படுவது கண் திருஷ்டி தான் எப்பேற்பட்ட பிரச்சனைகளை கூட எளிதில் தூக்கி வீசி விடும் மனிதனால் இந்த கண் திருஷ்டியில் இருந்து மட்டும் தப்பிக்கவே முடியாது. கண் திருஷ்டியானதுஅத்தனை சக்தி வாய்ந்தது.

ஆகையால் தான் நம் முன்னோர்கள் கூட கல்லடியில் இருந்து கூட தப்பித்து விடலாம் கண்ணடி பட்டால் தப்பிக்க முடியாது என்று சொல்லி வைத்தார்கள். அப்படியான மோசமான இந்த கண் திருஷ்டி நம் இல்லத்தை தாக்கி விட்டால் போதும். அரசன் கூட ஆண்டியாகி விடுவான்.

- Advertisement -

குடும்பத்தில் அடிக்கடி சண்டை வருவதும், சம்பாதிக்கும் பணம் வீண் செலவாகி கரைந்து கொண்டே இருப்பதும், வீட்டில் உடல் நல கோளாறு வந்து கொண்டே இருப்பது, தொழிலில் நஷ்டம் என அடி மேல் அடி ஏற்படுத்தி நம்மை ஒன்றும் இல்லாமல் செய்து விடும். இப்படியான கண் திருஷ்டி நீங்க ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் எளிமையான ஒரு பரிகாரத்தை பார்க்கலாம்.

கண் திருஷ்டி தீய சக்தி எதிர்மறை ஆற்றல் நீங்க

இந்த பரிகாரத்தை செய்ய நாள் மிகவும் முக்கியம். இதை ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை செவ்வாய்க்கிழமை இந்த மூன்று கிழமைகள் செய்ய வேண்டும். இதில் சனிக்கிழமை மிகவும் உகந்த நாளாக சொல்லப்படுகிறது. இதை தவிர மற்ற நாட்கள் செய்யக்கூடாது. மீறி செய்தால் இதற்கான பலன் எதிர்வினையாக மாறக் கூடிய அபாயம் உண்டு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அதே போல மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் இதை செய்யலாம். மற்ற திதிகளில் செய்யக் கூடாது. இதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாளும் திதியும் மிகவும் முக்கியம். நம் வீட்டின் முன்னோர்களை கூர்ந்து கவனித்தால் தெரியும் இது போல கண் திருஷ்டிகள் சுற்றி போட என்று ஒரு குறிப்பிட்ட நாளை வைத்திருப்பார்கள். அந்த நாளை தவிர மற்ற நாளில் அதை செய்ய மாட்டார்கள். அதே போல் தான் இந்த பரிகாரமும்.

இந்த பரிகாரத்தை செய்ய விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து முடித்த பிறகு ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு கல் உப்பு அரை ஸ்பூன் மஞ்சளையும் சேர்த்து நன்றாக கலந்து வரவேற்பு அறையில் வைத்து விடுங்கள். நீங்கள் கலக்கும் இந்த தண்ணீர் தரையில் சிந்தக் கூடாது. ஆகையால் கவனமாக குழந்தைகள் கை படாத இடமாக பார்த்து மேலே வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதை வைக்கும் நாள் அன்று இரவு 9 மணிக்கு மேல் நீங்கள் சாப்பிட்டு முடித்த பிறகு இந்த தண்ணீரை கொண்டு வீட்டு வாசலில் நின்று தெருவில் ஊற்றி விட வேண்டும். அதன் பிறகு வீட்டிற்குள் வரும் போது கை கால் முகம் எல்லாம் அலம்பி கொண்டு அந்த டம்ளரையும் சுத்தம் செய்து விட்டு வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் வளையல் அணியும் முறை

இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறையாற்றல் தீய சக்திகள் போன்றவை நீங்குவதுடன் நம் குடும்பத்தாருக்கும் நம் வீட்டிற்கும் ஏற்பற்றுக்கும் கண்திருஷ்டிகள் அறவே நீங்கி விடும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. கண் திருஷ்டி நீங்க இது ஒரு எளிமையான அதே நேரத்தில் சக்தி வாய்ந்த பரிகாரமாக கருதப்படுகிறது. இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -