உங்களை வாழ விடாமல் கண் திருஷ்டி துரத்தி துரத்தி அடிக்கிறதா? வீட்டிற்குள் ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு இப்படி வையுங்கள் போதும்.

lemon-kula-dheivam
- Advertisement -

மற்றவர்களைப் போல நாம் ஒன்றும் ஆஹா, ஓஹோவென ஆடம்பரமான வாழ்க்கையை கூட வாழ மாட்டோம். ஏதோ நமக்கு வரக்கூடிய வருமானத்தை வைத்து சிக்கனமாக செலவு செய்து, சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனால் அது கூட அடுத்தவர்களுக்கு பொறுக்காது. நம்முடைய அக்கம்பக்கம் வீட்டில் இருப்பவர்களுக்கும் நம்முடைய சொந்த காரர்களுக்கும் அதுவே கண்களை உறுத்தும். இவர்களுக்கு வந்த வாழ்வைப் பாரு, வாங்குற சம்பளம் கொஞ்சம். ஆனால், வாழ்வது ராஜ வாழ்க்கை. எப்படித்தான் இவர்கள் இப்படி சந்தோஷமாக இருக்கிறார்களோ. என்று கண்களாலேயே சுட்டு எரித்து விடுவார்கள். சந்தோஷமாக நம் குடும்பத்தோடு ஒரு சினிமாவுக்கு கூட போயிட்டு வரமுடியாது. ஒரு விஷேஷங்களைக் கூட கொண்டாடவும் முடியாது. உடனடியாக அடுத்து ஏதாவது ஒரு கஷ்டம் வந்து விடும். காரணம் நம்மை சுற்றி இருப்பவர்களின் கண் பார்வை.

இதிலிருந்து தப்பிக்க என்ன செய்வது. ரொம்ப ரொம்ப சுலபமான ஒரு தாந்திரீக முறையை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரு எலுமிச்சம்பழம், ஒரு மண் பானை இருந்தால் போதும். சிறிய அளவில் குடுவை போல இருக்கக் கூடிய ஒரு மண் பானையை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே பாதி அளவு கல் உப்பு நிரப்பிவிட்டு, எலுமிச்சம்பழத்தை உள்ளே போட வேண்டும். இந்த பரிகாரத்தை பூஜை அறையில் செய்ய வேண்டும்.

- Advertisement -

பூஜை அறையில் அமர்ந்து கொண்டு முதலில் வலது உள்ளங் கைகளில் கல் உப்பை எடுத்து குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி, உங்கள் குடும்பத்தை கண்திருஷ்டியிடம் இருந்தும், கெட்ட ஆற்றலிடம் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, அந்தக் கல் உப்பை குடுவையில் முதலில் போட்டு விடுங்கள்.

அதன் பின்பு எலுமிச்சம்பழத்தை வலது உள்ளங் கைகளில் எடுத்து வைத்துக்கொண்டு குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து விட்டு நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பாக அந்த எலுமிச்சம் பழம் இருக்க வேண்டும் என்று, அந்த எலுமிச்சம்பழத்தில் உங்கள் குலதெய்வமே வந்து அமர வேண்டும் என்று மனதார சொல்லி, முடிந்தால் வாயார சொல்லி எலுமிச்சம் பழத்தையும் குடுவையில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த குடுவைக்கு மேலே ஒரு வெள்ளை காட்டன் துணியை வைத்து ஒரு நூலால் கட்டி, தயார் செய்த குடுவையை அப்படியே எடுத்து வரவேற்பறையில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விட வேண்டும். அவ்வளவு தான். இந்த கல் உப்பும், இந்த எலுமிச்சம்பழமும் அடுத்தவர்களுடைய கண்திருஷ்டியில் இருந்து உங்கள் குடும்பத்தையும் உங்கள் வீட்டையும் பாதுகாக்கும்.

மாதத்திற்கு ஒருமுறை உள்ளே இருக்கும் எலுமிச்சம்பழத்தை கால் படாத இடத்தில் செடிகொடிகளுக்கு கீழ் பக்கமாக போட்டுவிடுங்கள். கல் உப்பை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை சிங்கில் ஊற்றி விடுங்கள். மீண்டும் அந்தப் பானையில் இதேபோல வேண்டுதலை வைத்து கல் உப்பையும் எலுமிச்சம் பழத்தையும் வைத்து கொள்ள வேண்டும். யாருடைய பொறாமை கண்ணும் உங்களை எதுவும் செய்யாது. அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியும் உங்கள் குடும்பத்தை தாக்காது. நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயம் கைமேல் பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -